Saturday, August 31, 2013

இதயத்தை மாற்றின வேதாகமம்


சந்திரனில் வைக்கப்பட்ட முதல் வேதாகமம்


வேதாகமத்தின் அதிசய சாதனைகள்


கையால் எழுதப்பட்ட மிகப்பெரிய வேதாகமம்,


உலகின் மிகச்சிறிய வேதாகமம்


நீரில் நனையாத வேதாகமம்


ஒவ்வொரு வேத வசனமும் ஒவ்வொரு பகுதியில்


உலகின் மிகபெரிய வேதாகமம்


கடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்

கடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்
"நவீன கால‌ கடல் வழிகளின் தந்தை" என அழைக்க‌ப்படும் மேத்யூ மவுரிக்கே (Matthew Fontaine Maury (1806 – 1873)) அவர் சமுத்திரத்தின் வழிகளை கண்டுபிடிக்க‌ ஒரு உந்துகோலாக அமைந்தது வேதபுத்தகம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? வேதாகமத்தை மிகவும் நேசித்த ஒரு நபர் அவர். ஆரம்ப காலத்தில் அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த போது அவர் ஒரு விபத்தில் அகப்பட்டு தன் இடது காலை இழந்துவிட படுக்கையியேலே வெகுகாலம் கழித்தார். மேத்யூ மவுரி அவ்வாறு படுக்கையில் இருந்த போது வேதபுத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது சங்கீத புத்தகம் 8‍‍ம் அதிகாரத்தில் "Paths of the Seas" என இருப்பதை அவர் படிக்க நேரிட்டது. ("The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth through the paths of the seas" Psalms 8:8 ). 


அப்படியானால் சமுத்திரங்களிலும் வழிகள் இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அவர் முற்றிலும் குணமடைந்த‌ பின்பு கடல் வழிகளை பற்றி பல ஆய்வுகள் செய்து அதில் மிகப்பெரிய வல்லுனர் ஆனார். அதனால் அவரை "Pathfinder of the Seas" என்றும் "Father of Modern Oceanography and Naval Meteorology" என்றும் , "Scientist of the Seas" என்றும் அழைப்பர். The Physical Geography of the Sea (1855) எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார். இன்றைக்கும் விர்ஜீனியாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அவர் வடிவ‌ சிலையை ஒரு வேதாகமத்தின் கூட‌வே சேர்த்து வடிவமைத்துள்ளனர். அவ்வளவாய் அவர் வேதாகமத்தை நேசித்தார்.உலகத்துக்கும் ஆசீர்வாதமாய் அமைந்தார். 

தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது... ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். தானியேல் 2:20-22

Wednesday, August 21, 2013

இயேசுவை நாம் எங்கே காணலாம்?

கர்த்தருக்கென்று உண்மையாய் ஊழியம் செய்த ஒரு பெண்மணி வெகுநாளாய் 'ஆண்டவரே நான் உம்மை பார்க்க வேண்டும் . தரிசனத்திலோ சொப்பனத்திலோ உம் முகத்தை காண் வேண்டும்' என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது அனுதின ஜெபத்தில் இது ஒரு பகுதியாகவே இருந்தது. ஒருமுறை அவர்கள் வெளி மாநிலத்திற்கு ஊழியத்தினிமித்தம் சென்றிருந்தார்கள். அச்சமயம் தன் குடும்பத்தினரோடு ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சாலையில் வேனில் சென்று கொண்டிருந்தார்கள்.
.
அப்போது வழியருகே ஒருவர் சரியான ஆடையின்றி படுத்திருப்பதை கண்டு அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் காரை நிறுத்தும்படி கூறினார்கள். உடனிருந்தோர், 'இம்மனிதன் குடித்துவிட்டு படுத்திருக்கலாம், நமக்கு ஏன் வீண் வம்பு, போகலாம்' என்றனர். இருப்பினும் இவ்வூழியரது வற்புறுத்தலால் காரை நிறுத்தி அவரிடம் விசாரித்தபோது அவர் மிகவும் உடல் நலக்குறைவினால் கவனிப்பாரற்று படுத்திருப்பது தெரிய வந்தது. அவரை கனிவோடு விசாரித்து விட்டு தங்களிடமிருந்த உணவையும், தண்ணீரையும் கொடுத்துவிட்டு சென்றார்.
.
ஒரு சில நாட்களுக்கு பின் தன் ஜெப வேளையிலே ஆண்டவரே, நான் உம்மை எப்படியாவது பார்க்க வேண்டும். அதுவே என் உள்ளத்தின் வாஞ்சை என ஜெபித்தார்கள். அந்த நொடிப் பொழுதில் 'இரண்டு தினங்களுக்கு முன்பு என்னை வெளிப்படுத்தினேனே, என்னை நீ பார்த்தாயே' என்று ஆண்டவர் உணர்த்துவதைக் கண்டார். எப்போது ஆண்டவரே என்ற போது, 'அன்று சாலையோரத்தில் உன்னிடம் உணவு பொட்டலத்தையும் தண்ணீரையும் பெற்றுக் கொண்டது நான்தான்' என உணர்த்தினார். அப்போது மத்தேயு 25-ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட சம்பவம் அவ்வூழியரின் நினைவிற்கு வந்தது. அந்த வேதப்பகுதியை நாம் தியானிக்கலாம்.

Sunday, August 4, 2013

இரட்சிப்பின் வழி

ஒரு முறை பில்லி கிரகாம் அவர்கள் இரட்சிப்பைக் குறித்து ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்கினார். அவர் சொன்னது, 'அநேகர் நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், சபை கூடுதலை விசுவாசிக்கிறேன் இது போதாதா நான் பரலோகம் போவதற்கு? என்று வாதிடுகிறார்கள். இல்லை, இது ஒரு போதும் போதாது, இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவன் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விமான டிக்கெட் வாங்கி, குறிப்பிட்ட நேரத்திற்கு ஏர்போர்ட்டும் போய் சேர்ந்து விடலாம். அந்த விமானம் மிகவும் உயர்ரக விமானம். அது அவனை சரியாக அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமேயில்லை.
.
எல்லாம் ரெடியாக இருக்கிறது. விமானம் புறப்பட சில நிமிடங்களே இருக்கிறது. அவனுடைய பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள். ஆனால் அவனோ விமானத்தில் ஏறாமல் காலம் தாழ்த்தி கொண்டே இருக்கிறான். விமானத்தின் கதவு மூடப்படுகிறது, விமானம் தளத்தில் ஓடி, உயரே எழும்பி பறக்க ஆரம்பிக்கிறது. அந்த மனிதன் விமானத்தின் மேல், அது தன்னை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் அதில் அவன் போய் ஏறவில்லை. எல்லாமே தயாராக இருந்தும், அவன் அதில் போய் ஏறவில்லை. அதனால் அவனால் தான் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியவில்லை. அதுப் போலத்தான் ஒரு வேளை நீங்கள் இயேசுகிறிஸ்துவின் மேலும், வேதத்தின் மேலும், அவருடைய வருகையின் மேலும் நம்பிக்கை வைக்கலாம், ஆனால் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால், உங்கள் நம்பிக்கை எல்லாமே வீண்' என்று கூறினார்.

இளைப்பாறுதல் தரும் தேவன்

ஒரு குரங்கு கானகத்தில் தன் பாட்டுக்கு மரங்களில் தாவி தாவி விளையாடிக் கொண்டு அங்கு பழுக்கும் பழங்களை சாப்பிட்டு சுகமாக வாழ்ந்து வந்தது. அப்படி ஒரு நாள் மரங்களுக்கு மரம் தாவிக் கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் முன் வந்து நின்றது. அங்கு ஜன்னலில் பார்த்தபோது, ஒரு தட்டில் சில ஆப்பிள் பழங்கள் வைத்திருப்பதைக் கண்டது. உடனே தன் கையை நீட்டி அந்த பழங்களில் மூன்று, நான்கு பழங்களை எடுத்துக் கொண்டது. பின் அதை கைகளில் பிடித்துக் கொண்டே காட்டிற்கு வந்து சேர்ந்தது.
.
அதை கடிக்க முற்பட்டபோது, அதனால் கடிக்க முடியவில்லை. அது கட்டையினால் செய்யப்பட்ட ஆப்பிள்கள். ஆனால் அந்த குரங்கால் அந்த ஆப்பிள்களை கீழே தூக்கிப் போட முடியவில்லை. மற்ற குரங்குகள் வந்து அதை பிடுங்க பார்த்தபோது, அது தன்னிடம் அந்த பழங்களை இழுத்துக் கொண்டு, மற்ற குரங்குகளுக்கு காண்பிக்கவும் மறுத்தது.
.
அந்த பழத்தை எடுத்துக் கொண்டு அதனால் மரத்திற்கு மரம் தாவ முடியவில்லை. பழத்தை கீழே வைத்தால் மற்ற குரங்குகள் வந்து அதை எடுத்துக் கொண்டு விடுமோ என்று பயந்து, தன் கைகளிலேயே அவற்றை வைத்து கொண்டு, வேறு பழங்களையும் சாப்பிட முடியாமல், பசியால் தவித்தது. கையிலிருந்த பழங்களை அதனால் கீழேப் போட அதற்கு மனம் வரவில்லை.

. ஆனாலும் அந்த பழங்களை கீழே போடாமலும், தளர்ந்து, பசியினால் வாடி, சந்தோஷத்தை எல்லாம் இழந்து அந்த குரங்கு தவித்தது. பக்கத்தில் இருந்த மரத்திலிருந்து பழ வாசனை அதனுடைய மூக்கை துளைத்தது. ஆரம்பத்தில் அந்த வாசனை வந்தும் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்த குரங்கு, இப்போது மிகவும் தளர்ந்துப் போன நிலையின் கடைசியில், கையில் கனத்துக் கொண்டிருந்த அந்த கட்டை பழங்களை கீழேத் தூக்கிப் போட்டு விட்டு, அந்த பழ மரத்தில் தாவி ஏறி, தன் மனம் விரும்பும் மட்டும் பழங்களை சாப்பிட்டு சந்தோஷித்தது.

மன்னிப்பு என்கிற கடன்

ஒரு செல்வந்தர் ஒருவரிடம், ஒரு மனிதன் பத்து இலட்சம் ரூபாய்கள் கடன்பட்டிருந்தான். அந்த செல்வந்தர் தன் கணக்குவழக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தபோது, இந்த மனிதன் அநேக நாட்களாக தனக்கு பணத்தை திரும்ப தரவில்லை என்பது தெரிய வந்தது. உடனே அந்த மனிதனுக்கு அவர் ஆள் விட்டனுப்பி, 'என் பணத்தை கொடுத்து முடி' என்று கட்டளையிட்டார். அவனோ, 'ஐயா, என்னால் முடியவில்லை, நான் எப்படியாவது திருப்பி கொடுக்க முயற்சிக்கிறேன்' என்றான். அப்போது அந்த செலவந்தர், 'உன் மனைவி பிள்ளைகளையும், உன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் விற்றாவது, என் கடனை அடைத்து முடி' என்றார். அப்போது அந்த மனிதன், அந்த செல்வந்தரின் காலில் விழுந்து, 'ஐயா, தயவுசெய்து கொஞ்சகாலம் பொறுத்து கொள்ளும். எப்படியாவது நான் அடைத்து விடுகிறேன். என் மனைவி பிள்ளைகளை விற்று விட்டு, நான் என்ன செய்வது ஐயா' என்று கண்ணீர் விட்டு கதறினான். அதை கேட்ட செல்வந்தர், அவன் மேல் மனதுருகி, 'சரி,போ உன்னை மன்னித்து விட்டேன்' என்று சொல்லி, அவன் அவருக்கு பட்டிருந்த பத்து இலட்ச ரூபாய் கடனையும் அவனுக்கு கொடுக்க வேண்டாம் என்று மன்னித்து விட்டார்.
.
இப்போது சந்தோஷமாய் தன் கடனெல்லாம் அடைக்கப்பட்டு விட்டதே, என மனைவி பிள்ளைகளோடு நான் சந்தோஷமாய் இருப்பேனே என்று எண்ணி கொண்டே வந்து கொண்டிருந்த அவனுக்கு எதிரே, அவனிடம் நூறு ரூபாய் கடன்பட்டிருந்த தன்னுடன் வேலை செய்யும் ஒருவன் வந்து கொண்டிருப்பதை பார்த்தான். அவனிடம், இவன் சென்று, 'நீ என்ன என் கடனை இன்னும் அடைக்காமலிருக்கிறாய், உடனே கொடுத்து முடி' என்று அவன் கழுத்தை நெரிக்க பார்த்தான். கடன் வாங்கியவனோ, 'ஐயா எப்படியாவது நான் கொடுத்து விடுகிறேன்' என்று அவன் கால்களை பற்றி கதறினான். ஆனால், இவனோ, 'உன்னை விட்டால் என் பணத்தை நீ கொடுக்கவே மாட்டாய்' என்று கூறி அவனை போலீஸில் பிடித்து கொடுத்து, 'இவன் என் பணத்தை கொடுத்து முடிக்குமட்டும், அவனை சிறையிலேயே வையுங்கள்' என்று அந்த போலீஸிடம் ஒப்படைத்தான்.
.
அதை நேரில் பார்த்த சிலர், அந்த செல்வந்தரிடம் போய், ' நீர் இந்த மனிதனுக்கு 10,000 இலட்சம் ரூபாய்களை மன்னித்தீரே, ஆனால் இவனோ போய் தனக்கு 100 ரூபாய் கொடுக்க முடியாத ஒரு மனிதனை அடிக்கவும், போலீஸில் பிடித்து கொடுக்கவும் செய்தான்' என்று கூறினர். அதை கேட்ட செல்வந்தருக்கு மிகவும் கோபம் உண்டாகி, அந்த மனிதனை பிடித்து கொண்டு வர சொல்லி, 'நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனை போலீசிடம் 'இவனை அடித்து, எனக்கு என் பணம் கிடைக்கும் வரைக்கும் இவனை சிறையில் வைத்து, எப்படியாவது பணத்தை திரும்ப பெற்று கொடுங்கள்' என்று அவர்களிடம் ஒப்படைத்தார்.
.
இந்த உவமையை தான் நாம் மத்தேயு 18ம் அதிகாரம் 23-34 வரையுள்ள வசனங்களில் பார்க்கிறோம். இதை படிக்கும்போதே, நமக்கு அந்த பத்து இலட்சம் கடன்பட்டிருந்த மனிதன் மேல் கோபம் வருகிறதல்லவா? நம்மில் அநேகரும் அவனை போலத்தான் இருக்கிறோம்.

ஊழியம்

கர்த்தருக்கென்று உண்மையாய் ஊழியம் செய்த ஒரு பெண்மணி வெகுநாளாய் 'ஆண்டவரே நான் உம்மை பார்க்க வேண்டும் . தரிசனத்திலோ சொப்பனத்திலோ உம் முகத்தை காண் வேண்டும்' என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது அனுதின ஜெபத்தில் இது ஒரு பகுதியாகவே இருந்தது. ஒருமுறை அவர்கள் வெளி மாநிலத்திற்கு ஊழியத்தினிமித்தம் சென்றிருந்தார்கள். அச்சமயம் தன் குடும்பத்தினரோடு ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சாலையில் வேனில் சென்று கொண்டிருந்தார்கள்.
.
அப்போது வழியருகே ஒருவர் சரியான ஆடையின்றி படுத்திருப்பதை கண்டு அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் காரை நிறுத்தும்படி கூறினார்கள். உடனிருந்தோர், 'இம்மனிதன் குடித்துவிட்டு படுத்திருக்கலாம், நமக்கு ஏன் வீண் வம்பு, போகலாம்' என்றனர். இருப்பினும் இவ்வூழியரது வற்புறுத்தலால் காரை நிறுத்தி அவரிடம் விசாரித்தபோது அவர் மிகவும் உடல் நலக்குறைவினால் கவனிப்பாரற்று படுத்திருப்பது தெரிய வந்தது. அவரை கனிவோடு விசாரித்து விட்டு தங்களிடமிருந்த உணவையும், தண்ணீரையும் கொடுத்துவிட்டு சென்றார்.
.
ஒரு சில நாட்களுக்கு பின் தன் ஜெப வேளையிலே ஆண்டவரே, நான் உம்மை எப்படியாவது பார்க்க வேண்டும். அதுவே என் உள்ளத்தின் வாஞ்சை என ஜெபித்தார்கள். அந்த நொடிப் பொழுதில் 'இரண்டு தினங்களுக்கு முன்பு என்னை வெளிப்படுத்தினேனே, என்னை நீ பார்த்தாயே' என்று ஆண்டவர் உணர்த்துவதைக் கண்டார். எப்போது ஆண்டவரே என்ற போது, 'அன்று சாலையோரத்தில் உன்னிடம் உணவு பொட்டலத்தையும் தண்ணீரையும் பெற்றுக் கொண்டது நான்தான்' என உணர்த்தினார். அப்போது மத்தேயு 25-ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட சம்பவம் அவ்வூழியரின் நினைவிற்கு வந்தது. அந்த வேதப்பகுதியை நாம் தியானிக்கலாம்.

Thursday, August 1, 2013

இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு என்ன?


இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு என்ன?

கிறிஸ்தவ பெயரை தரித்துகொண்டவன்னேல்லாம் கிறிஸ்தவன் என்றால் இயேசு என்கிற நபர் இந்த உலகத்தில் மரித்திருக்கவேண்டிய அவசியமில்லை.
எவன் ஒருவன் கிறிஸ்து தன் பாவங்களுக்காக மரித்தார் என்று முழுமனதுடன் ஏற்றுகொள்கிரானோ, தேவன் தன்னை ரட்சித்தார் என்கிற விசுவாசத்தோடு பரிசுத்த வேதாகமத்தை அனுதினமும் வாசிக்கிறானோ அவனே கிறிஸ்தவன்.

கோல்வால்கர் (1906-1973) ஆர்.எஸ்.எஸ் தலைவர், அருண்  சௌரி (பி.ஜெ.பி, அரசியல்வாதி), saffronised  NCERT பள்ளி 9ம் வகுப்பு பாடம் என பல இடங்களில் இந்துக்களும், முகமதியர்களும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டனர் என்று சொல்லி வரலாற்றில் பதித்துக்கொண்டனர்.
Varghese Mappilla Kandathil
Felix Wilfred என்கிற ஓர் வரலாற்று ஆசிரியர் இந்தியாவின் சுதந்திரத்தின் கிறிஸ்தவர்களில் பங்கு என்னவென தெளிவாக ஆதாரத்தோடு எழுதிவைத்துள்ளார். சுதந்திர தேசத்திற்காக பாடுபட்ட மிஷனரிகளில்   முக்கியமானவர்கள் ஸ்டான்லி ஜோன்ஸ் , C.F.அன்றூஸ் , J.C.வின்ஸ்லோ , வர்ரியர் எல்வின், ரால்ப் ரிச்சர்ட் கைதாஹ்ன் மற்றும் எர்னெஸ்ட் போர்றேச்டார்-பேடன். இவர்கள் ஆங்கிலய காலனி ஆதிக்கத்தை நேரடியாக எதிர்த்தவர்கள். இந்திய தேசம் இந்தியர்களுக்கே இன்று முழங்கியவர்கள். பல மிஷனரிகள் இதனால் ஆங்கிலேயர்களால் நாடுகடத்தப்பட்டனர். இதன் மத்தியுலும் பல கிறிஸ்தவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து உயிர்விட்டனர். பலரும் ஆங்கிலேயர்களால் தான் கிறிஸ்தவம் இந்திய தேசத்திற்குள்ளே வந்தது என்று கதைகட்டி நரிகளைப்போல் தெருவெங்கும் ஊளையிடுகின்றனர். கிறிஸ்தவம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே "பரிசுத்த தோமா" என்கிற கிறிஸ்தவ சீசர் மூலம் வந்துவிட்டது. இன்றும் இவர் சரித்திரம் சொல்லாத ஏடுகள் இல்லை. அந்நிய ஆதிக்கம் 17ம் நூற்றாண்டுகளில் தலைதூக்கியது. அன்றுவரை கிறிஸ்தவம் இந்தியத்தேசத்தில் பலவிதங்களில் சொல்லப்பட்டுவந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


ஜார்ஜ் தாமஸ் என்கிற கிறிஸ்தவர், இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திரபோராத்தில் குதித்த ஆரம்ப நாட்களில், இந்திய கிறிஸ்தவ சமுதாயம் (1885) என்கிற ஓர் அரசியல் சார்ந்த ஓர் கூட்டத்தை சேர்த்து சுதந்திர போராட்டத்தில் குதித்தார். 1887ம் ஆண்டு இந்திய காங்கிரஸ் தாக்கல் செய்த மூன்றாம் அரசியல் சாசனத்தில் 607 பேர் கலந்துகொண்டனர். இதில் 15 பேர் கிறிஸ்தவர்கள் (கிறிஸ்தவர்கள் மக்கள் தொகை எண்ணிக்கை மிக குறைவு).  இதில் முக்கியமானவர்கள் ஒரிசாவை சார்ந்த மது சுதன் தாஸ்
(1848-1934),  பெங்காலி கிறிஸ்தவர் காளி சரண் பேனர்ஜி (1847-1907) என்பவர்கள். இவ்விருவரும் தேசிய அரசியலில் காங்கிரசோடு இணைந்து பல அரசியல் சாசனங்களை தாக்கல் செய்தனர். 1889ம் ஆண்டு நடைபெற்ற முக்கியமான கருத்தரங்கில் கலந்துகொண்ட 10 பெண் தலைவர்களில் 3 ன்று பேர் கிறிஸ்தவ தலைவர்கள். இவர்கள்  பண்டித ரமாபாய் சரஸ்வதி (1858-1922), திருமதி திரயும்புக் மற்றும் திருமதி நிகம்பே.


ஸ்வராஜ் இயக்கம்  (1905), the ஒத்துழையாமை இயக்கம் (1920), the Civil Disobedience Movement (1930) மற்றும் வெள்ளையனே வெளியேறு  இயக்கம் (1942) பல ஆயிரக்கணக்கான இந்திய கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் உயிரை கொடுத்துள்ளனர். பலர் குடும்பத்தை பிரிந்து சிறையில் மாண்டனர்.


1920ம் வருடம் ஆரம்பித்து பல கிறிஸ்தவ இயக்கங்கள் ஆங்காங்கே சபைகள், கிறிஸ்தவ கல்லூரிகள், அரசியல் சார்பு இயக்கங்கள் உருவாகி சுதந்திர தேசத்திற்காக பாடுபட்டனர். அனைத்திந்திய கிறிஸ்தவ மாநாடு, தேசிய கிறிஸ்தவ ஆலோசனை சபை (the National Christian Council of இந்திய), ஒருங்கிணைந்த கிறிஸ்தவ சாஸ்திர கல்லூரி (United Theological College (Bangalore)) சார்பாக உருவாகின  கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் வாலிப மாணவ குழுக்கள் , பெங்கால் செரம்பூர் கல்லூரி (Serampore College) (Bengal), புனித பவுல் கல்லூரி, கொல்கத்தா (St. Paul’s College, Calcutta (Bengal)), கேரளா மலபார் கிறிஸ்தவ கல்லூரி (Malabr Christian காலேஜ்), Calicut (Kerala), கிறிஸ்தவ வாலிப ஆலோசனை மற்றும் செயல்படுத்தல் குழு (கேரளா) (the Youth Christian Council of Action (Kerala)), இந்திய கிறிஸ்தவ மாணவ இயக்கம் (the Student Christian Movement of India), இந்திய கிறிஸ்தவ கழகம், பெங்கால் (the Indian Christian Association of Bengal, கிறிஸ்தவ கூடுகைகள், மும்பை (conference of Christians in Bombay), இந்திய கிறிஸ்தவ கூட்டம், பாளையம்கோட்டை மற்றும் திருநெல்வேலி (Meeting of Christians in Palayamcotta and Tinnaveli) போன்றவற்றின் மூலம் பல இடங்களில் சபைகள் மூலமாக கிறிஸ்தவர்கள் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு எதிர்த்து நின்று இரவு பகல் பாராமல் போராடினர். சில இடங்களில் முன்வந்து போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

1973ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சுதந்திர போராட்ட தியாகிகள் பெயரை வெளியிட்டது. அதன் தலைப்பு "யார் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது, தமிழ்நாடு" "Who is Who of Freedom Fighters, Tamil Nadu" இதில் D.ஆர்தர் ஜெயகுமார் (D.Arthur Jayakumar) மற்றும் 103 பேர் கிறிஸ்தவர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற கிறிஸ்தவர்களில் D.ஆர்தர் ஜெயகுமார் அவர்களின் பங்களிப்பு அளவிடமுடியாதது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.



J.C Kumarappa
J.C.குமரப்பா (உண்மையான பெயர் ஜான் ஜேசுதாசன் கொர்நெலேயு, (1892-1960), முக்கியமான காங்கிரஸ் தலைவர். ஹார்வர்ட், ஒகியோ, கொலம்பியா போன்று பல இடங்களில் படித்து பட்டம் பெற்ற இவர் லக்னோ வில் உள்ள கல்லூரியில் தத்துவ ஞான சாஸ்திர பேராசிரியராக இருந்தார். சுதந்திர தாகம் கொண்ட இவர் அண்ணல் காந்தியை 9 மே  1929 அன்று சபர்மதி ஆசிரமத்தில் சந்தித்த பின் அவர் நெருங்கிய நண்பர் ஆனார். இவர் "சத்தியக்ரஹம்" போராட்டத்தில் கலந்துகொன்று பல கிறிஸ்தவ இயக்கங்களை இதனோடு இணைத்தார்.
காந்தி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க "எங் இந்தியா" என்கிற பத்திரிக்கையின் ஆசிரியரானார். 1942ம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் மும்பை, நாக்பூரில் கிளர்ச்சியை ஏற்ப்படுத்தினதால் ஜபல்பூர், மத்திய பிரதேசம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்

பவுல் ராமசாமி (1906) மற்றொரு முக்கியமான கிறிஸ்தவர். காந்தியின் உப்பு சத்தியாக்ரஹ போராட்டத்தில் கலந்துகொண்டு பிஷப் ஹீபர் கல்லூரியை மையமாக வைத்து செயல்பட்டார். பின்னை ஆங்கிலேயர்களால் கைதுசெய்யப்பட்டு திருச்சி, அல்லிபுரம் சிறைச்சாலைகளில் வாடினார். வெங்கல் சக்கரி (1880) காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நபராக செயல்பட்டவர். 1930 ம் வருடம் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் K.T.பவுல் அவர்கள் கலந்துகொண்டு விடுதலை முழக்கமிட்டார்.

லக்னௌவில் நடைபெற்ற அனைத்திந்திய கிறிஸ்தவர்கள் மாநாட்டிற்கு (1922, டிசம்பர் 27-30) பிறகு "ஒத்துழையாமை" இயக்கத்தில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இதன் பிறகு அதிகமான கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆதாரம்:1930 The editor of The Guardian. N.H.துப்ஸ் பிஷப் கல்லூரி முதல்வர், கொல்கத்தா, நிறத் பிஸ்வாஸ் (பிஷப் அஸ்ஸாம் சபைகள்) ஆகிய இருவரும் 1932ம் ஆண்டு உப்பு சத்தியாக்ரஹ போராட்டத்தில் தங்களை இணைத்துகொண்டனர்.
1930 மற்றும் 1940ம் ஆண்டுகளில் கிறிஸ்தவ தலைவர்களான T.M. வர்கீஸ், A.J. ஜான், மச்காறேனேஷ் மற்றும் அக்கம்மா செரியன் ஆரம்ப நாட்களில் முக்கியமானவர்கள். திருவேன்கொர் காங்கிரஸ் தலைவர்களில் பிலோப்போஸ் ஏலஞ்சிக்கள் ஜான் (1903-1955) முக்கியமானவர்.

Joachim Alva and Violet Alva
கிறிஸ்தவ குடும்பங்கள் பல இணைந்து சுத்திர தேசத்திற்காக போராடினர். முக்கியமாக திரு ஜோசிம்  அல்வா Joachim Alva (1907-1979) அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. இவர் கிறஸ்தவ வாலிப இயக்கத்தின் முன்னோடி. சுதந்திர போராட்டத்தில் குதிக்க தான் பார்த்துவந்த பணம்கொளிக்கும் வேலையை தூக்கிஎறிந்து வந்தார். திருமதி வியோலேட் அல்வா (1908-1969). கணவனும், மனைவியுமாக இணைந்து பல இடங்களில் சுதந்திர வேட்க்கையை தீயாய் பரப்பினர்.


இதை ஒரு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த ஓர் பத்திரிகை எழுத்தாளர் M.V.காமத் அவர்கள் ஒப்புகொண்டிருக்கிறார். தன் சுயசரிதையில் கிறிஸ்தவர்களில் பங்களிப்பு பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். சிப்ரியன் அல்வறேஸ் (Cyprian  Alvares), திரு ஜோசிம்  அல்வா (Joachim Alva), மார்செல் (Marcel A. M. D’Souza) ஆகியோரை பற்றி இவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மட்டும் அல்லாமல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்களிப்பு தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதையும் நினைவு கூறுகிறார்.

கிறிஸ்தவ மிஷனரிகள் ஆரம்பித்த பள்ளிகூடங்கள், கல்லூரிகள் விடுதலை வேட்க்கையை கல்வியோடு பக்குவமாக மாணவர்களிடத்தில் சொல்ல பெரும்பங்கு கொண்டுள்ளது. பல கிறிஸ்தவ கல்லூரிகள் விடுதலை போராட்டத்தில் நேரடியாக குதித்துள்ளது இதற்கு ஓர் பெரிய சான்றாகும்.


ஜார்ஜ்  ஜோசப் (George Joseph (1887-1938) was another outstanding Christian who engaged in the freedom struggle)  அவர்களின் விடுதலை போராட்ட பங்கு மிகவும் பெரியது. 1918ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற விடுதலை போராட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டது மூலம் இந்திய கிறிஸ்தவர்கள் தேசிய விடுதலைக்காக போராடுகின்றனர் என்பதை உலகிற்கு உணர்த்தினார். இவர் வக்கீல் தொழிலுக்கு படித்தவர். திருமதி அண்ணி பெசன்ட் அம்மையார் நடத்தின அரசியல் கூட்டமைப்பில் பங்குகொண்டு சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டார். வாலிப நாட்களில் சுகத்தை தூக்கி எறிந்துவிட்டு ஒத்துழையாமை இயக்க ஆரம்பநாட்களில் கலந்து கொண்டார். அந்நிய பொருட்களை வாங்கமாட்டோம் என்று முழங்கினார். 1920ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இவரை அலகபாத் சிறையில் அடைத்தது. பின்னர் காந்திஜி அவர்கள் நடத்திவந்த "எங் இந்தியா" "young India" பத்திரிகையில் ஆசிரியராக
Joseph
மாறினார். இவர் நேரு(Jawaharlal Nehru), மகாதேவ் தேசாய்  (Mahadev Desai), புருஷோட்டம்தாஸ் டாண்டன்  Purushottamdas Tondon and தேவதாஸ் காந்தி Devdas Gandhi ஆகியோரோடு ஒன்றாக லக்னொவ் (Lucknow) சிறையில் இருந்தவர். பின்னர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக உருவெடுத்தார். ஜவர்கலால் நேரு அவர்கள் தன் சுயசரிதையில் ஜார்ஜ்  ஜோசப் அவர்களை பற்றி குறிப்பிட்டுள்ளார்.



C.சாமுவேல் ஆரோன் மற்றும் அவர் துணைவியார் திருமதி கிரேசி ஆரோன் அவர்களில் பங்களிப்பு பலரை விடுதலை போராட்டத்தில் குதிக்க வைத்தது. உப்பு சத்தியாக்ரக போராட்டம் மலபாருக்கு வந்தபோது இவர் குடும்பம் தான் முன் நின்று வழிநடத்தியது. தன் சொந்த கட்டிடத்தை இப்போராட்டத்திற்கு இலவசமாக கொடுத்து முன் நின்றவர். இவர் எந்நேரமும் கொலை செய்யப்படலாம் என்று அப்போதைய அதிகாரி E.M.கவனே மிரட்டினார். 1930ம் ஆண்டு காங்கிரஸ் தடைசெய்யப்பட்ட போது இவரும் கைதானார். ருபாய் ஆயிரம் அபராதம் அல்லது 6 வார சிறை என்ற நிலை வந்தது. தன்னுடன் போராடிய பாமர மக்கள் சிறையில் வாடும் போது இவர்மட்டும் வெளியில் இருக்க மனம் வரவில்லை. பணம் கட்ட மறுத்து சிறைத்தண்டனையை ஏற்றார்.



இது மட்டும் அல்ல. கிறிஸ்தவ பத்திரிக்கைகளும் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாக வெளிவந்தன. அதிகமாக மலையாள மொழியில் கிறிஸ்தவ பத்திரிக்கைகள் வெளிவந்தன. Rajya Samacharam published by the Basel Mission (1987), Paschimodayam (1987), கொச்சினை மையாமாக கொண்ட Paschima Taraka (1862-1863), Satyanada Kahalam (எர்ணாக்குளம்), வார பத்திரிகை Satyanadam, கோட்டயத்தை மையமாக கொண்டு வெளிவந்த Nazrani Deepikaa (1987), Malayala Manorma Company (1888) இன்றும் இந்த பத்திரிக்கை புகழ் பெற்றதாகும். இதை ஆரம்பித்தவர் ஒரு கிறிஸ்தவர். பெயர் Varghese Mappilla Kandathil (1858-1904). பின்னர் இது Malayala Manorama (1890 onwards) என்று பெயர் பெற்றது. இப்படி கிறிஸ்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பல பத்திரிக்கைகள் அரசியலையும், விடுதலை வேட்க்கையையும் பலநிலைகளில் தூண்டியது. இவைகளில் பங்களிப்பு மிகபெரிய வெற்றியை தேடித்தந்தது.

அந்நாட்களில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால் இவர்கள் பங்களிப்பு மிகப்பெரியது. கிறிஸ்தவர்களாகிய நாம் இதனை முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும். இதனை உங்கள் சந்ததிக்கு எடுத்து சொல்லுங்கள். விடுதலை போராட்டத்தில் மட்டும் அல்ல, தீண்டாமை ஒழிப்பு, பெண் தீக்குளிப்பு, குழந்தைகள் திருமணம் போன்ற பலவற்றையும் எதிர்த்துநின்று வெற்றிகண்டனர்.

இப்படி அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திர இந்தியாவின் அமைதிக்காக தொடர்ந்து ஜெபிப்போம்.

பிலிப்பியர் 4:6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்

ரோமர் 13:1தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

2 நாளாகமம் 7:14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். 15. இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.

நம் தேசத்திற்கு சமாதானம், நிம்மதி, சேமம் வேண்டும் என்றால் கிறிஸ்தவர்களாகிய நாம் ஜெபிக்க வேண்டும். இந்த ஜெபத்தை தேவன் கேட்டு கால் மிதிக்கும் தேசமெல்லாம் கர்த்தருக்கு சொந்தமாகும் என்பது போல் நிச்சயம் இந்திய அமைதியில் தேசமாக மாறும்.

ஜெபியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


ஆக்கம், தொகுப்பு, படைப்பு
Article written by
Dr. Christo Selvan

You can copy this article for free. Don't forget to indicate our website address salomechristo.blogspot.com



http://www.kandathilkudumbam.com/knowus.html