Friday, July 27, 2012

நீதிமானின் சந்ததி - J.Oswald Sanders

பிரசித்திப் பெற்ற ஊழியக்காரனான ஆஸ்வால்ட் ஸான்டர்ஸ் (J.Oswald Sanders) தாம் எழுதிய A spiritual Clinic என்னும் தமது புத்தகத்தில் நியூயார்க் நகரத்தில் இருந்த இரண்டு குடும்பங்களின் தலைமுறைகளின் வரலாற்றை ஒப்பிட்டு பார்த்து, அவர் ஒரு விசேஷித்த காரியத்தை கீழ்கண்டவாறு கண்டறிந்தார்.

.
முதலாவது குடும்பம் மேக்ஸ் ஜூக்ஸ் (Max Jukes)..அவர் கடவுள் பக்தியில்லாதவராக, துன்மார்க்க ஜீவியம் செய்தவராக இருந்தார். அவர் மணந்த பெண்ணும் ஒரு கொள்கையில்லாதவளாய் கடவுள் பயம் இல்லாதவளாக இருந்தாள். அவர்களுடைய தலைமுறைகளில் வந்தவர்களில் 1200 பேரை வைத்து கணக்கெடுக்கப்பட்டது. அதில் 310 பேர் மிகவும் ஏழ்மையான நிலையில் ஒரு வீடும் வேலையும் இல்லாமல் கஷ்டமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 440 பேர் தங்களது ஒழுக்கமில்லாத வாழ்க்கையினால் தங்கள் சரீரங்களில் வியாதிகளை வரவழைத்துக் கொண்டார்கள். ஒருவருக்கு 13 வருடம் வீதம் 130 பேர் தங்களது துஷ்ட நடவடிக்கைளினால் சிறைக்கு அனுப்பபட்டார்கள். 100 பேர் குடியர்களாகவும், 60 பேர் திருடர்களாகவும், 190 பேர் விபச்சாரிகளாகவும் இருந்தனர். இவர்களது இந்த நிலையினால் அரசாங்கத்துக்கு 1,500,000 டாலர்கள் வீண் செலவு விரயமானது.
.
அடுத்த குடும்பம் ஜோனத்தான் எட்வர்ட் (Jonathan Edward) குடும்பம். அவர் தேவனுடைய மனிதனாக கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்தவர். அவர் மணந்த பெண்ணும் கர்த்தருக்கு பயந்தவர்கள், ஊழிய அழைப்பு பெற்றவர்கள். அவர் குடும்பத்தில் வந்த தலைமுறையில் 300 பேர் போதகர்களாகவும், மிஷனெரிகளாகவும், வேதாகம கல்லூரியில் பேராசிரியர்களாகவும் திகழ்ந்தார்கள். 100 பேர் பேராசியர்களாகவும், 100 பேர் சிறந்த வக்கீல்களாகவும், 30 பேர் நீதிபதிகளாகவும், 60 பேர் வைத்தியர்களாகவும், 14 பேர் கல்லூரிகளில் துணை முதல்வர்களாகவும் ஒருவர் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதியாகவும் இருந்தனர். அநேகர் அவரது குடுமபத்திலிருந்து நல்ல செல்வாக்கு மிக்கவர்களாகவும், நாட்டில் உயர்ந்த நிலைகளில் இருந்ததாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது. அவர்களது குடும்பத்தினால் அரசாங்கத்திறகு மிகுந்த வரவு வந்ததென்று குறிப்புகள் கூறுகின்றன.

தேவன் இல்லை

ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ மனிதர், தன் முடியை வெட்டிக்கொள்வதற்காக ஒரு நாவிதனிடம் (Barber) சென்றிருந்தார். அப்போது இரண்டு பேரும் நாட்டு நடப்புகளையும் மற்றும் அநேக காரியங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சு மத சம்பந்தமான நம்பிக்கையைக் குறித்து வந்த போது அந்த நாவிதன் எனக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கை இல்லை என்று கூறினான். அதற்கு கிறிஸ்தவர் ஏன் என்று கேட்டார். அதற்கு நாவிதன், “கடவுள் என்று ஒருவர் உண்டென்றால் ஏன் மக்கள் பட்டினியால் மடிய வேண்டும்? ஏன் அனேகர் நோயாளிகளாகக் கஷ்டப்படுகிறார்கள்? கடவுள் என்று ஒருவர் இருந்தால் கஷ்டம் வேதனை என்று ஒன்றும் இருக்காது, ஒரு அன்புள்ள கடவுள் இவற்றையெல்லாம் அனுமதிக்கமாட்டார்" என்றுக் கூறினான். அந்த கிறிஸ்தவர் பதில் சொல்ல யோசித்துவிட்டு, ஏன் வீணாக வாக்குவாதம் பண்ண வேண்டும் என்று நினைத்து ஒன்றும் பேசாமல் தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்தார். அவர் வெளியே வந்த போது, ஒரு மனிதன் மிக நீளமான தாடியுடனும், நீளமான அழுக்கு தலைமுடியுடனும் நின்றுக்கொண்டிருந்தான். அவனைக் கண்டவுடன் அந்த கிறிஸ்தவர் திரும்பவும் அந்த நாவிதனிடம் சென்று, 'உனக்குத் தெரியுமா இந்த உலகத்தில் நாவிதர்களே இல்லை' என்றுக் கூறினார். அதற்கு அந்த நாவிதன், "நீர் எப்படி அப்படிச் சொல்லலாம்? நான் இங்கே இருக்கிறேன், உமக்கு தலைமுடியை நான் இப்போது தானே வெட்டினேன்" என்று வேகமாக கூறினான். அப்போது அந்த கிறிஸ்தவர், 'இல்லை நாவிதர்கள் என்பவர்கள் இல்லை, அப்படி இருந்தால், இந்த மாதிரி ஒரு மனிதன் இப்படி அழுக்கு முடியோடு வெட்டாமல் இருப்பானா' என்றுக் கேட்டார். அதற்கு நாவிதன், 'நாவிதர்கள் இருப்பது உண்மை, ஆனால் இந்த மனிதர்கள் என்னிடம் வருவதில்லை, அதனால்தான் இப்படி இருக்கிறார்கள்' என்றுக் கூறினான்.

.
அப்போது அந்தக் கிறிஸ்தவர் கூறினார், "சரியான பாயிண்டைச் (Correct Point) சொன்னாய். அதுப் போலத்தான் ஆண்டவரும் இருக்கிறார். ஆனால் மனிதர்கள் அவரைத் தேடுவதில்லை, அவரிடம் போவதில்லை, அதனால் தான் இந்த உலகத்தில் இத்தனை பாடுகளும் வேதனைகளும்" என்றுக் கூறிவிட்டு ஒரு மனிதனை கர்த்தரை நம்ப வைத்த திருப்தியில் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்.

Monday, July 23, 2012

மலை ஏறுவது!

சில இளைஞர்கள் மலைப்பிரதேசம் ஒன்றைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். மிக அருமையான இயற்கைக் காட்சிகள் நிறைந்த பிரதேசம் அது. அவர்கள் அழகான பூஞ்சோலைகளையும், மிகப்பெரிய மரங்களையும், எழிலான பள்ளத்தாக்குகளையும் பார்த்து சிந்தித்துக்கொண்டே வந்தார்கள். அப்போது, ஒரு காட்சி அவர்களுக்கு பெரிதும் வியப்பளித்தது. மிகவும் வயது முதிர்ந்த மனிதர் ஒருவர் பெரிய மூட்டை ஒன்றைத் தலையில் சுமந்துகொண்டு மலைச்சரிவில் மேல் நோக்கி சர்வ சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்தார். இளைஞர்கள் அதைப் பார்த்து குழப்பமடைந்தார்கள். எந்த எடையையும் சுமக்காமல் சாதாரணமாக மலை ஏறுவதே சிரமமான காரியமாக இருக்கையில், இந்த முதியவரால் எப்படி இவ்வளவு பெரிய பாரத்தைச் சுமந்துகொண்டு மலை மீது ஏற முடிகிறது? அதுவும், மலைச்சரிவில் ஓடி ஏறிக்கொண்டிருக்கிறாரே!

இளைஞர்கள் அந்த முதியவரைத் தடுத்து நிறுத்திக் கேட்டார்கள். ஐயா, நாங்கள் இளைஞர்கள். நாங்கள் எந்த பாரமும் இல்லாமல்தான் மலை ஏறுகிறோம். ஆனாலும், சிறிது நேரத்திற்குப் பிறகு எங்களுக்கு மூச்சுத் திணற ஆரம்பிக்கிறது. சற்று ஓய்வு எடுத்தால்தான் மேற்கொண்டு சிறிது தூரம் ஏற முடிகிறது. இப்படி இருக்கும்போது நீங்கள் இந்த முதிர்ந்த வயதில் இவ்வளவு பெரிய பாரத்துடன் எப்படி மலை மீது எளிதாக ஓடி ஏறுகிறீர்கள்?

அந்த முதியவர் சொன்னர்: """"தம்பிகளா, மலை மீது உள்ள கிராமத்தில்தான் நான் இருக்கிறேன். அடிவாரத்தில் சிறு நகரம் இருக்கிறது. எங்களுக்குப் பொருட்கள் எதுவும் தேவையென்றால் கீழிருந்து வாங்கித்தான் மேலே கொண்டு செல்ல வேண்டும். சிறுவயதியிலிருந்தே நான் சிறுசிறு பொருட்களை வாங்கி மேலே கொண்டு செல்வேன். நாளாக ஆக ஆடுகளைத் தூக்கிக்கொண்டு ஓடினேன். பிறகு, பாரமுடைய மரக்கட்டைகளைச் சுமந்து சென்றேன். மலை ஏற முடியாத நோயாளிகளைக்கூட சுமந்து சென்றேன். இப்போது கிராமத்தில் உள்ள ஆதரவற்ற மனிதர்களுக்காக என்னால் முடிந்த உதவியைச் செய்வதற்காக சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கிறேன். இந்தப் பாரத்தைத் தூக்கிக்கொண்டு மலைமீது ஓடுவதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை!

அந்த முதியவரின் வார்த்தைகள் இளைஞர்களின் இதயத்தில் என்றும் அணையாத பிரகாசத்தை ஏற்படுத்தியது. அந்தப் பிரகாசம் இரண்டு உண்மைகளால் ஆனது. ஒன்று, தொடர் பயிற்சியின் மூலமும் ஆண்டவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் மூலமும் எதையும் எளிதாகச் சாதிக்க முடியும். இன்னொன்று மற்றவர்களுக்காக நாம் ஒரு நன்மையைச் செய்யும்போது நம்மையறியாமலேயே தேவன் நம் சக்தியை பன்மடங்காகப் பெருகச் செய்கிறார்.

ஆம் பிரியமானவர்களே! நம்முடைய வாழ்விலும் தேவன் நமக்கு கற்றுக்கொடுக்கின்ற காரியங்களும் அப்படித்தான்! அவர் ஒரேநாளில் நமக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து நம்மேல் எல்லாவற்றையும் திணித்து நம்மை திணரச்செய்கிற தேவனல்ல. ஒவ்வொரு காரியத்திலும் நாம் மெதுமெதுவாக முன்னேறும்படி நம்மை பயிற்றுவிக்கிறவர். மற்றொரு காரியம் இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நாம் மற்றவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்யும்போதும், நம்மிடத்திலுள்ளவைகளை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது அவர்கள் முகத்தில் மலர்ச்சியை காண்கிறோம். நமக்கென்று நாம் எவ்வளவுதான் செலவழித்துக் கொண்டாலும், தேவையில் இருப்போரின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு உதவும்போது, அவர்கள் முகத்தில் காணப்படுகிற முகமலர்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் முன்பதாக வேறெந்த காரியமும் இணையாகாது. இப்படிப்பட்ட சந்தோஷத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டுமா? உதவிற்றோருக்கும், ஏழைகளுக்கும் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உதவுங்கள். 
நன்றி
paralogapathi.blogspot.

சாது சுந்தர் சிங் - சர்வ வல்லமையுள்ள தேவன்

திபெத் நாட்டில் புத்தமதமே பிரதானமாக இருந்ததால் அம்மதம் நசிந்து போய்விடக்கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது என்ற கடுமையான சட்டமிருந்தது. இருப்பினும் துணிந்து அங்கு சென்றவர்தான் சாது சுந்தர் சிங். 1908ம் ஆண்டு திபெத்திற்குள் 19 வயதுள்ள இளைஞனாய் ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங். 

ஒரு முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையே சுவிசேஷத்திற்கு வரவேற்பில்லை. அவர்கள் சுந்தர் சிங்கை பிடித்து அவ்வூர் பிரதம லாமாவிடம் கொண்டு வந்தனர். அனுமதியின்று ஊருக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு மதத்ததை பிரசங்கித்த குற்றத்திற்காகவும் லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார்.
 
திபெத்தில் மரணதண்டனை கொடுக்கும் முறைப்படி சுந்தர் ஒரு கிணற்றிற்கு அருகில் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடைகளை உரிந்து விட்டு எலும்பு குப்பை நிறைந்த இருண்ட கிணற்றிற்குள் தூக்கி எறிந்தார்கள். விழுந்த வேகத்தில் வலது கைதோள் பட்டையில் அடிபட்டு மயக்கமுற்றார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது எங்கும் இருளாக இருந்தது. இவருக்குமுன் இந்த கிணற்றில் எறியப்பட்ட பலரது அழுகிய மாம்சமும் எலும்புகளும் எங்கும் நிறைந்து தாங்கமுடியாத துர்நாற்றம் வீசியது. கை வைத்த இடமெல்லாம் அழுகிய மாம்சமும் எலும்புகளுமிருந்தன. தோளில் அடிபட்ட இடம் தாங்க முடியாத வலியை கொடுத்தது. அப்பொழுது இயேசு இரட்சகர் வேதனையடைந்து உச்சரித்த வார்த்தைகள் தான் அவர் நாவிலும் வந்தன. 'ஏன் என்னை கைவிட்டீர்?'  துர்நாற்றம் பசி,  தாகம், வேதனை இவைகளின் மத்தியில் சுந்தர் சிங்-க்கு தூக்கம் வரவில்லை.
 
மூன்றாம் நாள் இரவில் ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார். திடீரென கிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. பேராவலோடு அண்ணாந்து பார்த்தார். மேலேயிருந்த மனிதர் 'கீழே விடப்படும் கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்' என்றார். அதன்படியே செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தர் சிங்கை தூக்கி கிணற்றிற்கு வெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வேளையில் மறுபடியும் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது. தனக்கு உதவிய நபருக்கு நன்றி செலுத்தும்படி திரும்பினார். என்ன ஆச்சரியம்! அங்கு யாருமில்லை. அவருடைய தோள்பட்டை வலியும் மறைந்து போனது. அப்போது தன்னை காப்பாற்றியது கர்த்தர் என அறிந்து தேவனுக்கு நன்றி செலுத்தினார்.

ஆபிரகாம் பண்டிதர் (1859-1919)

தஞ்சையில் வாழ்ந்த,ஆபிரகாம் பண்டிதரின் பூர்விகம் தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை ஆகும்.  தமிழிசை ஆர்வலர், ஆய்வாளர், அமைப்பாளர், பயிற்றுனர் என தமிழிசை சார்ந்தவற்றில் நீங்கா இடம் கொண்டோர் பண்டிதர் ஆபிரகாம் அவர்கள்.   தமிழுக்கு தொண்டாற்றிய கிறித்தவர்தம் பட்டியலில் நிலைத்த இடம் பெற்றவர் அன்னார்.  தமிழிசையின் வேர்களைக் கண்டு பிடித்து, தமிழிசைதான், கர்நாடக இசையாகத் திரிந்து வந்துள்ளதை நிருபித்த பல ஆராய்ச்சியாளர்களின் முன்னோடி ஆபிரகாம் பண்டிதர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலுமாக கர்நாடக இசையையும் பழைய தமிழ் நூல் களையும் மிக ஆழமாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் எழுதிய நூல் 'கருணாமிர்த சாகரம்'.
'கருணாமிர்த சாகரம்' 1907ல் எழுதப்பட்டது.  ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது 'கருணாமிர்த சாகரம்'. இசையின் வரலாறு, அறிவியல், இலக்கியம், இசை வல்லுனர்கள் பற்றி விரிவாகவும் ஆழ்ந்தும் இந்னூலில் அலசியுள்ளார் ஆபிரகாம் பண்டிதர். இசை பற்றிய  கலைக்களஞ்சியம் என்றால் மிகையாகாது.

தமிழின் செங்கோட்டி யாழே நவீன கால வீணை என்றும் நிரூபித்தவர் ஆபிரகாம் பண்டிதர் . தஞ்சையில் லேடி நேப்பியர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணிபுரிந்தார் அவர். இவருடைய மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்தார்.

தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஆபிரகாம் பண்டிதர், ஒரு சித்த வைத்தியருமாவார்.இவர் 1870களில் சுருளிமலைக்குச் சென்று நேரடியாக மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சுருளி மலையில் வசித்த கருணானந்தர் என்ற ஞானியிடம் பண்டிதர் மருத்துவ முறைகளையும் மூலிகை இரகசியங்களையும் கற்றறிந்தார்.   1890ஆம் ஆண்டில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தஞ்சைப் புறநகரில் ஒரு நிலத்தை வாங்கி மூலிகைத் தோட்டம் வைத்து, அதற்குக் கருணாநந்தபுரம் என்று பெயரிட்டார். தஞ்சையில் தாம் வசித்த வீட்டில் வைத்திய சாலை ஒன்றை நிறுவினார். இங்கு தயாரிக்கப்பட்ட கோரோசனை மாத்திரைகள் உலகப்புகழ் பெற்றவை. தமிழ் வைத்திய முறையைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக 1909ஆம் ஆண்டு அரசு அவருக்கு 'இராவ் பகதூர்' என்ற பட்டம் வழங்கியது.

1907ஆம் ஆண்டு 'கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற புத்தகத்தைப் பண்டிதர் வெளியிட்டார். தொண்ணூற்றைந்து தமிழ்ப் பாடல்கள் அதிலிருந்தன. அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. ஒவ்வொன்றுக்கும் அவரே இசையமைத்து அவற்றின் சுவரங்களையும் வெளியிட்டார்.

தென்னிந்தியாவின் முதல் இசை மாநாட்டை மாபெரும் அளவில் பண்டிதர் நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை மாநாடுகள் பண்டிதரது சொந்த செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு விவாதங்கள் நடந்தன. புது கருத்துகள் வெளியாயின.

டிசம்பர் 14, 1912இல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்ற அமைப்பைப் பண்டிதர் தோற்று வித்தார். தென்னிந்திய இசை வளர்ச்சியே அதன் குறிக்கோள். இசைப்பள்ளி ஏற்படுத்துதல், இசை ஆராய்ச்சி, இசை பற்றிய சந்தேகங்களைத் தீர்த்தல் என்பன சங்கத்தின் முக்கிய பணிகள்.
தஞ்சாவூரின் திவான், ஆபிரகாம் பண்டிதரின் இசை மாநாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதே பாணியில் அகில இந்திய அளவில் இந்திய இசை பற்றிய மாநாட்டைப் பரோடாவில் கூட்டினார். அதில் பண்டிதர் பங்கேற்றுக் கட்டுரை வாசித்தார்.
தஞ்சையில், ஆபிரகாம் பண்டிதர் சாலை என்று ஒரு சாலை இன்றும் உண்டு.
அவருடைய குடும்பத் தயாரிப்புகளான மருந்துகள் இன்றைக்கும் தஞ்சை பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழிசை தொடர்பான ஆய்வுகளிலும், பிரசாரங்களிலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது என்பது பலரின் ஆதங்கமாகும். இதற்கு காரணம் அவர் கிறித்தவராய் மாறியதால் / (பிறப்பு) ஜாதிய காரணங்களால் என இருவேறு கருத்துக்கள் உண்டு. எது காரணமாயினும் அது அநீதச் செயலே.

சாது கொச்சு குஞ்சு உபதேசி - இப்படியும் ஒரு ஊழியரா?

தமிழ் நாட்டில் ஊழியம் செய்த போது தமிழ் மக்கள் இவரை சாது என அழைத்தனர். இவரது வாழ்க்கையை பற்றி வாசித்த போது இப்படியும் ஒரு ஊழியரா?

  1. கேரளாவில் உள்ள பத்தினம் திட்டா என்ற மாவட்டத்தில் பிறந்த இவர் வர்கீஸ் என அழைக்கப்பட்டார். பிறந்த வருடம் 1883
  2. 11 வது வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார், 20 வயதில் தகப்பனையும் தாயையும் இழந்து வாழ்வை நகர்த்துவதற்கு சிரமப்பட்ட இவர் விவசாயம் செய்து தனது பிழைப்பை நடத்தினார். வயலில் வேலை செய்துவிட்டு வந்து இரவில் ஊழியம் செய்வாராம்.
  3.   வெள்ளை உடை மட்டும் அணிந்த இவர் மிகவும் எளிமையான தோற்றமும் தீர்க்கமான பார்வையும் உடையவராக விளங்கினார். எப்போதும் வேதத்தை தியானித்து கொண்டும் ஜெபித்து கொண்டும் இருப்பாராம்.
  4. வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர் தனது பிரசங்கங்களில் கதைகள்,எடுத்துக்காட்டுகள் என கேட்பவருக்கு சத்தியத்தை தெளிவாக கூறுவாராம். தேவனிடத்தில் ஆலோசனையை நாடித்தான் பல காரியங்களை நடப்பிப்பாராம்.
  5.   30 வருடங்கள் தென்னிந்தியாவில் பெரிய எழுப்புதல் நடக்கும் வகையில் இவரது ஊழியம் இருந்தது. இலங்கையிலும் ஊழியம் செய்திருக்கிறார்.
  6. எளிமையான உணவுப்பழக்கம், அடிக்கடி உபவாசம்,தேவைக்கு மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வைத்துக்கொள்வது, சுவிசேஷம் அறிவிப்பதே தலையாய கடமையாக கருதியதால் வாழ்வின் அற்ப சந்தோஷங்களையும் தியாகம் செய்தது, தாழ்மையாக இருந்து யாரிடமும் எந்த உபகாரமோ, மரியாதையோ எதிர்பார்க்காமல் வாழ்ந்தது போன்ற குணங்கள் அமையப்பெற்றது அதிசயம் தான்.
  7. குதர்க்கவாதிகளும், குடிகாரர்களும் கூட இவரது பிரசங்கங்களால் மனம் மாறி ஆணடவரை ஏற்றுக்கொண்டனர்.  
  8. மலையாளத்தில் உள்ளத்தை உருக்கும் பாடல்கள், புத்தகங்கள் எழுதியுள்ளார். இன்னும் இவரது பாடல்கள் மலையாள கிறிஸ்தவ மக்கள் விரும்பி கேட்கின்றனர். 
  9. இடையறாத ஊழியம், உபவாசம் என ஒடிக்கொண்டிருந்த இவரை 1945 ல் ஆண்டவர் நித்திய ராஜ்ஜியத்திற்கு அழைத்துக்கொண்டார். இவரது அடக்க ஆராதனையில் அப்போதே 2 முக்கிய பிஷப்மார், 40,000 மக்கள் கலந்து கொண்டார்களாம்.
 நன்றி
http://unmaiselvam.blogspot.com

சாது சுந்தர் சிங் - வாழ்வின் அதிசயங்கள்

சிறு வ‌ய‌தில் வேதாக‌ம‌த்தை கிழித்து நெருப்பிலிட்டுக் கொளுத்தும் அள‌வுக்கு கிறிஸ்த்த‌வ‌ ந‌ம்பிக்கை மீது வெறுப்பு கொண்டிருந்த‌வ‌ர் சுந்த‌ர் சிங்.  ஆயினும் திருத்தூத‌ர் ப‌வுலை ச‌ந்தித்த‌து போல‌, இயேசு இர‌ட்ச‌க‌ர் சுந்த‌ர் சிங் அவ‌ர்க‌ளையும் த‌டுத்தாட்க் கொண்டு அவ‌ரை அற்புத‌வித‌மாய் மாற்றினார்.  இளம் வய‌தில் நேசத் தாயின் மரணம், ஆதரவற்ற வெறுமை உணர்வு ஆகியவற்றால் தற்கொலை செய்யும் எண்ண‌த்தோடு இருந்த‌ சுந்த‌ர் சிங் ம‌ன‌தை மாற்ற த‌ரிச‌ன‌ம் த‌ந்து த‌ம்முடைய‌ ஊழிய‌ராக‌வும் மாற்றினார்.
 
சாது சுந்தர் சிங் கிறிஸ்துவைத் தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்பாகத் தன்னுடையப் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் வெறுக்கப்பட்டார்.  சாது சுந்தர் சிங்கிடம் அவருடையப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து கிறிஸ்துவை மறுதலித்து விடும்படிக் கூறினர்.ஆனால் அவரோ நான் கிறிஸ்துவைத் தான் பின்பற்றுவேன் என்று உறுதியாகக் கூறினார். ஒரு நாள் சாது சுந்தர் சிங் வெளியேச் சென்று தன்னுடைய நீளமான முடியை வெட்டிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சாது சுந்தர் சிங்கின் தகப்பனார் கோபத்துடன் சுந்தரிடம் வீட்டை விட்டு வெளியேறும் படி கூறினார். அன்று இரவு சாது சுந்தர் சிங்கின் உணவில் விஷத்தை கலந்து அவருக்குச் சாப்பிடக் கொடுத்தனர். அவர் இரவு உணவை உண்ட பின்பாக அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். உணவில் விஷம் கலக்கப்பட்டது தெரியாமல் இவரும் இரயிலில் பயணம் மேற்கொண்டார். இரயிலில் மயங்கி விழுந்த அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். 

மருத்துவர் இவர் கடவுளின் அருளால் தான் பிழைத்தார் என்று சாட்சி பகர்ந்தார்.   சாது சுந்த‌ர் சிங் என்ற‌ பெய‌ரில் காவி உடை த‌ரித்து இந்திய‌ கிறிஸ்த‌வ‌ துற‌வியாகி, எங்கும் ந‌ட‌ந்தே சென்று ந‌ற்செய்தி அறிவித்தார். த‌ன் ஊழிய‌த்திற்கு திரும‌ண‌ ப‌ந்த‌ம் ஒரு த‌டையாக‌ இருக்க‌க் கூடாது என்ற‌ நோக்கில் முழுவ‌துமாக‌ இறைப்ப‌ணிக்கு த‌ன்னை அர்ப்ப‌ணித்துக் கொண்ட‌ ஊழிய‌ர் இவ‌ர்.   சிறையில் அடைக்க‌ப் ப‌ட்ட‌ போதும், பாதாள‌ கிண‌ற்றில் த‌ள்ள‌ப்ப‌ட்ட‌ போதும் கொஞ்ச‌மும் பின்வாங்காம‌ல் ஆப‌த்து நிற‌ந்த‌ திபெத் ம‌லைப் ப‌குதிக‌ளில் கூட‌ ஆண்ட‌வ‌ருடைய‌ ஊழிய‌த்தைச் செய்து வ‌ந்தார்.
இந்தியாவிலும், வெளிநாடுக‌ளிலும் அவ‌ர் த‌ன் விசுவாச‌த்தை அறிக்கையிட்டிருக்கிறார்.இருபதாம் நூற்றாண்டின் வ‌ல்ல‌மையான‌ ஒரு தேவ‌ ஊழிய‌ர் இவ‌ர். எந்த‌ ச‌பையினையும் சாராத‌ ஊழிய‌ராயினும், எல்லாச் சபையினரோடும் இணைந்து ஊழியம் செய்தவர் இவர்.
 
பல முறை மரணத்தின் அருகில் சென்ற சாது சுந்தர் சிங்கைக் காப்பாற்றிய தேவன் அவரை இந்திய தேசம் மட்டுமல்லாது சீன மற்றும் இலங்கை தேசத்திலும் அவரை வல்லமையாகப் பயன்படுத்தினார். இந்திய தேசத்து அப்போஸ்தலன் என்று மக்களால் போற்றப்பட்டார்.   நாமும் கிறிஸ்துவுக்காக நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து வாழும் போது நாம் துன்பத்தில் நடந்தாலும் கர்த்தர் நம்மை உயிர்பித்து வழிநடத்துவார்.
நம் சிந்தனைக்கு: நான் என்னைக் கிறிஸ்துவுக்கு முற்றிலுமாய் அர்ப்பணித்திருக்கிறேனா? என் ஊழிய‌ம் கிறிஸ்துவுக்குள் அனைவ‌ரையும் ஒன்று ப‌டுத்தும் ஊழிய‌மா? பிள‌வு ப‌டுத்தும் ஊழிய‌மா?

 ன்றி

http://unmaiselvam.blogspot.com 

Friday, July 20, 2012

உலக​ அன்பு மாறும்

ஒரு போர் வீரன் வியட்நாம் போர் முடிந்து, தன் வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்தது. சான் பிரான்சிஸ்கோ நகரில் தன் பெற்றோரை அவன் போனில் அழைத்து, நான் வீட்டிற்கு வரப்போகிறேன். ஆனால் உங்களிடம் ஒரு உதவியை கேட்கிறேன். என்னோடு என் நண்பனும் வர இருக்கிறான்' என்று கூறினான். அதற்கு பெற்றோர்கள், 'ஓ, தாராளமாக கூட்டி கொண்டு வா, அவனை நாங்களும் பார்க்க ஆவலாய் இருக்கிறோம்' என்றார்கள்.
.
அதற்கு மகன், ' அவன் நடந்த போரில் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணியில் காலை வைத்ததினால், அவனுடைய ஒரு காலும், ஒரு கையும் இழந்து விட்டான். அவனுக்கு யாரும் இல்லாததால் அவன் என்னோடு இருப்பதை விரும்புகிறேன்' என்று கூறினான்.
.
பெற்றோர், 'மகனே, அதை கேட்க மிகவும் விசனமாயிருந்தாலும், அவனை நாம் வேறொரு இடத்தில் தங்க வைக்க ஆயத்தப்படுத்துவோம். நம்மோடு அவன் இருக்க முடியாது. அவனை வைத்து பார்த்து கொள்வது என்பது மிகவும் கஷ்டம் என்று உனக்கு தெரியும். இந்த வயதான காலத்தில் எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பாரம் இருக்குமானால் மிகவும் கஷ்டம். இதை புரிந்து கொண்டு, அவனை வேறு இடத்தில் விட்டுவிட்டு, நீ மட்டும் வா' என்று கூறினர். மகன் போனை வைத்து விட்டான்.
.
சிறிது நாட்கள் கழித்து, சான் பிரான்சிஸ்கோ நகர போலீஸ் அந்த பெற்றோரை அழைத்து, 'உங்கள் மகன் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டான். நீங்கள் வந்து பார்த்து அது உங்கள் மகன் தானா என்று உறுதி செய்யுங்கள்' என்று கூறினார்கள். உடனே பதைத்து, பெற்றோர் போய் பார்த்த போது, அது அவர்களின் மகன்தான் என்று தெரிந்தது. அப்போது அவர்களுக்கு தெரியாத ஒரு காரியமும் இருந்தது. அவனுக்கு ஒரு கையும் காலும் இல்லாமல் இருந்தது. பிரியமானவர்களே, நம்மில் அநேகரும் அப்படித்தான் இருக்கிறோம். நம்மை போல எல்லாவற்றையும் உடையவர்களாகவும், அழகாயும், அறிவாயும் இருந்தால் அவர்களோடு பழக துடிக்கிறோம். பழகுகிறோம். ஆனால், நம்மை விட அழுக்காயும், உடல் ஊனமுற்றவர்களாக இருந்தால், அவர்களை நாம் தவிர்க்கவே விரும்புகிறோம். மேலே சொல்லப்பட்ட கதையில் அந்த பெற்றோர் தங்கள் பிள்ளைதான் ஊனமடைந்திருக்கிறான் என்று தெரிந்திருந்தால் நிச்சயமாக வீட்டிற்கு அழைத்து அவனை பராமரித்திருந்திருப்பார்கள். ஆனால் வேறு யாரோ என்று நினைத்து, அவனுக்காக நான் ஏன் இதை செய்ய வேண்டும் என்று நினைத்ததினாலேயே அவர்கள் தங்கள் சொந்த மகனையே இழக்க வேண்டியதானது.

.

நம்மில் யார் யார் யார்யாரோ?


நாம் எந்தப் பக்கம்?

ஒரு கடை வீதிக்கு செல்லும்போது நூறு ரூபாய் செலவு செய்வது எத்தனை எளிது
ஆனால் ஆலயத்திற்கு அந்த 100 ரூபாய் காணிக்கையாகப் போடுவது எத்தனை கடினம்
கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க உட்காரும்போது வேகமாக இரண்டு மணிநேரம் போவது எத்தனை எளிது
ஆனால் ஜெபிக்க ஒரு மணி நேரம் உட்கார்ந்திருப்பது எத்தனை கடினம்!

தன் தோழிகளுடனோ, தோழர்களுடனோ மணிக்கணக்கில் பேசுவது எத்தனை எளிது
ஆனால், ஜெபத்தில் இரண்டு வார்த்தை சொல்லி ஜெபிப்பது எத்தனை கடினம்
கிரிக்கெட்டில் ஒரு விளையாட்டு வீரன் ஒரு ஸிக்ஸர் அடித்தவுடன் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுவது எத்தனை எளிது
ஆனால் ஆலயத்தில் போதகர் கொஞ்ச நேரம் செய்தியை இழுத்தவுடன் அமர்ந்து கேட்பது எத்தனைக் கடினம்!
ஒரு சுவையான கதை புத்தகம் கிடைத்தவுடன் அதை படித்து முடித்துவிட்டுதான் மறு வேலை என்று தொடர்ந்து படிப்பது எத்தனை எளிது
ஆனால் வேதத்தில் ஒரு அதிகாரம் வாசிப்பது எத்தனை கடினம்!
பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர எவ்வளவு ஆசை
ஆனால் ஆலயத்தில் முதல் இடத்தில் உட்காருவது எத்தனை கடினம்!
தினம் செய்தித்தாளில் வரும் செய்திகளை நம்புவது எத்தனை எளிது
ஆனால் வேதத்தில் கூறப்பட்டுள்ள உண்மைகளை நம்புவது எத்தனை கடினம்!
கிறிஸ்துவை விசுவாசிக்காமல், எதையும் செய்யாமல் பரலோகத்திற்கு செல்ல விரும்புவது எத்தனை எளிது
ஆனால் அவரை விசுவாசிக்காமல், பரலோகம் செல்வது எத்தனை கடினம்
தேவன் மனிதனை இரட்சிப்பதற்கென்று வைத்திருக்கும் திட்டம் எத்தனை எளிது
ஆனால் அதை மனிதன் ஏற்றுக் கொள்வது எத்தனைக் கடினம்!
இலவசமாய் தேவன் தருகிற இரட்சிப்பு எத்தனை எளிது
ஆனால் அதை அறியாத மனிதன் அதற்காக ஓடிஓடி படுகிற பாடுகள்தான் எத்தனை கடினம்!
பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவது எத்தனை எளிது
ஆனால், அதற்கென்று பெற்றோர் எடுத்துக்காட்டாய் வாழ்வது எத்தனைக் கடினம்

நம்மை எல்லாரும் மதிக்க வேண்டும், நம்மைக் குறித்து நன்றாக நினைக்க வேண்டும் என்று நினைப்பது எத்தனை எளிது
ஆனால், மற்றவர்களை மதித்து நடப்பதோ அவர்களைக் குறித்து நன்மையாக நினைப்பதோ எத்தனைக் கடினம்!

Tuesday, July 17, 2012

வேடிக்கையான கதை - வாழும் வாழ்கை ஒருமுறைதான்

ஒரு வேடிக்கையான கதை உண்டு. தேவன் முதலாவது ஒரு காளையை உருவாக்கினார். உருவாக்கி, அதனிடம் 'நீ நாளெல்லாம் ஒரு விவசாயின் கீழ் இருந்து சூரியனுக்கு கீழே நிலத்தை உழுது உழைக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக 50 வருடங்கள் தருகிறேன்' என்று கூறினார். அதற்கு காளை, 'என்னது, இத்தனை கஷ்டமான வேலை செய்வதற்கு எனக்கு ஏன் ஐம்பது வருடங்கள்? வேண்டாம், வேண்டாம் எனக்கு வாழ்நாள் இருபது வருடங்கள் போதும், முப்பது வருடங்களை உமக்கே திருப்பி தருகிறேன்' என்றது. தேவனும் அதற்கு ஒத்து கொண்டார்.
.


அடுத்ததாக அவர் ஒரு குரங்கை உண்டாக்கினார். 'குரங்கு நீ மனிதர்களை சிரிக்க வைக்க வேண்டும். நீ செய்கிற சேட்டைகளை பார்த்து அவர்கள் சிரிக்க வேண்டும். உனக்கு 20 வருடங்களை வாழ்நாளாக தருகிறேன்' என்றார். அதற்கு குரங்கு, 'இந்த வேலைக்காக நான் இருபது வருடங்கள் உயிர் வாழ வேண்டுமா? பத்து வருடங்கள் போதும், பத்து வருடங்களை உமக்கே தருகிறேன்' என்றது. தேவனும் ஒத்து கொண்டார். 

அடுத்ததாக அவர் ஒரு நாயை உண்டாக்கினார். உண்டாக்கி, 'நீ நாள் முழுவதும் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து, போகிற வருகிறவர்களை பார்த்து குரைத்து கொண்டிருக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக இருபது வருடங்களை தருகிறேன்' என்றார். அதற்கு நாய் 'வாழ்நாளெல்லாம் நான் வீட்டு வாசற்படியில் இருந்து என் தொண்டை தண்ணீர் வற்றி கத்தி கொண்டு இருக்க வேண்டுமா? எனக்கு பத்து வருடங்கள் போதும், பத்து வருடங்ளை உமக்கே திருப்பி தருகிறேன்' என்றது. தேவனும் ஒத்து கொண்டார்.
.
அடுத்ததாக மனிதனை உண்டாக்கினார். அவனிடம், 'நீ ஒன்றும் செய்ய வேண்டாம், நேராநேரம் நன்கு சாப்பிட்டு, வாழ்க்கையை அனுபவி. உனக்கு 20 வருடங்களை தருகிறேன்' என்றார். அதற்கு மனிதன், 'ஒன்றும் செய்யாமல் ஜாலியாக இருப்பதற்கு இருபது வருடங்கள் மட்டும் தானா? காளை வேண்டாம் என்று கூறின முப்பது வருடங்கள், நாய் வேண்டாம் என்று கூறின 10 வருடங்கள், குரங்கு வேண்டாம் என்று கூறின பத்து வருடங்கள் எல்லாவற்றையும் சேர்த்து எனக்கு தாரும், நான் அவற்றை எடுத்து கொள்கிறேன. அப்போது மொத்தம் எழுபது வருடங்கள் ஆகுமல்லவா?' என்றான். தேவனும் ஒத்து கொண்டார்.
.


அதனால் தான் நாம் முதல் 20 வருடங்கள் ஒன்றும் செய்யாமல், உறங்கி, தூங்கி, வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அடுத்த முப்பது வருடங்கள் காளையை போல கடுமையாக உழைக்கிறோம். அடுத்த பத்து வருடங்கள் நம் பேர குழந்தைகளிடம் குரங்கை போல முகத்தை காட்டி, அவர்களை சிரிக்க வைக்கிறோம். அடுத்த பத்து வருடங்கள் நாயை போல வீட்டிலிருந்து, காவல் காத்து கொண்டிருக்கிறோம்.
.

Monday, July 16, 2012

மரணத்தை பிறப்பிக்கும் பாவம்

People look at charred bodies following fuel tanker explosion in Okogbe near Port Harcourt Nigeria, Thursday, July 12, 2012.ஒரு சமீபத்தில் செய்தித்தாளில் ஒரு செய்தி வந்திருந்தது. நைஜீரியாவில் போர்ட் ஹர்கோர்ட் (Port Harcourt) என்னுமிடத்தில் பெட்ரோலை ஏற்றி கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து விழுந்து. அதிலிருந்த பெட்ரோல் கீழே கொட்ட ஆரம்பித்தது. அதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி சென்று தேங்கி கிடந்த பெட்ரோலை தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் சேர்க்க ஆரம்பித்தனர்.
.
இந்த லாரி விழுந்து கிடக்கும் செய்தியை கேள்விப்பட்டு, உடனே பாதுகாப்பு படையினர் அந்த இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பெட்ரோலை சேகரித்து கொண்டிருந்த மக்களிடம், 'இது அபாயம், உடனே இங்கிருந்து செல்லுங்கள், எந்நேரமும் நெருப்பு பிடிக்கலாம்' என்று அவர்களை எச்சரிக்கை விடுத்து கொண்டே இருந்தனர். ஆனால் அவர்களோ எந்த எச்சரிக்கைக்கும் செவி கொடாமலும், அவர்களை தள்ளி போக சொன்னாலும் கேட்காமலும் பெட்ரோலை சேகரித்து கொண்டே இருந்தனர்.
.
சடுதியில் நெருப்பு பற்றி பிடித்து, ஒரு நிமிடத்தில் எல்லா இடத்திலும் பற்றி எரிந்தது. பெட்ரோலை சேகரித்து கொண்டிருந்த அத்தனை பேரும் ஏறக்குறைய 100 பேர் அப்படியே நெருப்பில் எரிந்து சாம்பலாயினர். அநேகர் பலத்த தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது இந்த மாதம் 12ம் தேதி நடந்த நிகழ்ச்சியாகும். தங்கள் உறவினர்களை இழக்க கொடுத்தவர்கள் கதறிய காட்சி மிகவும் பரிதாபமானதாக இருந்தது.
.
'
எந்நேரமும் தீப்பிடிக்கலாம், அந்த இடத்தை விட்டு கடந்து செல்லுங்கள்' என்று அவர்களுக்கு எச்சரிப்பு கொடுக்கப்பட்டும் அவர்கள் அந்த எச்சரிப்புக்கு கீழ்ப்படியாமல், தொடர்ந்து அவர்கள் அந்த இடத்தில் பெட்ரோலை சேகரித்து கொண்டிருந்தபடியால் திடீரென்று அழிவு வந்தது. அவர்கள் தப்பிக்க வழியே இல்லாமல் போயிற்று.
.
பிரியமானவர்களே, இந்நாட்களிலும் 'கர்த்தருடைய வருகை திருடனைப் போல தீடீரென்று வரப்போகிறது, பாவத்திலிருந்து விலகி, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுங்கள்' என்ற எச்சரிப்பின் செய்தி, முந்தின நாட்களை பார்க்கிலும் இந்நாட்களில் அதிகமாக கூறப்படுகிறது.

Saturday, July 14, 2012

உங்களுடைய பொக்கிஷம்

Willian Bordon
வில்லியம் போர்டன் (William Borden) என்னும் மிஷனரி, உயர்ந்த கல்வி கற்றவரும், பணக்காரருமாயிருந்தார். ஆனால் அவர் அந்த உலக செல்வங்களையெல்லாம் துச்சமாக எண்ணி, இஸ்லாமியர் மத்தியில் கிறிஸ்துவை அறிவிப்பதற்காக எகிப்து நாட்டிற்கு சென்றார். அங்கு அவர் தனக்கென்று ஒரு கார் கூட வாங்காமல் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஊழியத்திற்காக கொடுத்து, உற்சாகமாக அங்கு எகிப்தில் ஊழியம் செய்து வந்தார். ஆனால், அங்கு இருந்த நான்கே மாதங்களில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் Spinal card Meningitis என்னும் வியாதியால் பீடிக்கப்பட்டு, தனது 25ஆவது வயதில் அங்கு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அவரது சடலம் அங்கு எகிப்து நாட்டில் புதைக்கப்பட்டது.
.

எகிப்தை மிகவும் சிறு வயதில் ஆண்ட King Tutankhamen சாகும் போது
King Tutankhamen
வயது பதினேழுதான். அந்தக் காலத்தில் எகிப்தியர் மரணத்திற்குப்பின் வாழ்க்கை உண்டு என்று நம்பினபடியால், அந்த அரசன் மரித்த போது, தூய தங்கத்தில் செய்யப்பட்ட இரதங்களையும், ஆயிரக்கணக்கான தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களையும் கூட வைத்து புதைத்தனர். அந்த அரசனின் சடலம் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் தங்கத்தாலே செய்யப்பட்டு, அதுதங்கத்தாலான குகைக்குள், அது ஒரு தங்கத்தாலான குகைக்குள் என்று
அப்படியே மூன்று நான்கு தங்கத்தாலான குகைகளுக்குள் உள்ளே
வைக்கப்பட்டு இருந்தது. ஏனெனில் தங்கள் அரசன் அங்கு தன் வாழ்வை சந்தோஷமாய் கழிக்கும்படியாக அதை அவர்கள் அமைத்திருந்தனர். 1922ஆம் ஆண்டு ஹோவர்ட் கார்ட்டர் (Howard Carter) என்பவர் அதைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் 3000 ஆண்டுகள் அது அப்படியே வைக்கப்பட்டிருந்தது.


இந்த இரண்டு பேருடைய கல்லறைக்கும் தான் எத்தனை வித்தியாசம்?
Howard Carter
ஒருக் கல்லறை ஏதோ ஒரு இடத்தில் தூசி படிந்ததாக, கேட்பாரற்று, ஒரு மூலையில் இருக்கிறது. மற்ற கல்லறையோ ஆடம்பரமாக, எல்லா வசதிகளும் நிறைந்ததாக, செல்வாக்கு நிறைந்ததாக, எல்லாரும் வந்து கண்டு வியக்கும் வண்ணமாக உள்ளது. ஆனால் இந்த இரண்டு வாலிபர்களும் இப்போது எங்கே? என்றுப்பார்த்தால், தன்னை ஒரு இராஜாவாக, எல்லா சுகங்களையம் அனுபவித்த அரசன், கிறிஸ்து அல்லாத நித்தியத்திலே எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாதவனாக தன் நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறான். மற்றவரோ தன் செல்வத்தையெல்லாம் கிறிஸ்துவுக்காக இழந்தவராக, உண்மையான இராஜாவுக்கு உண்மையாய் ஊழியம் செய்து, நித்திய நித்தியமாய் தேவனோடு சந்தோஷமாய் தன் நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார்.
.

அரசன் டுட்டுவின் (King Tut) வாழ்க்கை சோகமானது. ஏனெனில் மிகவும்
தாமதமாக அவன் கண்டுக் கொண்டான், தான் கொண்டு வந்திருந்த எந்த
தங்கமும் செல்வமும் தன்னால் எங்கும் கொண்டு போக முடியாது, அதனால்
எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை. ஆனால் மற்றவரோ ‘
பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்;
அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர்
கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை’ என்ற சத்தியத்தை அறிந்தவராக தன்
பொக்கிஷத்தை பரலோத்தில் சேர்த்து வைத்தார். அதனால் தன் நித்தியத்தை
வெற்றியாக முடிவு செய்தவராக அவர் நித்தியநித்தியமாக வாழ்கிறார்.

Friday, July 13, 2012

Wednesday, July 11, 2012

மாறாத அழைப்பு

அமெரிக்காவின் நியூஜெர்சியில் 1270ஆம் ஆண்டு பாய்மரக்கப்பல் ஒன்று கடற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அநேகர் மாண்டனர். உயிர் தப்பிய ஒரு சிலரில் மரே என்ற குருவானவர் ஒருவரும் ஆவார். இதில் அவரது மனைவி, பிள்ளைகள் எல்லாரும் மரித்து விட்டார்கள். ஒரு புதிய தீவில் கரை சேர்ந்த அவரால் அந்த துயர சம்பவத்தை தாங்க முடியவில்லை. தான் அனாதை ஆவதற்கு ஆண்டவர்தான் காரணம் என்று ஆண்டவரை மறுதலித்து. அப்புதியத்தீவில் வாழ்நாளை கழிக்கவும், மனம் போல் வாழவும் தீர்மானித்தார்.
.
கலக்கம் நிறைந்தவராய் தெருவில் சென்றபோது ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அவன் அவரை நோக்கி, ' உமக்காக காத்து கொண்டிருக்கிறேன்' என்றான். 'என்னை உமக்கு தெரியுமா' என்று கேட்டார் மரே. 'ஐயா, இயேசுவை பற்றி நான் சிறிது அறிந்து வைத்துள்ளேன். என் மனைவி வேத வசனங்களை வாசித்து எனக்கு சொல்லுவாள். எனது வீட்டில்தான் சபையாக கூடி ஆண்டவரை ஆராதிக்கிறோம். ஆனால் வேதத்தை பற்றி போதிக்கவோ, பிரசங்கிக்வோ எங்களில் யாரும் கிடையாது. ஆகையால் எங்களோடு நிலையாக தங்கி இருந்து ஊழியம் செய்யும் போதகரை தாரும் என நீண்ட நாட்களாக ஜெபித்து வந்தோம். நேற்றிரவு எங்கள் சபையில் ஒருவருடைய தரிசனத்தில், 'கப்பற் சேதத்தில் தப்பி பிழைக்கும் குருவானவர் ஒருவரை உங்களுக்கு ஊழியராக அனுப்பியுள்ளேன்' என இயேசுகிறிஸ்து வெளிப்டுத்தினார். அதே போன்று நீங்கள் வந்துள்ளீர்கள்' என்றான். இதை கேட்ட மரே அவர்கள் கர்தருடைய வழிநடத்துதலை அறிந்து அங்கேயே தங்கி பணி செய்தார். தனக்கு வந்த பாடுகள், பிரச்சனைகளின் காரணத்தை இந்த தேவமனிதரால் அந்த பாடுகளின் நேரத்தில் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவற்றின் மத்தியிலும் தேவன் அவரை அழைத்த அழைப்பில் உறுதியாயிருந்தார். ஏனெனில் 'தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே' - (ரோமர் 11:29). மனிதன்தான் கர்த்தர் தன்னை அழைத்ததை மறந்து அல்லது பாடுகள் போராட்டங்கள் வரும்போது அவரது அழைப்பை அசட்டை பண்ணி விடுகிறான். ஆனால் தேவன் நம்மை ஒருவிசை அழைத்தால் அந்த அழைப்பு என்றும் மாறாததே! அல்லேலூயா!

சாத்தானுக்கு தெரியும்

ஒரு விவசாயியும் அவருடைய நண்பரும் காட்டில் வாத்துக்களை பிடிப்பதற்காக சென்றுக் கொண்டிருந்தனர், அவர்கள் தங்கள் பேச்சை கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விவசாயியின் நண்பர், ‘நீர் எப்போதும் உமக்கும் சத்துருவுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிக் கூறுகிறீரே, நான் ஒரு கிறிஸ்தவன் கூட இல்லை. ஆனால் எனக்கு அந்த மாதிரி போராட்டங்கள் எதுவுமே இல்லையே’ என்றுக் கூறினார். அதற்கு அந்த விவசாயி சொனனார், ‘நாம் இப்போது வேட்டையாடப்  போகிறோம், அதில் இரண்டு வாத்துக்கள் அடிபட்டு ஒன்று இறந்துப் போகிறது, மற்றது தப்பி ஓடப் பார்க்கிறது, இதில் எதை நீர் பின்தொடருவீர்’ என்றுக் கேட்டார். அதற்கு நண்பர், ‘தப்பியோடப் பார்ப்பதைத்தான், ஏனென்றால், இறந்துக் கிடப்பதை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமே!’ என்றுக் கூறினார். அப்போது விவசாயி, ‘சாத்தானுக்கு தெரியும், நீர் இறந்துப் போன வாத்து என்று’
என்றுக் கூறினார்.

Tuesday, July 10, 2012

Hendry ford - The creator

Henry Ford and the Quadricycle, 1896.
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் 
மேலை நாடுகளில் அதிவேகமாக கார்களை ஓட்டி செல்லக்கூடிய பெருவழிச்சாலைகள் உண்டு. வாகனம் பழுதாகி விட்டால், ரோடை அடைத்து கொண்டு இராமல், ரோட்டில் பழுதுசெய்யும் பகுதியில் வாகனத்தை நிறுத்தி பழுது செய்து கொள்ள வேண்டும். இவ்விதமாக சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று இயந்திர கோளாறினால் நின்று விட்டது. ஓட்டுனர் காரை சரி செய்ய பல முயற்சிகளை எடுத்து கொண்டிருந்தார்.
.
சற்று நேரத்தில் அந்த வழியே வந்த வயது முதிர்ந்த ஒருவர், தன் காரை நிறுத்தி, 'ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டார். அதற்கு ஓட்டுனர் 'ஆமாம்,
என்னவென்று தெரியவில்லை, நடுரோட்டில் காலை வாரி விட்டது' என்றார். முதியவர், 'நான் ஏதாவது உதவி செய்யலாமா?' என்று கேட்டார். ஏற்கனவே எரிச்சலிலிருந்த ஓட்டுனர், 'உங்கள் வேலையை பார்த்து கொண்டு போங்கள்' என்று கூறிவிட்டு, காரை இயக்குவதில் மும்முரமாய் ஈடுபட்டார். ஆனால் கார் இம்மியளவும் அசையவில்லை.
.
அவைகளையெல்லாம் கவனித்து கொண்டிருந்த அம்முதியவர், 'நான் உங்களுக்கு உதவாவிட்டாலும் நான் சொல்வதையாவது கேளுங்கள்' என்று கூறி, ஒரு சில பழுது நீக்கும் முறைகளை சொல்லி கொடுத்தார். அதன்படி செய்தபின் கார் ஸ்டார்ட் ஆனது. உடனே, அம்முதியவரை பார்த்து 'நீங்கள் யார்' என்று ஓட்டுனர் கேட்டார். 'நான்தான் இந்த காரை உருவாக்கிய போர்ட் (
Ford). வயதாகி விட்டதால் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறேன்' என்றார். தனது அலட்சியமான பேச்சிற்கு மன்னிப்பு கேட்டு சென்றார் ஓட்டுனர்.