Friday, July 26, 2013

கோபம் அன்பை கொல்லும்


ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய் குட்டியை வாங்கி வந்தனர், அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர்.

அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டியது.

நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான்.

இப்போதெல்லாம் அந்த குழந்தையுடன் தான் அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர் .நாய் இப்போதெல்லாம் தனிமையிலே தன் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் வளர்த்த நாய்க்கு அந்த குழந்தை மேல் பொறாமை உண்டாயிற்று

ஒரு நாள் அந்த தம்பதியினர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு மாடியில் நின்று பேசி கொண்டு இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம் கேட்டதும் மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர். படி அருகில் நாய் வாயில் ரத்தக்கறையுடன் நின்று கொண்டு இருந்தது.இதைப் பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார்.

பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.குழந்தையின் அருகில் நல்ல பாம்பு இரண்டு துண்டுகளாக கிடந்தது .குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர்த்த நாய் அந்த பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில் இருந்தது என்று அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது.

தங்கள் குழந்தையை காப்பாற்றிய நாயை அநியாயமாக கொன்று விட்டனே என்று கதறி அழுதனர்.

முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு.

எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும் நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.




www.dailymail.co.uk

Saturday, July 20, 2013

நாம் எதை நேசிக்கிறோம்? - சிந்திக்க வேண்டிய கதை

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..

கடவுள் இல்லை என்று சொன்னவர் கிறிஸ்தவரானார்

அமெரிக்காவை சேர்ந்தவர் லூவாலஸ். இவர் இயேசுகிறிஸ்து என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்குப் போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தின் பெரும் பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே முடியவில்லை.ஏனெனில் அவருக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது, வாழ்ந்தது, அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. எனவே இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்ட பென்ஹர் (Ben-Hur: A Tale of the Christ) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

அந்நூல் பின்பு நான்கு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு புகழடைந்தது.
Lew Wallace - April 10, 1827 – February 15, 1905) - இவர் ராபட் இங்கர்சால் (Robert Ingersoll)என்னும் பிரபல நாத்திக அமெரிக்கரின் உற்ற நண்பர் ஆவார்.நியூமெக்ஸிகோ பகுதியின் ஆளுநராய் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர்.

நவீன நோவாவும் அவர் பேழையும்

டச்சுக்காரரான ஜோகன் ஹூபர் (Johan Huibers) நெதர்லாந்தில் தன் சொந்த ஊரான சாஜென் (Schagen) என்னுமிடத்தில் ஒரு அழகிய பேழையை கட்டியிருக்கிறார்.230 அடி நீளமும் 43 அடி உயரமும் 43 அடி அகலமுமாக இது கட்டப்பட்டுள்ளது. வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது போல கொப்பேர் மரத்தால் இது கட்டப்படாமல், ஸ்டீல் அடிவாரமும் சேடர் மற்றும் பைன் மரங்களைக் கொண்டு இது கட்டப்பட்டுள்ளது. மூன்றடுக்கு மாடி கட்டடத்தின் உயரத்தில் இருக்கும் இந்தப் பேழையினுள் நிஜ மிருக அளவுகளில் பொம்மைகளை செய்து வைத்துள்ளனர். இப்படி ஒட்டகச்சிவிங்கிகள், யானைகள், சிங்கங்கள், முதலைகள், வரிக்குதிரைகள் என பல்வேறு மிருகங்களை ஜோடு ஜோடாக நிஜம் போல ஆங்காங்கே நிற்க வைத்துள்ளனர்.ஒரு காஃபி ஷாப்பும்,கண்காட்சியும்,வேறு பல வேதாகம கதைகளை விளக்கும் சித்தரிப்புகளும் அங்கே உள்ளன. முழுக்க முழுக்க சொந்தமாகவே தற்கால உபரகரணங்களை பயன்படுத்தி இந்த மிதக்கும் பேழையை இவர் கட்டி முடித்துள்ளார். 17 வயதான மகன் ராய் மட்டும் கட்டுமானத்தின் போது அவ்வப்போது சில உதவிகள் செய்தாராம்.2005 மே மாதத்தில் இதை கட்டத்துவங்கி மே 2007 வாக்கில் கட்டி முடித்துள்ளார். இப்போது இது பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பேழையின் வழி சுவிசேசத்தை கேள்விப்பட்டு ஏற்கனவே அநேகர் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் வந்துள்ளனராம். ”மக்கள் ஆலயங்களுக்கு வருவதை நிறுத்தி விட்டால் நாம் அவர்களிடம் சுவிசேசத்தை சேர்க்க தோதாக பிற வழிகளை தேட வேண்டும்” என்கிறார் ஜோகன் ஹூபர்.”இன்னொரு ஜலப்பிரளத்தை நான் எதிர்பார்கவில்லை.ஆனால் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது இன்னும் 50 வருடமாகலாம் அல்லது நூறு வருடமாகலாம் யாருக்கும் தெரியாது” என்கிறார் இவர்.உண்மையில் நோவாவின் பேழை இந்த டச்சுக்காரரின் பேழையை விட ஐந்துமடங்கு பெரியதாகும்.வேதத்தின் படி நோவாவின் பேழை 492 அடி நீளமும் 82 அடி உயரமும் 49 அடி அகலமுமாக இருந்திருக்க வேண்டும்.அதே அளவில் பெரிதாக இன்னொரு பேழையை கட்ட இரண்டாவது புராஜெக்ட்டை இப்போது தொடக்கியிருக்கிறார் ஜோகன் ஹூபர். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது தனது பேழையை தேம்ஸ் நதியில் ஓட விட்டு லண்டன் குழந்தைகளுக்கு வேதாகம கதை சொல்ல இவருக்கு விருப்பமாம். லண்டன் நகர மேயருக்கு அனுமதி கேட்டு விண்ணப்பக் கடிதம் எழுதியிருக்கிறார்.எப்படியாகிலும் கர்த்தரின் நாமம் மகிமை பட்டால் சரி.

I கொரிந்தியர் 9:22 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்

பாவத்தை வளர்க்காதே - அது நம்மை கொல்லும்

ஒரு காட்டில் ஆடு ஒன்றுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவைகளுக்கு நள்ளி, புள்ளி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தது.  குட்டிகளும் வளர்ந்து சுயமாக வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கச் சொல்லித் தாய் ஆடு அனுப்பி வைத்தது. இரண்டும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தன.
நள்ளி இரக்க குணமுடைய அறிவாளி.. மற்றவர்களைக் கவரக்கூடிய பேச்சுத் திறமையும் அதற்கு இருந்தது. அன்பினால் கொடிய விலங்குகளையும் நண்பர்களாக்கி, காட்டில் யாரும் பயமில்லா வாழ்க்கை வாழ எண்ணியது. முதலில் அதனுடைய போதனையைச் சிறிய பிராணிகளிடம் ஆரம்பிக்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனுடைய கனிவான அர்த்தமுள்ள சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்கள் அவைகளைக் கவர்ந்து இழுத்தன.
தினமும் நள்ளி வீட்டின் முன் உபதேசம் நடக்கும்.  நாளுக்கு நாள் பல புதிய பிராணிகள் சேர்ந்து கொண்டே இருந்தன. ஒரு நாள் பெரிய ஓநாய் ஒன்று அங்கு வந்தது. அதைப் பார்த்து மற்ற பிராணிகள் பயந்து நடுங்கின. நள்ளி தன் கவர்ச்சிப் பேச்சால் அவைகளுடைய பயத்தைப் போக்கியதுடன் ஓநாயைத் தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டது.. திருப்தியாகச் சாப்பிட்டு வந்த ஓநாய்க்குப் பசியில்லை. நள்ளியின் பேச்சை ரசித்துக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கி ஓநாயை அனுப்பி வைத்தது.
எப்பொழுது வேண்டுமானாலும் தாழ்ப்பாள் போடாத தன் வீட்டுக்கு வரச் சொன்னது..
இந்த அதிசயத்தைப் பார்த்த மற்ற பிராணிகள் நள்ளியைப் பாராட்டின. ஆனால் புத்திசாலியான புள்ளி அசைவ உணவால் வாழும் மிருகங்களின் ஆபத்தை எடுத்துக் கூறியது. ஆனால், நள்ளி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அன்பு கலந்த உபதேசத்தால் கொடிய மிருகங்களின் உணவுப் பழக்கத்தையே மாற்றி விடப்போவதாகச் சொன்னது. 'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது நள்ளி.
ஒரு நாள் ஓநாய்க்கு இரை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்ததால் அதற்கு அகோரப் பசி உண்டான போது நள்ளியின் நினைவு வந்தது. 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பது போல் அன்று இரவு எல்லோரும் தூங்கிய பின் நள்ளி வீட்டுக்குச் சென்றது. தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்து உள்ளே சென்றபோது நள்ளி நன்றாக துங்கிக் கொண்டிருந்தது.
பாவம் நள்ளி, சிறிது நேரத்தில் ஓநாய்க்கு இரை ஆகிப்போனது..
நள்ளியின் அன்பும், அருளும், பண்பும், பாசமும், இரக்க குணமும் பயனில்லாமல் போய்விட்டன. அடுத்த நாள் புள்ளி நள்ளி வீட்டிற்கு வந்து அங்கிருந்த எலும்புகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அதற்கு ஓநாய் மேல் சந்தேகம் வர, அதனால் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அறிவோடு சிந்தனை செய்ய ஆரம்பித்தது.
நள்ளியைச் சாப்பிட்ட ஓநாய்க்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. புள்ளியையும் கபளீகரம் செய்ய இரவில் அங்கு வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக இதைப் புள்ளி கவனித்தது. கதவு தாழ்ப்பாள் போட்டிருந்ததால் ஓநாய்க்கு உள்ளே போக முடியவில்லை. ஆனால் கதவைத் தள்ளிப் பார்ப்பதைப் பார்த்த புத்திசாலியான புள்ளி அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி கண்டுபிடித்தது.
மறு நாள் இரவு புள்ளி கதவைத் தாள் போடாமல் ஓநாய் நுழையும் இடத்தில் கருப்பான சுறுக்குக் கயிறை வைத்து அதன் மறு நுனியை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது. கதவைச் சிறிதாகத் திறந்து வைத்து வெளியே மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டது..
எப்பொழுதும் போல் ஓநாய் அன்றும் புள்ளி வீட்டுக்கு வந்தது. கதவு திறந்திருப்பதைப் பார்த்தவுடன் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. புள்ளியைக் கபளீகரம் செய்ய அவசரமாக உள்ளே நுழைந்தது. கறுப்பாக இருந்த சுருக்குக் கயிறு அதன் கண்ணில் படவில்லை. கழுத்து நன்றாக மாட்டிக் கொண்டு கயிறு இறுக்க ஆரம்பித்தது. பயந்துபோய் ஓநாய் துள்ளத் துள்ள, கழுத்தில் இறுக்கம் அதிகமாகி விட்டது. குரல்வளை நசுங்கி மூச்சுத் திணறி இறந்து போனது.. அன்றிலிருந்து ஓநாய் பயமில்லாமல் மகிழ்ச்சியாகப் புள்ளி வாழ்ந்தது.
நள்ளியின் அன்பு அதைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடப் பயன் படவில்லை. ஆனால், புள்ளிக்கு அதனுடைய புத்திசாலித்தனம் உதவியது. அதனால் புத்திசாலித்தனத்தோடு அன்பு இருந்தால்தான் நாமும் வாழலாம்; மற்றவர்களையும் திருத்தி வாழ வைக்க முடியும்.
கதையை கவனமாக கேட்ட சந்தர் புத்திசாலியாக இருப்பதோடு நல்லவனாகவும் இருக்கப் போவதாகச் சொன்னான். புவனாவும் அதை ஆமோதிக், பாட்டி அவர்களை அணைத்து உச்சி முகர்ந்தாள். அன்பு ஸ்பரிசம் அனைவரையும் விரைவில் ஆனந்தமாகத் தூங்க வைத்தது.

கோபம் நம்மை அளிக்கும் - வேடிக்கையான கதை

அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான்.

அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது.

உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று

கடவுளும் வந்தார்...!

பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.

அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.

தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.

இதுதான் பக்தன் கேட்ட வரம்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.

பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.

இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.

சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது.

வருத்தம் வராது.

சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.

பக்தன் திரும்பி பார்த்தான்.அங்கே நின்றது சிங்கம்.

பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து.

கடவுள் சிரித்தார் … ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.

சரி.. எனக்கு தெரிந்த வரையில் நீங்க கோவக்காரர் இல்லை… சரிதானே.
மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.

உன்னை வழிநடத்துவது யார்? வேடிக்கையான கதை

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும்.  ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...
நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில்
சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான்.  நமக்கு ஒரு ‘வால்’  கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.
இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
இந்த மனிதனை இழுத்துக்  கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.
விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும்  திசையிலேயே மிதந்து போய்க்
கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

பாவத்தின் அழைப்பு அழிவு

நரி ஒன்று தாகத்தால் தவித்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது…? தண்ணீரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது.

கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.

‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’ நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.அங்கு நரி இருப்பதைக் கண்டது.

“அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது. “நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்…………….!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்

சரித்திரம் தேவனுடைய கைகளில் - மாவீரன் அலெக்ஸாண்டர்

மாவீரன் அலெக்ஸாண்டரை பற்றி அறியாதவர்கள் யாரும் சரித்திரம் படித்தவர்களாக இருக்க முடியாது. தனது இள வயதில் மேசிடோனியாவின் அரசனான அவர், உலகத்தையே தன் காலின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற தாகத்தோடு செயல்பட்டவர். பத்து வருடங்களில் உலகத்தை வென்று கொண்டே வந்தவர். அப்படி அவர் ஜெயித்து கொண்டே வந்தபோது, ஒவ்வொரு நாட்டிலும் பேசும் மொழிகளை குறித்தும், அவர்களுடைய கலாச்சாரங்களை குறித்தும் அவர் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார். ஏனெனில் அவர் வெற்றி எடுக்கும் நாடுகளில் எந்த மொழியில் பேசுவது, எப்படி செல்வது என்று யோசித்து கொண்டிருந்தார். அதன்படி, அவர் தான் வெற்றி கொள்ளும் நாடுகளில் காலனிகளை அமைத்து, அங்கு கிரேக்க கலாச்சாரங்களை கற்பிக்க ஆரம்பித்தார்.
.
இந்த காரியங்கள் தேவனால் நியமிக்கப்பட்டது என்ற அலெக்சாண்டருக்கு தெரியாது. அவர், தான் உலகத்தையே வென்று, எல்லாரையும் தன் காலின் கீழ் கொண்டு வருவதாக நினைத்து கொண்டிருந்தார்.
.
தனது திட்டத்தின்படி காலனிகளில் அவர் கிரேக்க மொழியை கற்று கொடுக்க திட்டங்கள் தீட்டி, அதன்படி அவர் ஆட்களை கொண்டு அந்த இடங்களில் கிரேக்க மொழியை கற்று கொடுத்து, மக்கள் அதை பயில ஆரம்பித்தனர். அதனால் தான் செல்லும் இடங்களில் கிரேக்க மொழியில் பேச முடியும் என்பது அவர் எண்ணம். மட்டுமல்ல, அந்த நாடுகளில் முக்கிய பாதைகளையும் அவர் உண்டாக்க ஆரம்பித்தார். தான் பயணம் செல்லும்போது, தனக்கு வசதியாக இருக்கும் என்று காடுகளை வெட்டியும், ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளை இணைக்கும் பாதைகளை போட ஆரம்பித்தார். அவர் தான் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த காரியங்களை செய்தார். ஆனால் சர்வ ஞானியான நம் தேவன் அவற்றை குறித்து வேறு திட்டம் வைத்திருந்தார்.
.
அதன்படி, தனது 33 ஆவது வயதில் தான் மரிக்கும்முன், உலகமெங்கும் சுவிசேஷம் பரவுவதற்கான முக்கிய இரண்டு பணிகளை அவர் செய்து முடித்திருந்தார். அதாவது மொழி, மற்றும் நாடுகளுக்கு செல்வதற்கான சரியான பாதைகள்! கிறிஸ்துவுக்கு முன் 356 ஆம் ஆண்டு பிறந்த அவர், ராஜாதி ராஜாவின் சுவிசேஷம் பரவுவதற்கான பாதையை செம்மையாக்கினவராய் மாறினார். அவர் தான் செய்வது எதற்காக என்று அறியாதபடி செய்தார். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன் அவற்றை தமது குமாரனை உலகத்திற்கு அனுப்புவதற்கான நோக்கத்தை உலக மக்கள் அறியும்படியாக அதை தமக்கு சாதகமாக்கினார்.
.
காலம் நிறைவேறினபோது, கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து, நமக்கு இரட்சிப்பை, சிலுவையில் தமது சொந்த இரத்தத்தை சிந்தி வாங்கி கொடுத்து, அந்த சுவிசேஷத்தை சுவிசேஷகர்கள் உலகமெங்கும் பிரசித்தப்படுத்தும்படி, நல்ல பாதையையும், மொழியையும் அலெக்சாண்டர் மூலமாக செய்து கொடுத்தார். உலகத்தின் சரித்திரம் தேவனுடைய கைகளில்! அவர் அறியாமல் ஒரு அணுவும் அசைய முடியாது. அவர் தீமையையும் நன்மையாக மாற்றுகிற தேவன். ஒரு மனிதன் தன் பெருமைக்காக, தன் பெயர் நிலைத்திருக்கும்படியாக செய்த காரியங்களை நமது தேவன் தமது குமாரனின் பெயர் அறியாத மக்களுக்கு அறிவிக்கும்படியாக, தெரியாத, இருளில் வாழும் மக்களுக்கு தெரிவிக்கும்படியாக மாற்றினார். அல்லேலூயா!

சிறு காரியங்களிலும் உண்மை - சீனா கிறிஸ்தவர்

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக மிக கொடூரமாக ஆட்சி நடத்திய காலத்தில் கிறிஸ்தவர்கள் தேச துரோகிகளாக கருதப்பட்டனர். எப்படியும் சிறிய குற்றத்தையாவது அவர்களிடமிருந்து கண்டு பிடித்து அதை மிகைப்படுத்தி சிறையில் அடைத்தனர். கிறிஸ்தவர்கள் என சந்தேகப்படுகிறவர்களையும் இரகசிய இராணுவ பிரிவு விழிப்போடு கண்காணித்தது.
.
இப்படிப்பட்ட சூழலில் கிராமத்திலுள்ள ஒரு கிறிஸ்தவரது வீட்டிலிருந்து பெட்டை கோழி ஒன்று வெளியே வந்தது. அதன் காலில் ஒரு தாள் சுற்றி கட்டப்பட்டிருந்தது. இதை கண்ட கண்காணிப்பாளர்கள், 'இவன் நம்முடைய கழுகு கண்களையும் தாண்டி யாருக்கோ இரகசிய செய்திகளை அனுப்புகிறான்' என்ற ஆர்வத்தில் கோழியை விரட்டி பிடித்து அதன் காலிலுள்ள தாளை பிரித்து படித்தனர். அதில், 'இந்த கோழி யாருடையது என்று தெரியவில்லை. இன்று அது என் வீட்டிற்குள் வந்து முட்டையிட்டு விட்டது. இதன் உரிமையாளர் வந்து முட்டையை பெற்று சொள்ளுங்கள்' என்று எழுதி அவரது பெயரையும் வீட்டு எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். குற்றத்திற்கு ஆதாரம் தேட சென்ற அவர்கள் அவரது உண்மைக்கு ஆதாரம் கண்டு வியந்தனர் ஒரு முட்டையை கூட தனக்கென்று எடுத்து கொள்ளாமல் அதை உரிமையாளரிடம் சேர்க்க முயற்சி எடுக்கிறானே என ஆச்சரியப்பட்டனர். அவர் மீதான கண்காணிப்பை விட்டு விட்டனர்.

புத்தியுள்ள ஸ்திரீ

ஒரு வீட்டில் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அவர்களில் ஒரு சகோதரி கர்த்தருக்கு பயந்தவள். மற்றவள் பெயரளவில் கிறிஸ்தவளாக வாழ்ந்தவள். கர்த்தருக்கு பயந்த சகோதரி எந்த காரியத்தை செய்தாலும் கர்த்தரிடம் ஜெபித்து, அவருடைய சித்தத்திற்காக காத்திருந்து அதன்படி செய்கிறவளாக இருந்தாள். ஆனால் மற்றவளோ, தன் மனதிற்கு ஏற்றபடி செய்து வந்தாள்.
.
இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. கர்த்தருக்கு பயந்த சகோதரி, ஆரம்பத்திலிருந்தே தன் கணவனோடு பேசி, நம் குடும்பம் இப்படித்தான் இருக்க வேண்டும், கர்த்தருக்கு பயப்படுகிறவர்களாக, ஒழுங்காக சபைக்கு செல்பவர்களாக, தசம பாகத்தை என்ன சம்பாத்தியம் வந்தாலும் ஒழுங்காக கொடுப்பவர்களாக, உலக காரியத்திற்கு அந்நியர்களாக வாழ வேண்டும் என்று சொல்லி, தன் கணவனையும் கர்த்தருக்குள் நடத்தினவளாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தாள்.
.
மற்றவள் தன் கணவனோடு உலக உல்லாசங்களிலும், உலக காரியங்களிலும் ஈடுபட்டு, உலக இன்பங்களை அனுபவித்தாள். ஒரு நாள் வந்தது. அவளோடு கர்த்தர் இடைபட்டார். கர்த்தரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள். தன் கணவனையும் அவள் கர்த்தரிடம் கொண்டு வரும்படி அவரிடம் பேச ஆரம்பித்தாள். ஆனால் கணவரோ, 'ஓ, நீ எப்படி வாழ்ந்தாய் என்று எனக்கு தெரியும். இப்போது திடீரென்று என்ன பெரிய பக்தி வாழ்கிறது?' என்று சொல்லி உலகப்பிரகாரமாகவே வாழ்ந்து வந்தார். எத்தனையோ நாள் கண்ணீரோடு அவள் ஜெபித்தும் அந்த மனிதர் மாறவில்லை. கடைசியில் ஒரு நாள் கர்த்தர் அவரை சந்தித்தார். அதுவரை அவள் வாழ்வு அவளுக்கு நரகமாகவே இருந்தது.

Tuesday, July 9, 2013

உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்

பலர் பரிசுத்த வேதாகமத்தை படிப்பதில்லை மாறாக
கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்

மத்தேயு 10: 28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

முதல் கிறிஸ்தவர் கொல்லப்பட்ட, ஒரிசா கந்ரஹம் பகுதியில் கிறிஸ்தவர்கள் தங்கள் இடிந்து போன வீடுகள் முன்பாக இயேசு கிறிஸ்துவை ஆடி பாடி கொண்டாடுகின்றனர். இப்பகுதி கலவரத்தில், கொல்லப்பட்டார்.

இக்கலவரத்தில் முதன் முதலாக எரிக்கப்பட்டவர் சகோதரர் ரசனந்த் பிரதான். இவருடைய சகோதரர் இரபின்றா பிரதான் - ஐ வீட்டோடு வைத்து எரித்து விட்டார்கள். தேவனின் அநாதி தீர்மானத்தினால் உயிர் பிழைத்த இவர் கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தை அறிக்கையிட தன் கிராமத்து மக்களோடு தயாராகி வருகிறார்கள்.

"என் சகோதிரர் தன் உயிரை இழந்தது வீணாய் போய்விடவில்லை. புதிதாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எங்கள் சபை ஆராதனையில் கலந்து கொண்டுள்ளனர்" என்று கூறுகிறார்.

இந்த பகுதியில் பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் தீக்கிரையக்கபட்டன.. ஆனாலும் உயிர் பிழைத்த கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சொந்த குடும்பத்தில் பலரை இழந்தாலும் கிறிஸ்துவை இழந்து விடவில்லை. மறுதலிக்கவும் இல்லை. தொடர்ந்து தேவனை ஆராதித்து வருகின்றனர்.

இவர்களின் விசுவாசத்தை, தைரியத்தை, கொன்றவர்களை மன்னிக்கும் தேவ அன்பை கண்ட பல இந்து குடும்பங்கள் இன்று இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டுள்ளனர். சிலுவையின் அன்பு இன்றும் பல கலவரக்காரர்களை மாற்றி வருகிறது.

தேவனுக்கே நன்றி. அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. கிறிஸ்துவுக்கு பின் இதுவரை பல கோடிகணக்கான பேர் கொல்லப்பட்டும் கிறிஸ்தவம் இன்றும் மேலோங்கி நிற்ப்பதற்கு காரணம் சிலுவையின் அன்பை ஒவ்வொரு கிறிஸ்தவனும் உலகுக்கு வெளிபடுத்தி கொண்டிருக்கிறான். இந்த தேவ அன்பு தான் இன்று பல புறமதத்தை சேர்ந்தவர்களை கிறிஸ்துவின் மந்தையில் இணைத்து வருகிறது.

இந்த அன்பிற்கு நீங்களே சாட்சி. இந்த தெய்வத்திற்கு நம் வாழ்க்கை சாட்சி. பலர் பரிசுத்த வேதாகமத்தை படிப்பதில்லை. ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்களை, அவர்களின் வாழ்க்கையை படித்து வருகின்றனர். சாட்சியாக வாழ்வோம். தேவனின் நாமத்தை உயர்த்துவோம். ஆமென்.

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

கமல் சலீம் - தீவிரவாதி விசுவாசியான சாட்சி

கமல் சலீம் - ஓர் சவுல் மீண்டும் நடுரோட்டில் இயேசுவை கண்ட அதிசயம்
முன்னாள் இஸ்லாமிய தீவிரவாதி
இன்றைய தீவிர விசுவாசி

1957 ஆம் ஆண்டு லெபனானில் பிறந்த இவர் ஒரு சுன்னி முஸ்லிம் ஆவார். அதோடு சலீம் ஒரு தீவிர யூத விரோதியாவர்.

இன்றோ, கமல் சலீம் அரசியல்வாதிகளுக்கும், ராணுவ தலைவர்களுக்கும், உள்துறை நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வரவேற்கும் பண்புடைய முகமதிய மக்களுக்கும் போதித்து வருகிறார்.

4 வயது குழந்தையாய் இருக்கும் போதே இவருடைய தாயார் அமெரிக்கர்களையும், யூதர்களையும் கொன்று குவித்து முகமதிய சமயத்திற்காக உயிர் துறக்கும் தியாகியாக மாற வேண்டும் என்று போதிக்கபட்டார்
7 வயதில் முதற் முயற்சியாக ஆயுதங்களை கடத்தும் குழந்தையாக அப்போதைய பாலஸ்தீன தீவிரவாத தலைவர் யாசர் அராபாத்துக்காக செயல்பட்டார்.
15 வயதில் வெடிமருந்துகளில் மன்னனான இவர், லிபிய முன்னாள் அதிகாரியான முகமது கடாபியின் ஆட்சிகாலத்தில் அங்குள்ள பாலைவன தீவிரவாத முகாம்களில் உள்ள தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தார்.

வாலிபனான பொது இவரின் தீவிரவாத மூர்க்கம் அதிகரித்தது. பாரிஸ், லண்டன், ஆப்கானிஸ்தான், செல்வசெளிபுள்ள அரபு ஷேக்குகளிடம் சென்று தீவிரவாத இயக்கங்களுக்கு தேவையான நிதிகளை திரட்டி வந்தார். உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதே இதன் அடிப்படை. அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள நலிந்த மக்களை தன்னுடைய திறமையால் முகமதிய மதத்திற்கு மாற்றினார்.

இதன் மத்தியில் ஓர் நாள் கொடுமையா விபத்தொன்றில் சிக்கினார். இவர் இவரின் இயக்கங்களுக்கு பணம் திரட்டிய போதும் தன்னை பற்றியோ, குடும்பத்தை பற்றியோ கவலை பட்டதில்லை. மருத்துவ காபீடோ, குடும்பத்தில் போதிய பணமோ இல்லாததினால் படுத்த படுக்கை ஆனார். இவரை கவனிக்க ஆளில்லாமல் மிகவும் வருத்தப்பட்டார். இவருடன் பிறந்தவர்கள் 13 பேர்.

கிறிஸ்தவர்களின் அன்பு இவரின் மனதை மாற்றியது. இவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தேவனை அதிகமாக நேசிப்பவர். இவரை காபற்றின கிறிஸ்தவர் கமல் சலீமை தன்னுடைய வீட்டில் தங்க சொன்னார். கமல் சலீம் குணம் அடைய கிறிஸ்தவ கூடுகைகளில் ஜெபம் செய்யப்பட்டது. இவருக்காக காணிக்கையும் எடுத்தார்கள். இதை பார்த்த கமல் சலீமின் மனம் உடைந்தது. அல்லாவிடம் ஜெபம் செய்தார். தீவிரவாத முகாம்களில் அன்பை பற்றி போதிதிராத காரணத்தினால் இவர் இகிரிஸ்தவரின் அன்பை புரிந்து கொள்ளவில்லை. ஏன்? அல்லா தன்னை கைவிட்டு விட்டாரோ? ஏன் என்னை இனிலமைக்கு ஆளாக்கினார் என்று இவர் கேள்விக்கு அல்லாஹ்விடம் இருந்து பதில் வரவில்லை.
"அல்லாஹ், என்னை ஏன் எதிரிகள் கைகளில் ஒப்படைத்தாய்? இவர் அல்லாஹ்வின் அற்புதத்தை பார்க்க விரும்பினார். "அல்லாஹ்.. நீர் இருப்பது உண்மையானால், நான் உன் குரலை கேட்க வேண்டும்" என்று கதறினார். ஒன்றும் நடக்கவில்லை.

அநேரத்தில் இவரின் மனதில் "ஏன் நாம் ஆபிரகாமின் தேவன், இசாக்கின் தேவன், யாகோபின் தேவனை கூப்பிடகூடாது?" என்ற கேள்வி எழுந்தது. அதி முதல் 'யேகோவா தேவனை" நோக்கி கூப்பிட ஆரம்பித்தார். அப்போது ஆணிகள் கடாவபட்ட இரு கரங்கள் இவருக்கு முன்பாக பயங்கர பரிசுத்த தேவன் காண்பித்தார்.

இயேசு கிறிஸ்து கமல் சலீமிடம் பேச ஆரம்பித்தார். அவரின் இனிய குரலை முதன் முதலாக கமல் சலீம் கேட்டார். பரிசுத்த தேவன் தான் கமல் சலீமை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதை அன்போடு, கனிவோடு பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு கமல் சலீமின் காயங்கள் முழுவதும் ஆறிப்போனது. அதிசயத்தின் தேவன் மீண்டும் ஓர் சவுலை பவுலாக மாற்றினார். அல்லேலூயா.... ஆமென்..


வேதாகமத்தை வாசிக்க வாசிக்க தேவன் தன்னிடம் பேசுவதை உணர்ந்தார். இன்று கமல் சலீம் அரசியல்வாதிகளுக்கும், ராணுவ தலைவர்களுக்கும், உள்துறை நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வரவேற்கும் பண்புடைய முகமதிய மக்களுக்கும் போதித்து வருகிறார்.

அன்பார்ந்த கிறிஸ்தவ விசுவாசிகளே, இவரை போன்ற ஆயிரம் ஆயிரம் சாட்சிகள் நம்மை சுற்றிலும் உள்ளன. ஜெபியுங்கள். அன்பு கூறுங்கள். தேவன் உங்கள் அருகில் உள்ள அனைவரிடமும் பேச முடியும். நம்மை முழுவதுமாக தாழ்த்துவோம்.

எபிரெயர்.12: 1. ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

இரத்த சாட்சி - சவுதி அரேபியாவில் விழுந்த கோதுமை மணி



சவுதி அரேபியாவில் விழுந்த கோதுமை மணி
“Oh history record and witnesses witness (that) we are Christians walking on the path of the Messiah.” - Fatima Al-Mutairi

"வரலாறுகளும், சாட்சிகளும் நாங்கள் கிறிஸ்தவர்கள் (இயேசு கிறிஸ்து) மேசியாவின் வழியில் நடப்பவர்கள் என்று சாட்சி கூறும்" இது பாத்திமா அல் முதைரி எழுதின ஓர் கவிதையில் இருந்து எடுக்கப்பட்டது.

சவுதி அரேபியா கிழக்கு பிரதேசம், புரய்தஹ்வை சேர்ந்த முகமதியர் ஒருவர், தன் சொந்த தங்கை பாத்திமா அல் முதைரி யை சில நாட்களாகவே சந்தேகப்பட்டு வந்தார். பாத்திமா அல் முதைரி அவர்கள் அடிக்கடி கடவுளை பற்றி தன் குடும்பத்தாருடன் கருத்தை பகிர்ந்துள்ளார். இதனால் பாத்திமா அல் முதைரி வின் சகோதிரர் இவருடைய கணினி (கம்ப்யூட்டர்), புத்தகங்களை தோண்ட ஆரம்பித்தார். அப்போது அவருக்கு சில பரிசுத்த வேதாகமத்தின் வசனங்கள், இயேசு கிறிஸ்துவை பற்றின காரியங்கள் மற்றும் பாத்திமா அல் முதைரி வின் கணினியில் ஓர் சிலுவையும் இருந்துள்ளது. இதை பற்றி பாத்திமாவிடம் விசாரித்தார். கடும் கோபம் வந்தது. பாத்திமாவை ஓர் அறையில் அடைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.

தனக்கு ஏதோ நிகழபோகிறது என்று புரிந்துகொண்ட பாத்திமா அல் முதைரி தன் கணினியை எடுத்து தன் கடைசி கடிதத்தையும் கவிதையையும் தேவனுகேன்று எழுத ஆரம்பித்தார்.
அக்கடிதத்தில் தனக்கும் குடும்பத்தாருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. "நான் மிகுந்த நெருக்கத்தில் இருக்கிறேன்."மாறிவிடு, இல்லையென்றால் குற்றவாளியாவாய்" என்று சகோதிரர் மிரட்டினார். "என் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படுவிட்டன" என்று நான் கூறினேன். பிறகு எனக்கு தெரியாமல் என் சகோதிரர் கணினியை பார்த்து நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினதை கண்டுபிடித்து விட்டார். நான்கு மணிநேரம் இந்த அறையில் அடைபட்டு கிடப்பது எனக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் "கர்த்தர் என்னோடு இருக்கிறார். அவர் என் வெளிச்சமும், ரட்சிப்புமானவர். யாருக்கு அஞ்சுவேன்?"

இது கடைசியாக பாத்திமா எழுதின கடிதம்.
இவர் எழுதின கவிதையிலிருந்து (http://gch1.org/ar)ஒரு சில வரிகள்
"ஒ முகமதியர்களே, தேவன் உங்களை வழிநடத்தட்டும்
மற்றவர்களை நேசிக்க உங்கள் இருதயத்தில் போதிப்பாராக
நாங்கள் சிலுவையை வணங்கவில்லை, இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கிறோம்.
முகமதுவின் வழியில் நாங்கள் இல்லை, உண்மையான மேசியாஹ் இயேசு கிறிஸ்துவை வணங்குகிறோம்.
எங்களை வாழ விடுங்கள்
என் கண்ணீர் என் தாடையை தடவி பார்கிறது
இதயம் சோகத்தில் உள்ளது
கிறிஸ்தவர்கள் மேல் இவ்வளவு மூர்க்கம் கொள்கிறீர்களே?
மேசியாவின் வார்த்தை "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்"
எங்களோடு மறித்து கல்லறையில் நீங்கள் அடக்கம் பண்ண படபோவதில்லை
உங்கள் பட்டயத்தை பற்றி கவலையில்லை, நான் பயப்படவில்லை
தேவனால் மரணத்திற்கு ஒப்புகொடுக்கிறேன், ஒ கிறிஸ்தவர்களே, இந்த சோகமான வாழ்க்கைக்காக என் கண்களில் கண்ணீர் வருகிறது.
வரலாறுகளும், சாட்சிகளும் நாங்கள் கிறிஸ்தவர்கள் (இயேசு கிறிஸ்து) மேசியாவின் வழியில் நடப்பவர்கள் என்று சாட்சி கூறும்
என்னுடைய கடைசி வார்த்தை "இந்த உலகத்தில் உள்ள மேசியாவான இயேசுவிடம் ஜெபிக்கிறேன், வெளிச்சத்தின் பாதையில் நடத்துபவர், எங்கள் எண்ணங்களை மாற்றியவர், சரியாக நீதி நிலைநிருத்துபவர், முகமதியர்கள் மத்தியில் அன்பை பகிர்ந்து கொள்ளுவார்"

இது தான் இவர் எழுதின கடைசி கவிதை. நான்கு மணிநேரம் கழித்து வந்த இவர் சகோதிரர் உயிரோடு பாத்திமாவை எரித்தார். பிறகு அவர் நாக்கை வெட்டினார். கொலை செய்தார்.

அன்பு நண்பர்களே. இது ஒரு பகுதியில் நடந்த கதைதான். தன்னுடைய வாழ்க்கை முடிவது தெரிந்தாலும் தைரியமாக ஓர் அரேபிய இணைத்தளம் மூலம் இயேசுவை உலகதிருக்கு அறிவித்துவிட்டு மறித்து போனார். இவர் சார்ந்துள்ள "அல் முதைரி" இனத்திற்காக ஜெபிப்போமா? இவரை போல் பல ரகசிய கிறிஸ்தவர்கள், ஊழியர்கள், போதகர்கள் உள்ளனர். இவர்களை நீங்கள் நேரில் சந்திக்க முடியாது. ஆனால் ஜெபிக்க முடியும்.

பாத்திமா அல் முதைரி -- உம்மை பரலோகத்தில் நிச்சயம் சந்திப்பேன். ஆமென்

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

http://ministry-of-grace.org/?p=264
http://www.youtube.com/watch?v=oA-bBI5W9qY
http://www.stfrancismagazine.info/ja/Fatima%20of%20Saudi%20Arabia.pdf

இயேசு கிறிஸ்து - ஓர் அதிசயத்தின் அதிசயம்

இயேசு கிறிஸ்து
இவருக்கு........
அடிமைகள் யாரும் கிடையாது - நமக்கு இவர் எஜமான்
ஆசிரியராக பணியாற்றவில்லை - "போதகரே" என்றார்கள்
 

பட்ட படிப்பு படிக்கவில்லை - உபதேசத்தை கேட்டார்கள்
வேதியல் படிக்கவில்லை - தண்ணீரை திராட்ச ரசமாகினார்
உயிரியல் எழுதவில்லை - தான் பிறந்ததையே அதிசயமாக்கினார்
இயற்பியல் படிக்கவில்லை - மேலே எடுத்துகொள்ளபட்டார்
பொருளாதாரம் நடத்தவில்லை - 5000 பேரை போசித்தார்
வரலாற்றை இவர் உடைக்கவில்லை - வரலாறு இவருக்காக உடைந்தது கி.பி - கி.மு
மருத்துவம் பயிலவில்லை - நம்பினோரை சுகமாக்கினார்
மந்திரவாதி அல்ல - கடல் மீது நடந்தார்
பாவத்தை வெறுத்தவர் - பாவிகளை நேசிக்கிறார்
ராணுவம் இல்லை - ராஜாக்கள் இவருக்கு பயந்தார்கள்
எந்த நாடு மீதும் படைஎடுக்கவில்லை - பல நாடுகளை தனதாக்கினார்
உயிர்பிக்க வந்தவர் - நமக்காக மரித்தார்
குற்றம் ஏதும் செய்யவில்லை - சிலுவையில் அறைந்து கொன்றார்கள்
கல்லறையில் அடைத்தார்கள் - இன்றும் உயிருடன் இருக்கிறார்


இவ்வுலகில் அதிகமாக கொல்லபடுவதும் கிறிஸ்தவம் தான்
பல பெயர்களில் உடைந்ததும் கிறிஸ்தவம் தான்
அதிகமாக துன்பபடுத்தபட்டு கொல்லப்பட்டதும் கிறிஸ்தவர்கள் தான்
அதிக எண்ணிக்கையில் உலகில் வளம் வருவதும் கிறிஸ்தவம் தான்
அதிகமாக வளர்வதும் கிறிஸ்தவம் தான்
இந்த கிறிஸ்தவம் யாரையும் கொல்லவில்லை
பழிசுமத்தவில்லை
வற்புறுத்தவில்லை
ஆயுதம் ஏந்தவில்லை
மாறாக
அன்பு ஒன்றை கொண்டே உலகத்தை தனதாக்கி கொண்டது

இயேசு கிறிஸ்து
இவர் நேரடியாக வேதாகமம் எழுதவில்லை
இவரில்லாமல் வேதாகமம் இல்லை
வேதம் இவரால் அருளப்பட்டது

அதிசங்களின் அதிசயம்
நம் இயேசு கிறிஸ்து

thanks - தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்



இவ்வாறிருந்தும் அவற்றில் ஒன்றுக்கொன்று கருத்து வேற்றுமை கிடையாது. அச்சு இயந்திரம் மூலம் அச்சடிக்கப்பட்டு உலகின் முதன் முதலில் புத்தகமாக வெளிவந்தது பரிசுத்த வேதாகமமே!உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் பரிசுத்த வேதாகமமே!சுமார் 1700(இந்த கணக்கு 10 வருடங்களுக்கு முந்தையது) மொழிகளுக்கு மேல் இது மொழிபெயர்கப்பட்டுள்ளது!,13 நாட்களுக்கு ஒரு முறை பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பகுதி ஒரு புதிய மொழியில் வெளிவருவதாக கணக்கிட்டிருக்கிறார்கள்.உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகம் இதுதான்.


ஒரு புத்தகங்களின் கையெழத்துப் பிரதிகள் எத்தனை உள்ளதோ அதன் எண்ணிக்கையைக் கொண்டுதான் அந்தப் புத்தகத்தின் தரம் கணக்கிடப்படும்.இன்று உலகிலேயே அதிகமான கையெழுத்துப் பிரதிகளை கொண்டது திருமறையின் புதிய ஏற்பாடாகும்.அதற்கு 24,000 கையெழுத்துப் பிரதிகள் கிடைத்துள்ளன. உலகின் புத்தகங்கள் அனைத்தும் நடந்தவற்றையும்,நடக்கின்றவற்றையும் சொல்லலாம்.ஆனால் வேதாகமம் மாத்திரமே,நடந்தவவைகளையும்,நடக்கின்றவகளையும் மட்டுமல்லாமல் நடக்கப்போகின்றவைகளையு கூறக்கூடிய தீர்க்கதரிசனங்களை உள்ளடக்கியது!.


நெல்சன் குக் என்ற புதைபொருள் ஆராய்சியாளர்,"இதுவரை 25,000-க்கும் அதிகமான இடங்களில் செய்யப்பட்ட புதைபொருள் கண்டுபிடிப்புகளில் வேத வசனத்திற்கு மாறுபட்டதாக ஒன்று கூட இருந்ததில்லை.அனைத்து கண்டுபிடிப்புகளும் வேதவசனத்தை நிருபிப்பதாகவே உள்ளது"என்று தெரிவித்து உள்ளார்.


முதன் முதலில் வானவெளிக்கலத்தில் எடுத்து செல்லப்பட்ட புத்தகமும் பரிசுத்த வேதாகமமே! வேதாகமத்தின் முதல் வசனத்தை,போர்மன் என்ற வானவெளிவீரர் 1968-ஆம் ஆண்டு வானவெளியில் கலத்தில் இருந்து வாசித்தார். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்தவிதமான கண்டுபிடிப்பும் வேதாகமத்திற்கு எதிராக எதையும் சாதித்துவிடவில்லை.அமேரிக்காவில் 600 விஞ்ஞானிகளும்,ஆஸ்திரேலியாவிலிருந்து புதை பொருள் ஆராய்ச்சியாளர்களும் வேதாகமத்தின் ஒவ்வொரு பகுதியையும் விஞ்ஞான ஆதாரபூர்வமாக நிருபித்து இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். "உம்முடைய வேதமே சத்தியம்" (சங்.119:142)

நன்றி;நல்ல நண்பன்
 


Dr. D.G.S. தினகரன் சாட்சி


எரேமியா 33: 3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

பிப்ரவரி மாதம் என்னால் மறக்க முடியாத ஓர் மாதம். அப்போது எனக்கு வயது 20. 1955, பிப்ரவரி 11ம் தேதி என்னுடைய வாழ்கையை முடித்து கொள்வதற்காக ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நோக்குடன் சென்றேன். என்னுடைய வீட்டின் அருகாமையில் அதிவேக புகைவண்டி செல்லும். தற்கொலை செய்பவர்கள் அதின் முன் பாய்ந்தால் சுக்கு நூறாக உடல் சிதறிவிடும்.

நான் படிப்பில் தோல்வியுற்றவன். வீட்டின் வறுமை மற்றும் வேலைகிடைக்காத காரணம் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தீர்மானித்தேன். சிறிது நேரத்திற்குள்ளாக என் உயிர் போயிருக்கும். அந்த வேலையில் அங்கு வந்த என் மாமா அலெக்ஸ் ரத்தினம் என்னை சந்தித்தார். காவல் துறையில் பணியாற்றி வந்த இவர் "மகனே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவனுடைய குமாரன் மாம்சமாக வந்தார். முடிவில்லாத வாழ்க்கையை கொடுக்க கல்வாரியில் தொங்கினார். உனக்கு நித்திய வாழ்வு கொடுக்க, உன் பாரங்கள், வலிகள், தோல்விகள், வறுமை, வேலையில்லாத போராட்டம் மற்றும் எல்லாவிதமான நோவுகளை அவர் சுமந்தார். அவரிடத்தில் உனக்கு நம்பிக்கை உண்டு" என்றார்.

என் கண்களில் கண்ணீரோடு "மாமா எனக்கு வேலை கிடைக்குமா? என் குடும்பத்தின் வறுமை நீங்குமா? என்று கேட்டேன். அவர் நிச்சயம் தருவார் என்று கூறி என்னை ஆறுதல் படுத்தி அழைத்து சென்றார்.

அன்று முதன் முதலாக தேவனுக்கு முன் முலன்கால்படி போட்டு 4 மணி நேரம் கண்ணீரோடு ஜெபித்தேன். என் பாவங்கள், புலம்பல்களை அவரிடம் அறிக்கையிட்டு ஜெபித்தேன். தெய்வீக அபிஷேகம், உலகம் தரகூடாத சமாதானம் என்னை நிரப்பியது. புதுமனிதன் ஆனேன்.

வேதாகமத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கண்ணீரோடு "நான் எதற்கு சாகவேண்டும்? தேவனே எனக்கு உதவிசெய்யும்" என்று ஜெபித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பாடங்களில் தேர்ச்சியுற்று நல்லதொரு வேலையும் பெற்றேன். தேவன் என்னை வங்கி அதிகாரியாக உயர்த்தினார். அந்த வங்கிக்கு சுமார் 700 கிளைகள் இருந்தது.

என் தேவனை முகமுகமாக சந்திக்க நாளுக்கு நாள் ஆசை அதிகமானது. 7 வருடம் தொடர்ந்து ஜெபித்தேன். 1962ம் வருடம், எனக்கு 27 வயதை இருந்த போது என் குடும்பம், உறவினர்களோடு ஜெபித்துகொண்டிருந்த போது இயேசு கிறிஸ்து எனக்கு வெளிபட்டார். ஓர் பெரிய மகா வெளிச்சத்தை கண்டேன். அதின் மத்தியில் இயேசு கிறிஸ்து தோன்றி "நானே இயேசு கிறிஸ்து, என்னை தொடர்ந்து நீ ஜெபத்தில் சந்திக்க வேண்டும் என்றதால் உன்னை ஆசீர்வதிக்க வந்தேன்" என்றார். என் உறவினர்கள் என்னை சூழ்ந்திருக்க தேவன் "மகனே, இந்த உலகம் என் அன்பையும், பரிவையும் தெரிந்து வைத்துள்ளது, ஆனால் அதை வெளிபடுத்த யாரும் முன்வருவதில்லை. உன்னில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை ஊற்றுகிறேன், எப்பொழுதெல்லாம் பரிவோடு மக்களுக்காக ஜெபிகிராயோ, நான் கேட்பேன்" என்றார்.

அன்றிலிருந்து என் வாழ்க்கை புதிய புத்தகமாக மாறிவிட்டது. அதுவரை சுயநலவாதியாக இருந்த என்னை தேவனின் அன்பு உடைத்து போட்டது. இந்த அன்பு என்னை அவரை பற்றி சொல்வதற்கு ஏவியது.

ஆமென்.

நீங்கள் பல தோல்விகளால் துவண்டு போய் உள்ளீர்களா? வாழ்க்கையே நரகம் போல் தெரிகிறதா? யாரும் இல்லை என்று நினைக்க தோன்றுகிறதா? இதோ இந்த சாட்சி உங்களை உயிர்பித்திருகும் என்று நம்புகிறேன். உங்களை அழைத்த தேவன் உங்களுக்காக காத்திருக்கிறார். அவரிடத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் ஆசீர்வாதங்களை விட பெரிய திட்டங்கள் இருக்கின்றன. தேவன் எதிர்பார்ப்பது, அவருடைய பாதத்தில் நீங்கள் இருக்கிற வண்ணமாகவே சென்று முழுவதுமாக ஒப்புகொடுப்பது. அவரோடு நேரம் செலவிடுவது. "அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள்" என்ற அழைப்பு இதை படித்து கொண்டிருக்கும் உங்களுக்குதான்.

வேதம் வாசித்து ஜெபிக்க ஆயத்தமா? தேவன் உங்கள் மூலம் சில ஆசீர்வாதங்களை இப்பூமியில் நிறைவேற்ற ஆயத்தமாய் உள்ளார். அர்ப்பணிப்போடு கீழ்படிதல் மிக முக்கியம். தேவன் உங்களை ஆசீர்வதிபாராக. ஆமென்

Dr. D.G.S. தினகரன். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை - யில் ஜூலை 1, 1935ல் பிறந்தார். தந்தை பெயர் திரு. துரைசாமி (ஆசிரியர்) தாய் ஹெப்சிபா.

1970 ம் ஆனது வேலூரில் நடந்த ஓர் பெருவிழா முதன் முறையாக "இயேசு அழைக்கிறார்" என்ற பெயரில் ஆரம்பமானது.
முதல் வானொலி (ரேடியோ) செய்தி மார்ச் 2, 1972 FEBA மூலம் வழங்கினார்
1973, முதன் முறையாக வெளிநாடு (ஸ்ரீலங்கா) சென்று ஊழியம் செய்தார்.
மே 1973 ல் முதன் முறையாக இயேசு அழைக்கிறார் ஊழிய பத்திரிகை வெளிவந்தது.
1983 ஜெப கோபுர திட்டம் தொடங்கப்பட்டது
1993 பெதஸ்தா ஜெப மையம் ஆரம்பமானது
1986 காருண்யா கல்லூரி தொடங்கப்பட்டது.
மே 21, 1986ம் ஆண்டு கொடூரமான விபத்தில் தன் மகள் இவாஞ்சலீன் மறித்து போனார்.
பிப்ரவரி 20, 2008 சென்னையில் சகோதரர் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.

அகஸ்டின் ஜெபக்குமார் சாட்சி


அகஸ்டின் ஜெபக்குமார்.......

வெள்ளை உடை, முகத்தில் முட்கள் போன்ற தாடி, அழகிய சிரிப்பு, கணீர் குரல், அழுத்தமான உச்சரிப்புகள், ஆழாமான கருத்துக்கள், சிறிதும் தடுமாறாத ஊழிய அழைப்பு, கண்களில் கம்பீர வைராக்கியம், எந்த ஓர் பண ஊழியத்திலும் இடுபாடில்லாமை, எதை பற்றியும் கவலைபடாமல் வேதத்தை மட்டும் போதிக்கும் அதிகாரம், 41 ஆண்டுகளாக தூக்கி சுமக்கும் சுவிசேஷ பாரம் என்று இவர் இளமை பருவத்தில் ஆரம்பித்த ஓட்டம் இன்றும் தொடர்கிறது. பல இளைஞ்சர்களுக்கு இன்றும் இவர் ஓர் முன்னோடி. "ஊழியம் பற்றி தெரிய வேண்டுமா, பீகார் வந்துபார்" என்று தைரியமாக அழைக்கும் ஓர் வற்றாத வைராய்கியம் இவரின் ஓர் அடையாளம். உங்கள் பிள்ளைகள் படிக்கவில்லை என்று ஊழியத்திற்கு அனுப்பாதீர்கள் என்று எச்சரிக்கும் மன தைரியம். இவரை பற்றி தெரிந்து கொள்வேமே?

சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் 20 - 8 - 1946 வருடம் திருநல்வேலியில் பிறந்தவர். தூத்துக்குடியில் வளர்க்கபட்டார். பொறியியல் பட்டபடிப்பை முடித்தவுடன் சென்னை பல்லாவரத்தில் உள்ள English Electric Co ல் டூல் டிசைனர் ஆக சிறிது காலம் வேலை பார்த்தார். சென்னை பட்டணம் இவருக்கு தேவனை முகமுகமாய் அறிந்து கொள்ள அதிகமாய் உதவி செய்தது. ஆலயத்திற்கு போகும் சாதாரண கிறிஸ்தவனாய் இருந்த இவர் பின்பு தேவனை அதிகமாக தேட ஆரம்பித்தார். தன்னை தேவனின் அழைபிற்குள் வழிநடத்தினது சென்னை என்று சகோதிரர் மகிழ்ச்சியுடன் குறிபிட்டுள்ளார்.

இவர் வேலை செய்த நிறுவனத்தின் முன் ஓர் ஆலயத்தின் சொத்து இருந்தது. அங்கு சென்று மாலை வேலையில் ஊழியம் செய்து வந்தார். இப்போது அங்கு பெரிய ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. 21ம் வயதில் மிக உற்சாகத்துடன் சுவிஷேசத்தை தெருவெங்கும் போய் அறிவித்தார். இவர் அதிகமாக சிறு குழந்தைகளிடம் தேவனின் அன்பை பகிர்ந்து கொள்வதில் நாட்டம் கொண்டார். சுமார் வாரத்திற்கு 800 குழந்தைகளிடம் சுவிஷேசத்தை பகிர்வது இவரின் வழக்கம். சிறிது சிறிதாக வாலிபர்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பின் இவரின் நண்பரோடு சேர்ந்து காலை மாலை தெருக்களில் வசனத்தை கூவித்திரியும் காரியத்தையும் செய்து வந்தார்.

வாலிப வயதில் கிறிஸ்தவ நண்பர்களாக சுவிஷேசம் அறியபடாத இடங்களுக்காக வெள்ளிகிழமை இரவு முழுவதும், மற்றும் செவ்வாய் 7-9 மணிவரை ஜெபிப்பது வழக்கம். அந்நாட்களில் தேவன் பீகாரின் வரைபடத்தை கான்பித்தனின் காரணமாக 1972ம் வருடம் தேவன் கொடுத்த தரிசனத்தின் படி தேவ ஊழியம் செய்வதற்காக தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு "தேவ ஊழியர்களின் கல்லறை" என்று வர்ணிக்கப்பட்டபீகார் மாநிலத்திற்கு கடந்து வந்தார். 13-10-1972ல் சுவிஷேச வாசமே இல்லாத பீகார் மண்ணில் கால் பதித்தபோது பீகார் மக்களின் வாழ்க்கை நடைமுறை பற்றியோ, பாஷையோ, ஊரோ தெரியாது. தேவன் கொடுத்த அநாதி அழைப்பை நம்பி வந்த இவருக்கு எதை பற்றியும் கவலையில்லை.

இவர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கும் பீகாரை பற்றி அழைப்பு இருந்ததை தெரிந்து கொண்டார். திருமணத்திற்கு முன் நிச்சயிக்கப்பட்ட பெண் முகத்தையோ, பேசினதோ கிடையாது. இவர்களின் பெற்றோர் இருவரின் தீர்மானத்தையும் பார்த்து தேவனின் சமூகத்தில் இணைத்து வைத்தார்கள்

இவர்களுக்கு தேவன் 4 குழந்தைகளை கொடுத்தார். இவர்கள் இணைந்து 4 குழந்தைகளை எடுத்து வளர்த்தார்கள். இவற்றில் ஓர் குழந்தையும் எடுத்து வளர்த்ததில் ஓர் குழந்தையும் இறந்து விட்டது. இப்போது மொத்தம் 6 குழந்தைகள் உண்டு. இவர்களில் 4 பேருக்கு திருமணம் ஆகி விட்டது. குடும்பமாக ஊழியம் செய்ய ஆரம்பித்த போது பல கஷ்டங்களை அனுபவித்தாலும், சகோதிரர் எப்போது வருவார் என்று அறிந்திராத போதும், சாலை ஓரத்தில் கிடக்கும் கீரைகளை சமைக்க வைக்கும் போதும் முகம் கோணாமல் இன்முகத்தோடு ஊழியத்தை தாங்கின மனைவியை தேவன் தந்த அதிசயம் என்று சகோதிரர் குறிபிடிகிறார்.

இவரின் சொந்த குழந்தை இறந்த போது ஊழியத்தின் நிமித்தமாக புதைக்க கூட வரவில்லை. ஆனாலும் இவரின் மனைவி மனதில் தாங்கிக்கொண்டு தேவ ஊழியத்தை நிறைவேற்றி கணவருக்கு துணையாக நிற்கிறார்.

தனந்தனியாக பீகாருக்கு கடந்து சென்றார். அதன் பின் 7 ஆண்டுகளுக்கு பின் GEMS ஊழியத்தின் பெயரை நிறுவினார். கால்கடுக்க நடந்து சென்று ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பல சோதனைகளை வேதனைகளோடு கடந்து போனாலும் அழிந்து போய் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் மேல் வைராக்கியம் கொண்டவராய் வெகு சீக்கிரத்தில் எல்லாவற்றையும் கற்று கொண்டார். சுமார் 41 வருடமாக ஊழியத்தை நிறைவேற்றி வரும் இவருடன் 2,300 பேர் ஊழியம் செய்து வருகின்றனர். சுமார் 7 விதமான ஊழியத்தை செய்துவரும் இவரின் ஸ்தாபனம் சுவிஷேசத்தை அறிவிப்பதை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 20 லட்சம் பேரை ஓர் வருடத்தில் சந்தித்து வருகின்றனர். தற்போது 31000 பேருக்கு ஊழிய பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. 120 பள்ளிகூடங்களை உருவாக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகளையும் இவர் இயக்கி வருகிறார். மருத்துவமனையும் உள்ளது. ஓர் வருடத்தில் சுமார் 50,000 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தனிமனிதனாய் சென்றவர் இன்று ஆலமரமாய் நிற்கிறார். இவரின் ஆணிவேர் இயேசு கிறிஸ்துவை இருப்பதினால் இன்றும் தனகென்று தேவன் நியமித்த ஓட்டத்தில் தெளிவாக ஓடிகொண்டிருகிறார்.

தேவன் உங்களை அழைத்துள்ளாரா? ஊழியத்தை பற்றி பயம் உண்டோ? குடும்பத்தை பற்றின பாரம் அழுத்தபடுகிறதோ? உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர். உங்களை கைவிடமாட்டார். திறப்பின் வாசலில் நிறைக்க நம்மை முழுமனதுடன் அற்ப்பநிபோமா?

ஆமென்.
கிறிஸ்தவம் என்பது அரசியல் மூலமாகவோ? அதிகாரத்தின் மூலமாகவோ? பதவி மூலமாகவோ? போராட்டங்கள் மூலமாகவோ? பணத்தின் மூலமாகவோ? கட்சி மூலமாகவோ? வளர்ந்தது இல்லை. இப்படிப்பட்ட உன்னதமான அர்பணிப்பின் மூலம் தேவன் அதிசயத்தக்க விதமாய் செயல்பட்டு இன்றும் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள ஆணிவேர்கள் தேவனுக்கு தேவை.
இவரின் ஊழியத்தை பற்றி தெரிந்துகொள்ள வலைதளங்களில் வளம்வாருங்கள். விரைவில் இவர் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஊழியம் செய்ய உள்ளார். இவரை சந்தித்து ஆலோசனை பெற உங்களை அன்போடு அழைக்கிறோம்.

நன்றி. தேவன் தாமே சகோதிரர் குடும்பத்தையும், ஊழியத்தையும் ஆசீர்வதிபாராக.

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

மேலும் இவரை பற்றி அறிந்துகொள்ள
http://www.youtube.com/watch?v=hr2Uc1433C4
http://www.youtube.com/watch?v=3hJJnVxDDgE

சாட்சி - பிள்ளைகளின் ஜெபத்தை கேட்டார்

என்னுடைய பெயர் கோயில் துரை. நெல்லை மாவட்டம் நான்குநேரி தாலுக்கா விஜயாச்சம்பாடு என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். அதில் நான் இரண்டாவது மகன். என் சிறுவயதில் தினமும் சர்ச்க்கு செல்வேன். ஆனால் தேவனுக்கு பயப்படும் பயம் என்னில் இல்லாது இருந்தது. நான் +2 வரை படித்து இருக்கிறேன் பள்ளியில் படிக்கும் போது தவறான நண்பர்கள் மூலமாக குடிப்பழக்கம் எனக்கு இருந்தது.

இந்த நிலையிலும் எனக்கு திருமணமு

நல்ல முறைகள் இருந்த இன்ச்டால்மென்ட் பிசினஸ் அடியோடு நாசமாகி போனது. எனக்கு இருந்த எல்லா இடத்தை விற்று மறுபடியும் குடிக்க சென்றேன். இந்த இடைப்பட்ட காலத்தில் என் பிள்ளைகள் உபவாசம் இருந்து எனக்காக ஜெபித்திருகிறார்கள். என் பிள்ளைகளை பார்க்கும்படி வீட்டிற்க்கு சென்ற நான் என் பிள்ளைகளின் நிலைமையை கண்டு மிகவும் வருத்தப்பட்டேன். பின் நாட்களில் தேவன் என் குடிப்பழக்கத்தை முழுவதுமாக மாற்றினார். குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும் பாக்கியத்தை எனக்கு தந்தார்
ம் நடந்தது. மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். சில நாள் தெரிந்தும் பல தெரியாமலும் குடித்ததால் மிகவும் பெலவீனப்பட்டு 45 நாள்கள் ஆஸ்ப்பத்திரி சேர்க்கப்பட்டேன். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் குடிப்பழக்கம் மிக அதிகம் ஆனதே தவிர குறையவில்லை. இப்படியாக இருக்கும் போது குடும்பத்தில் பிரச்சனை வர ஆரம்பித்தது. சின்ன சின்ன பிரச்சனை வந்து இரண்டரை ஆண்டுகள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தேன். இன்னும் அதிகமாக குடித்து விட்டு சாப்பிடாமல் இருப்பேன். மன அழுத்தம் காரணமாக இன்னும் நிறையே குடிக்க ஆரம்பித்தேன்.

சாட்சி - இயேசுவை அறியாமல் வாழ்ந்து வந்தேன்

என் பெயர் ஸ்ரீனி சாமுவேல். நான் இயேசுவை அறியாமல் வாழ்ந்து வந்தேன். எனக்கு பனிரெண்டு வயது இருக்கும்பொழுது என தந்தை வேலைக்கு செல்லாமல் இருந்ததால் எங்கள் குடும்பம் மிகுந்த வறுமை அடைந்தது. அப்பொழுது என தாயார் கேழ்வரகை வைத்து பலகாரம் செய்து கொடுப்பார். காலையில் பள்ளிக்கு செல்வேன், மாலையில் தெருக்களில் சென்று என தாய் செய்து கொடுக்கும் பலகாரங்களை விற்பேன். ஒரு இனிப்பு பத்து பைசாவிற்கு விற்றால் ஒரு நாளைக்கு பாத்து ரூபாய் வருமானம் மட்டுமே கிடைக்கும். பல நாட்கள் உணவு கூட இல்லாமல் கஷ்டப்பட்டோம்.

அந்நாட்களில் என் தாயார் செய்து தரும் பலகாரம் மட்டுமே எங்கள் உணவாக இருக்கும். மதிய உணவு முடிந்தபின் மீதமாக வரும் சிறு அளவு சாதத்தில் மோர் கலக்கிக் கொடுப்பார் என் தாயார், பல நாட்கள் அதுவே என் இரவு உணவாக இருந்தது. முதலாவது என் சகோதரி ஏசுவை ஏற்றுக் கொண்டார். அதன்பின், என் தாயாரும் ஏசுவை ஏற்றுக் கொண்டார். அப்பொழுதெல்லாம் என் தாயாரின் வற்புறுத்தலுக்காக மட்டுமே நான் ஆலயம் செல்வேன். அதன்பின், எனக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை கிடைத்தது. இப்பொழுது ஆலயத்தைக் காட்டிலும் வேலை எனக்கு முக்கியமாக தெரிந்தது. நண்பர்களோடு ஊர் சுற்றுவது, சினிமா என்று ஜாலியாக நாட்களை கழித்தேன்.

என் தாயார் ஆலயத்துக்கு அழைக்கும்போது எல்லாம் எனக்கு வேலை இருக்கிறதென்று சென்று விடுவேன். என் தாயார் எனக்காக அதிகமாக ஜெபிப்பார்கள். பின்னாட்களில் நானும் என் தாயரோடு ஆலயத்திற்கு செல்லத் தொடங்கினேன். என்னுடைய வழிகள் தவறானவை என்பதை உணர ஆரம்பித்தேன். எனக்குள்ளே பல மாற்றங்கள், வாரம் தவறாமல் சபைக்கு செல்ல தொடங்கினேன், என் தாயாரை விட அதிகமாக ஜெபிக்க ஆரம்பித்தேன். ஆண்டவரை அறிந்த நாள் முதல் என் வாழ்வில் பெருத்த மகிழ்ச்சி, பூரண நிம்மதியுடன் வாழ்கிறேன், எங்கள் வீட்டில் ஒருநாளும் உணவில்லாமல் இருந்ததில்லை. என் குடும்பத்தில் திருமணமாகி பத்து வருடங்கள் கழித்தே என் மூத்த சகோதரிக்கு குழந்தை பிறந்தது, என் இளைய சகோதரிக்கு எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலை, என் தாயாருக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் கழித்தே குழந்தை பிறந்துள்ளது. என் வாழ்வில் இப்படிப்பட்ட சாபங்கள் இருக்க கூடாது என்பதில் மிக உறுதியாக ஜெபித்து வந்தேன். எனக்கு திருமணமான முதல் ஆண்டிலேயே முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியத்தை தேவன் தந்தார்.

எனக்கு அருமையான மனைவியை தேவன் கொடுத்துள்ளார். இப்பொழுதும் எனக்கு இரண்டு குழந்தைகள். நான் எக்க்ஸ்போர்டிலேயே தொடர்ந்து வேலை செய்து வந்தாலும், ஒரு குறைவும் இல்லாமல் என் தேவன் என்னை வழி நடத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் கண்ணின் மணியைப் போல பாதுகாத்து நடத்தி வரும் தேவனுக்கு ஸ்தோத்திரம்.

சோம்பேறி கழுதை

ஒரு ஊரில் ஒரு உப்பு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தன் கிராமத்தில் உள்ள ஆற்றை கடந்து சந்தைக்கு சென்று உப்பு விட்டரு வியாபாரம் செய்வார். தன்னுடைய வியாபாரத்திற்காக தன்னுடைய செல்லமான கழுதையை பொதி சுமக்கும்படி பழகுவிதிருந்தார்.
அப்படியாக ஒரு நாள் சந்தைக்கு ஆற்றை கடந்து செல்லும் போது கால் இடறி கழுதை ஆற்றில் விழுந்து மூட்டையில் இருந்த உப்பு எல்லாம் கரைந்து விட்டது. அது வியாபாரிக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அனால் கழுதை எல்ல பாரமும் குறைந்தது என்று எண்ணி சந்தோசப்பட்டது.
மறுநாள் வியாபாரி சந்தைக்கு செல்லும் போது கழுதை தவறி விழுவது போல் நடித்து மீண்டும் உப்பை கரைத்து விட்டது. கழுதைக்கு மட்டற்ற மகிழ்ச்சி வியாபாரிக்கு மிகுந்த வருத்தம்.

மீண்டும் இந்த வழக்கத்தை கழுதை கடைபிடிக்க, வியாபாரி கழுதைக்கு படம் கற்பிக்க நினைத்து, உப்புக்கு பதிலாக பஞ்சை மூடியில் வைத்தார். கழுதை அதை அறியாமல் ஆற்றில் வழக்கம் போல் விழ, மீண்டும் இராமான பஞ்சு மூட்டையை தூக்க முடியாமல் திணறியது. அப்பொழுது தான், தன் தவறை உணர்ந்து தன் கடமைகளை கவனமாய் செய்ய ஆரம்பித்தது.

பொய் நாவு - ஒரு வினோத பழக்கம்

ஆப்பிரிக்காவில் ஒரு இனத்தவரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. யாராவது ஏதாவது தவறு செய்தால் அங்குள்ள வைத்தியர் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரிடம் கேள்விகள் கேட்பார். ஆனால் யாரும் தங்கள் தவறை ஒப்புக் கொள்ளவில்லை என்றால், யாரையெல்லாம் சந்தேகப்படுகிறார்களோ அவர்களை அழைத்து, அவர்கள் முன்பாக ஒரு ஈட்டியின் முனையானது சூடுபடுத்தப்படும். அது நன்கு சூடாகும்போது அதை கொண்டு வந்து சந்தேகப்படுபவர்களின் நாவில் வைக்கப்படும். தவறு செய்தவன் நாவில் வைக்கும்போது அவன் வலியில் துடிப்பான். மற்றவர்கள் நாவில் வைக்கும்போது அது ஒன்றும் செய்யாது என்பது அவர்களின் நம்பிக்கை.
.
அந்த சூடாக்கப்பட்ட ஈட்டி தங்கள் வாயின் அருகில் வர இருக்கும்போது தவறு செய்தவர்கள் காட்டிற்குள் ஓடி ஒளிவார்கள். ஏனெனில் பொய் சொன்னவர்களின் நாவை அந்த சூடு பொசுக்கி விடும் என்று பயந்து. ஆனால் மற்றவர்களின் நாவுக்கு அந்த சூடு ஒன்றும் செய்யாது.
இது ஒரு குருட்டு நம்பிக்கை என்று நாம் நினைக்கலாம், ஆனால் அறிவியற்பூர்வமாக தவறு செய்யாதவர்கள் பதறாதபடியால், அவர்கள் நாவு ஈரமாயிருக்கும். அதனால் அந்த நாவு ஒரளவு சூட்டை தாங்க முடியும். ஆனால் தவறு செய்தவர்களின் நாவு வறண்டு போய் இருக்கும். சூடு வைக்கப்படும்போது அது பொசுங்கி போகும் என்று கூறப்படுகிறது. ஆதலால் அந்த கிராமத்தில் யாரும் தவறு செய்யவோ, பொய் பேசவோ பயப்படுவார்கள்.
.
கர்த்தருக்கு அருவருப்பான ஆறு காரியங்களில் பொய் நாவும் ஒன்று வேதம் கூறுகிறது. 'ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே' (நீதிமொழிகள் 6:16- 19). கர்த்தர் வெறுக்கும் இந்த ஆறு காரியங்களில் பொய் நாவு இரண்டாவதாக வருகிறது.
.
சிலருக்கு பொய் என்பது சரளமாக வரும். ஏன் விசுவாசிகள் என்று சொல்பவர்களுக்கும் பொய் சொல்வது என்பது ஒரு குற்றமாகவோ, பாவமாகவோ தெரிவதில்லை. சும்மா ஒரு சிறிய பொய் தானே சொன்னேன் என்று பொய் சொல்வதை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளுகிறவர்களும் உண்டு. கர்த்தர் பொய் நாவை அருவருக்கிறார் என்று வேதம் சொல்கிறது.