ஒரு முறை பில்லி
கிரகாம் அவர்கள் இரட்சிப்பைக் குறித்து ஒரு உதாரணத்தின்
மூலமாக விளக்கினார். அவர் சொன்னது, 'அநேகர் நான் கர்த்தரை
விசுவாசிக்கிறேன், வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், சபை
கூடுதலை விசுவாசிக்கிறேன் இது போதாதா நான் பரலோகம்
போவதற்கு? என்று வாதிடுகிறார்கள். இல்லை, இது ஒரு போதும்
போதாது, இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள
வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவன் ஒரு இடத்திற்கு செல்ல
வேண்டும் என்று விமான டிக்கெட் வாங்கி, குறிப்பிட்ட
நேரத்திற்கு ஏர்போர்ட்டும் போய் சேர்ந்து விடலாம். அந்த
விமானம் மிகவும் உயர்ரக விமானம். அது அவனை சரியாக அவன்
செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில்
சந்தேகமேயில்லை.
.
எல்லாம் ரெடியாக இருக்கிறது. விமானம் புறப்பட சில
நிமிடங்களே இருக்கிறது. அவனுடைய பெயர் சொல்லி
கூப்பிடுகிறார்கள். ஆனால் அவனோ விமானத்தில் ஏறாமல் காலம்
தாழ்த்தி கொண்டே இருக்கிறான். விமானத்தின் கதவு
மூடப்படுகிறது, விமானம் தளத்தில் ஓடி, உயரே எழும்பி பறக்க
ஆரம்பிக்கிறது. அந்த மனிதன் விமானத்தின் மேல், அது தன்னை
உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பிக்கை
வைத்திருந்தான். ஆனால் அதில் அவன் போய் ஏறவில்லை. எல்லாமே
தயாராக இருந்தும், அவன் அதில் போய் ஏறவில்லை. அதனால்
அவனால் தான் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர
முடியவில்லை. அதுப் போலத்தான் ஒரு வேளை நீங்கள்
இயேசுகிறிஸ்துவின் மேலும், வேதத்தின் மேலும், அவருடைய
வருகையின் மேலும் நம்பிக்கை வைக்கலாம், ஆனால் நீங்கள்
அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால், உங்கள் நம்பிக்கை எல்லாமே
வீண்' என்று கூறினார்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், ...
No comments:
Post a Comment