Thursday, October 23, 2014

ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன் - ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிகாவின் 16ஆவது ஜனாதிபதியாக இருந்தவர் இவர். அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும்படி சென்றிருந்தார்கள். அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசி கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது, ஆகவே இவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர்.
.
வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். 'ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி கொணடிருந்தீர்கள். ஆகவே காத்திருந்தோம்' என்றனர். 'வேறு யாருமல்ல, நான் ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன்' என்று ஆபிரகாம் சொன்னவுடன் அவாகளுக்கொல்லாம் பெரிய ஆச்சரியம்! அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார். 'நான் சிறு பையனாக இருககும் போது காடுகளில் விறகு வெட்டி ஜீவனம் செய்து வந்தேன். என் பாட்டி தான் என்னை பராமரித்து வந்தார்கள். அவர்கள் எனக்கொரு வேதத்தை கொடுத்து ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்தவுடன் அதை தியானிக்க வேண்டும் என்றும், ஆண்டவருடன் மாத்திரமே முதலில் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த பாடத்தை இன்னும் விட்டு விடாமல், முதலில் ஆண்டவருடன் நான் பேசுகிறேன்' என்றார்.
.
நாம் முதலில் யாரோடு பேசுகிறோம்?

Tuesday, October 14, 2014

விஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)



எறும்பினிடத்தில் போய் கற்றுக்கொள் : ஆய்வின் மூலமாய் நிருபிக்கப்பட்ட  வேத  வசனம். உலகில் ஒவ்வொரு மார்கத்திற்கும் ஒவ்வொரு வேதங்கள் உள்ளனஆனா இதில் எந்த வேதம் குறைவில்லாதது என்றால்எது எல்லாவிதமான ஆய்வுகளுக்கும்,சோதனைகளுக்கும் உட்படுத்தி தன் உண்மை தன்மையை நிலைநாட்டுகிதோ அதுவே,
அந்த வகையில் பார்த்தால் கர்த்தருடைய வேதமே பரிசுத்தமானது என்பதற்கு இதுவரையிலும் ஏராளமான ஆதாரங்கள் நம்மை சுற்றிலும்  இருக்கின்ற நிலையில்வேதத்தை பொய் என்று தங்களுக்கு தோன்றிய  ஞானத்தின்படி வாதிடுபவர்கள் ஏராளம்அந்த வகையில் இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக் மற்றும் அவரை சார்ந்தவர்கள் பின் வரும் விமர்சனத்தை  வேதாகமத்தின் மீது சுமத்தி அதை குற்றப்படுத்தி வருகின்றனர்,  அதென்னவென்றால்,

வேதத்தில் நீதிமொழிகள் 6:6-8  வசனங்களில் எறும்பின் சுறுசுறுப்பை குறிப்பிடும் விதமாக வசனங்கள்   வருகின்றனஅதில் அந்த எறும்பிற்கு பிரபுவோதலைவனோஅதிகாரியோ இல்லாதிருந்தும் அதின் சுறுசுறுப்பையும் அதின் வழிகளையும் பார்த்து  ஞானத்தை கற்றுக்கொள் என்பதாக  குறிப்பிடுகிறது.

இதை பிடித்துக்கொண்ட ஜாகிர் நாயக் மற்றும் அவரை சார்ந்தவர்கள்,எறும்பு  கூட்டத்திற்கு ராணி எறும்பு உண்டு என்று ஆய்வுகள் கூறுகிற நிலையில், பைபிளில் அதற்கு பிரபுவோதலைவனோஅதிகாரியோ இல்லையென்று  கூறுவதினிமித்தமாக பைபிள் பொய்யானது என்றும்ஒரு சிறு பூச்சி  விசயத்தில் தவறான கருத்தை கூறும் பைபிள் எப்படி மனிதனை குறித்து  விளக்கி கூற இயலும்?, எனவே பைபிள் உண்மையான கர்த்தருடைய வார்த்தை இல்லை என்று வாதிடுகிறார்கள்.

சரிஇதில் இவர்கள் கூறுவது உண்மையா அல்லது வேதம் கூறுவது உண்மையா என்று விளக்கமாக பார்க்கலாம்.
இவர்கள்எறும்புகளுக்கு ராணி எறும்பு உண்டு என்பதற்கு ஆதாரமாக மைர்மக்காலஜி(MYRMECOLOGY) என்கிற எறும்பை குறித்த ஆய்வு பாடத்திலிருந்து குறிப்பிடுகிறார்ஆனால் ஏதோ அவசரத்தில் அவர் கவனிக்காமல் விட்ட விஷயம் என்னவென்றால்ராணி எறும்பு மற்ற எறும்புகளை ஆள்வதில்லைகட்டளையிடுவதில்லைஅதிகாரமும் செலுத்துவதில்லைமாறாகமுட்டையிடுவதும் அதன் புற்றுக்கூட்டை பாதுகாப்பதும்தான் ராணி எறும்பின் வேலை

மற்றுமொரு உண்மை என்னவென்றால் அந்த குறிப்பிட்ட புற்று குழுவில் உள்ள எல்லா எறும்புகளுக்கும் ராணி எறும்பு என்று கூறப்படுகிற எறும்புதான்  தாயானவள்,

பணிவிடை எறும்புகளை காட்டிலும் உருவத்தில் பெரிதாகவும் இறகுகள் உள்ளதாகவும் காணப்படும்ஒரு எறும்பு குழுவில் ராணி எறும்பின் பங்கு இவ்வளவுதான்ராணி எறும்பு மாத்திரமல்ல அந்த குழுவில் உள்ள வேறு எந்த  எறும்பும் மற்ற எறும்புகளை அதிகாரம் செலுத்துவதில்லை என்பதை அதே  மைர்மெக்காலஜி பாடத்தில் ஆய்வின் மூலம் ஆதாரத்துடன் உறுதிபடுத்தப்பட்டுள்ளதுகிறிஸ்தவத்தையும் அதன் வேதத்தையும் எப்போதும் குறை கூறி வருகிற இந்த மற்ற பிற மதத்தின் சிறந்த அறிஞர்களுக்கு இந்த உண்மை எப்படி  தெரியாமல் போனதுஆனால் என் வேதம் பொய்யுரைப்பதில்லை  ஏனென்றால் இந்த வேதாகமத்தின் தேவனே பொய்யுரையாதவர்,

ஆஹாநம் வேதமாகிய பைபிள் எத்தனை உண்மையுள்ளது என்று சொல்லி  தேவனை துதிக்க தோன்றுகிறதல்லவாசற்றுப்பொறுங்கள் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள மற்றுமொரு ஆய்வு உண்மையை கூறி விடுகிறேன் அதன் பின் நாம் தேவனை மகிமை  படுத்தலாம்

வேதம் கூறும் இன்னொரு ஆச்சரிய உண்மை

1742 ம் ஆண்டில் கர்த்தரின் படைப்பின் அதிசயத்தை ஆய்வு செய்த (இயற்கைபிரெஞ்சு ஆராய்ச்சியாளரான ரெனே அண்டாய்ன் ஃபெர்கால்ட் டி ரியுமர்(RENE ANTOINEFERCHAULTDEREAUMUR) என்ற அறிஞர் எறும்புக்கூட்டத்தில்  பெரும்பாலான எறும்புகள் பெண் எறும்புகள் என்ற முதல் ஆய்வு தகவலை   உலகிற்கு வெளியிட்டார்அதைப்போலவேஎறும்பு கூட்டத்தில் பணிவிடை எறும்புகள்(workerants) எல்லாம் பெண் எறும்புகள் என்ற உண்மையை
சமீபத்திய  ஆய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது.

சரிஇதிலென்ன விசேஷம் உள்ளது என்று பொத்தாம் பொதுவாக நினைக்கத்தோன்றும்ஆனால் இதிலும் ஒரு மிகப்பெரிய உண்மை அடங்கியுள்ளதுஅதே நீதிமொழிகள் 6:6-8  வசனங்களில்   இந்த  பணிவிடை   எறும்புகள்,  பெண்   எறும்புகள் என்று வேதம் தெளிவுபடகுறிப்பிடுகிறது,

தமிழ் வேதாகமத்தில் நீதி 6:6-8 வசனங்களில் எறும்பை குறித்து கூறும் போது,
6. சோம்பேறியேநீ எறும்பினிடத்தில்போய்அதின் வழிகளைப் பார்த்துஞானத்தைக்  கற்றுக்கொள்.
7. அதற்குப் பிரபுவும்தலைவனும்அதிகாரியும் இல்லாதிருந்தும்,
8. கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்துஅறுப்புக்காலத்தில் தனக்குத்  தானியத்தைச் சேர்த்துவைக்கும்


என்பதாக கூறுகிறது, ஆனால் ஆங்கில மூல வேதமாகிய கிங் ஜேம்ஸ் வர்சனில்,

Go to the ant, thou sluggard; consider her ways, and be wise:Which having no guide, overseer, or ruler,Provideth her meat in the summer, and gathereth her food in the harvest.  இதிலே HER என்று குறிப்பிடுவதால் அந்த பணிவிடை எறும்புகள் பெண் எறும்புகள் என்பது தெளிவாகிறதுஇது மூல ஆங்கில வேதாகமத்தில் மாத்திரமல்லவேதாகமத்தின் மூல மொழியான ஹீப்ரூ மொழியிலும் அது பெண்  பாலினத்தை குறிக்கும் சொல்லான நெமெலா(NEMALAH) என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது,

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புஇன்றைக்கு காணப்படுகிற விஞ்ஞான  வளர்ச்சியற்ற ஒரு கால கட்டத்தில் வேலை செய்யும் எறும்பு இனம் பெண்  இனம்தான் என்பதை ஒரு சாதாரன மனித மூளையினால் எவ்வாறு  கண்டுபிடிக்க இயலும்தேவ ஆவியினாலன்றி இதை யாரால் இவ்வளவுதுல்லியமாக எழுதி வைக்க இயலும்சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களே சிந்தியுங்கள்,

பைபிள் குறையுள்ளது என்று சொல்லி உங்களை நீங்களே கெடுத்துக்கொள்ளாதீர்கள்சாதாரன எறும்பு விஷயத்தில் பைபிள் இவ்வள்வு துல்லியமானதாக இருக்குமானால் விசேஷமாய் படைக்கப்பட்ட மனிதனை குறித்து பைபிள் சொல்வது பொய்யாகுமோ,மனந்திரும்புங்கள்கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்

Monday, October 13, 2014

பூமியின் உருவம் பற்றி வேதம் சொல்வதென்ன? - ( வேதாகம அறிவியல்-11)


வேதாகமத்தின் சில வசனங்கள் எந்த மேலதிக விளக்கமும் தேவையில்லாமலேயே இந்த நூற்றாண்டு கண்டுபிடித்த விஞ்ஞானக் கருத்துக்களை விவரமாக கூறி நிற்கின்றது.

 
உதாரணமாக கீழே நான் தரும் வசனத்தை கவனியுங்கள்.
யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
பூமி அந்தரத்திலே தொங்குகிறது என்னும் கண்டுபிடிப்பை கூறும் இவ்வசனத்தை இதைவிட விளக்கி கூற வேண்டுமா?

மேலும்
அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து, என்று  யோபு 28:25 இல் வேதம் கூறுகிறது.
டோர்ரி சில்லி கண்டு பிடித்த “காற்றுக்கு நிறை உண்டு” எனும் அற்புத விஞ்ஞான கூற்றை இதை விட தெளிவாக கூற வேண்டியதில்லையே?

பூமியின் உருவம்
இனி பூமியின் உருவம் பற்றி கூறும் விடயத்தில் வேதாகமம் தவறு விட்டு விட்டதாக இஸ்லாமிய நண்பர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால் குரான் கூறுவதை விட வேதாகமம் இவ்விடயத்தில் மிக தெளிவாகவே இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.
அவர்களுடைய சில கேள்விகளுக்கான பதிலை நண்பர்  anbu57 என்பவர் ”நித்திய ஜீவன்” தளத்தில் பதிவிட்டார் அப்பதிலை இங்கே பார்ப்போம்.

கேள்வி - தமிழ் வேதாகமத்தில் ஏசாயா 40:22 பின்வருமாறு கூறுகிறது.தேவன் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
இதே வசனத்தை ஆங்கில வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது.It is he that sitteth upon the circle of the earth, and the inhabitants thereof are as grasshoppers; that stretcheth out the heavens as a curtain, and spreadeth them out as a tent to dwell in:
தமிழ் வேதாகமத்தில் காணப்படும்பூமி உருண்டைஎனும் வாசகங்கள், ஆங்கில வேதாகமத்தில் “circle of the earth” எனக் காணப்படுகிறது. தமிழ் மொழிபெயர்ப்பு கூறுகிறபடி பூமி உருண்டையானது என வேதாகமம் கூறுகிறதா, அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறபடி பூமி தட்டையானது என வேதாகமம் கூறுகிறதா?

ஏசாயா 40:22-ன் மூலபாஷை வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்க்கையில், தமிழ் மொழிபெயர்ப்பு கூறுகிறபடிபூமி உருண்டைஎன்றில்லாமல்பூமி வட்டம்என்றே இருப்பதாக அறிகிறோம். எனவே ஏசாயா 40:22-ல்தேவன் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்எனும் வாசகங்கள், “தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால்தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்என ஏசாயா 40:22 கூறுவதை வைத்து, “பூமி தட்டையானதுஎன அவ்வசனம் கூறுவதாகக் கருதமுடியாது. இதை சற்று ஆராய்ந்தறிவோம்.

வட்டம் என்பது, 2 பரிமாணம் (2 dimensions) மட்டுமே உடையது. ஆனால் எந்தவொரு திடப்பொருளுக்கும் கட்டாயம் 3 பரிமாணம் (3 dimensions) உண்டு. பூமியுங்கூட முப்பரிமாணமுடையதுதான். ஆனால் முப்பரிமாணமுள்ள பூமியை நாம் பூமிக்கு வெளியேயிருந்து பார்த்தால் அதன் 2 பரிமாணத்தைத்தான் பார்க்கமுடியும். உதாரணமாக, பூமியிலிருந்து சந்திரனைப் பார்த்தால், அது முப்பரிமாணமுள்ளதாகத் தெரியாமல், 2 பரிமாணமுள்ளதாகத்தான் நமக்குத் தெரியும். ஆனால் உண்மையில், சந்திரன் முப்பரிமாணமுள்ளதுதான்.

அவ்வாறே, பூமிக்கு வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் அது 2 பரிமாணமுள்ள வட்டமாகத்தான் தெரியும்.

சந்திரன் மீது சிலகரும்புள்ளிகள்தெரிவதை நாம் அறிவோம். அக்கரும்புள்ளைகளை, “சந்திர வட்டத்தின் மீதுள்ள கரும்புள்ளிகள்அல்லதுசந்திரன் மீதுள்ள கரும்புள்ளிகள்என்றுதான் நாம் சொல்வோமேயன்றி, “சந்திர உருண்டையின் மீதுள்ள கரும்புள்ளைகள்என நாம் சொல்வதில்லை.

அதேவிதமாகத்தான்பூமி உருண்டையின் மீதுதேவன் வீற்றிருக்கிறார் என ஏசாயா கூறாமல், “பூமி வட்டத்தின் மீதுதேவன் வீற்றிருக்கிறார் எனக் கூறுகிறார். அவரது கூற்றிற்குள் பூமி உருண்டையானதுதான் எனும் கருத்தும் அடங்கியுள்ளது.
பூமிக்கு வெளியிலிருந்து பார்க்கையில் பூமியானது வட்ட வடிவமாகத் தோன்றுவதால், அது ஒரு கோளமாக (sphere) இருக்கவேண்டும், அல்லது உருளையாக (cylinder) இருக்க வேண்டும்.

தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்என ஏசாயா 40:22-ல் கூறின ஏசாயா, பூமியை ஒரு கோளமாகக் கருதி அப்படிச் சொல்லியிருப்பாரா, அல்லது ஒரு உருளையாகக் கருதி அப்படிச் சொல்லியிருப்பாரா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஏசாயாவின் தரிசனங்கள் யாவும் தேவனிடமிருந்தே பெறப்பட்டவை எனில், “பூமி ஒரு கோளம்என்பதை தேவன் அறிவாரென்பதால், ஏசாயாவும்பூமி ஒரு கோளம்என்ற புரிந்துகொள்தலில்தான்தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்எனும் கூற்றைக் கூறியிருப்பார்.

ஒருவேளை, ஏசாயாவின் தரிசனங்கள் யாவும் தேவனிடமிருந்து பெறப்படாமல், ஏசாயா சுயமாக அவற்றைக் கூறியிருந்தால், பூமி வட்ட வடிவமானது என்பதை ஏசாயா தனது சுயஅறிவின் மூலம்தான் அறிந்திருப்பார்.

பூமியின் எல்லைகளைத் தெளிவாக ஆராய்ந்தறியாமல், அது வட்ட வடிவமானது எனும் முடிவுக்கு ஏசாயா வந்திருக்கமுடியாது. பூமியின் எல்லைகளை ஆராய்கையில், அது ஒரு கோளமா, அல்லது உருளையா என்பதையும் ஏசாயா நிச்சயமாக அறிந்திருப்பார்.

எனவே ஏசாயா தன் சுய அறிவின்மூலம்பூமி வட்டத்தின்மேல் தேவன் வீற்றிருக்கிறார்எனக் கூறியிருந்தாலும், பூமி ஒரு கோளம் என்ற புரிந்துகொள்தலுடன்தான் அவர் அக்கூற்றைக் கூறியிருப்பாரேயொழிய, பூமி ஒரு உருளை என்ற புரிந்துகொள்தலுடன் அவர் கூறியிருக்கமாட்டார்.

எனவே எப்படிப் பார்த்தாலும், பூமி ஒரு கோளம் என்ற புரிந்துகொள்தலுடன்தான் ஏசாயா 40:22- ஏசாயா கூறியிருப்பாரேயொழிய, பூமி தட்டையானது என்ற புரிந்துகொள்தலுடன் அவர் அதைக் கூறியிருக்கமாட்டார்

---------------------------------------------------------------------------------------------- 
கேள்வி - மத்தேயு 4:8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:..
பூமிப்பந்தில் எவ்வளவுதான் உயரமான மலைக்கு சென்றாலும் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் பார்க்கமுடியுமா? ஒரு தட்டையான உலகத்திலேயே அது சாத்தியம்….?
பூமிப்பந்தில் எவ்வளவுதான் உயரமான மலைக்கு சென்றாலும் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் பார்க்கமுடியாது என்பது மெய்தான். தட்டையான பூமியில்தான் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் பார்க்கமுடியும் என்பதும் மெய்தான்.

ஆனால் உலகின் சகல ராஜ்யங்களையும் அவற்றின் மகிமைகளையும் நம் மாம்சக் கண்களால் துல்லியமாக/தெளிவாகப் பார்க்கமுடியுமா எனக் கேட்டால், உலகம் தட்டையாக இருந்தாலும் கோளமாக இருந்தாலும் அது சாத்தியமல்ல என்பதுதான் பதிலாக இருக்கும்.

பூமி தட்டையாக இருந்தால்கூட, பூமியின் எவ்வளவு உயர்ந்த மலைக்குச் சென்று பார்த்தாலும் நம் அருகாமையில் அதிகபட்சம் ஒரு 10 கிலோமீட்டர் ஆரமுள்ள வட்டப்பகுதியிலுள்ளவற்றை மட்டுமே ஓரளவு தெளிவாகப் பார்க்கமுடியுமேயன்றி, அதற்கும் மேலாக பல்லாயிரம் கி.மீ. தூரத்தில் உள்ளவற்றை ஒரு கடுகளவிற்குக்கூட காண இயலாது என்பதே உண்மை.

எனவே சாத்தான் இயேசுவை உயரமான மலைக்குக் கொண்டுசென்றதன் நோக்கம்: சொல்லர்த்தத்தின்படி இவ்வுலகின் சகல ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் இயேசுவின் மாம்சக் கண்களுக்குக் காட்டுவதற்காக அல்ல. பரந்த இவ்வுலகின் மகிமைகளை முடிந்தவரை அதிகபட்சம் காட்டி, இயேசுவின் மனக்கண்களுக்குள் இவ்வுலகின் முழு மகிமையையும் கொண்டுவந்து, இயேசுவை உலக இச்சைக்குள் வீழ்த்தவேண்டும் என்பதே.

ஆதியில் தேவனோடிருந்து இவ்வுலகை சிருஷ்டித்த தேவகுமாரனான இயேசுவுக்கு, இவ்வுலகின் மகிமைகளை சாத்தான் காட்டித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஆகிலும் இயேசு இவ்வுலகில் ஒரு மனுஷனாக மாம்சத்தில் இருந்ததால், அவர் கண்களின் இச்சைக்கு மசிந்துவிடுவார் எனக் கருதிய சாத்தான், அவரது மாம்சக் கண்களுக்கு முன்பாக இவ்வுலக மகிமைகளில் சிலவற்றைக் காட்டி, முழு உலகின் மகிமைகளையும் அவரது மனக்கண்களுக்குள் கொண்டுவந்திருக்கிறான்.

மற்றபடி, பூமி உருண்டையாக இருந்தாலும் தட்டையாக இருந்தாலும், இவ்வுலகின் முழு மகிமைகளையும் நேரடியாக இயேசுவின் மாம்சக்கண்களின் பார்வைக்குள் கொண்டுவருவது நிச்சயமாக சாத்தியமல்ல.

எனவே மத்தேயு 4:8-ல், உலகம் உருண்டையா, தட்டையா எனும் கேள்விக்கான பதிலை அறியக்கூடிய தகவல் எதுவுமில்லை என்பதே உண்மை.

எனவே உலகம் தட்டையானது என வேதாகமம் கூறுவதாகச் சொல்வதற்கு ஆதாரமாக மத்தேயு 4:8-க் காட்ட இயலாது
--------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி - பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார் என யோபு 9:6 கூறுகிறது.பூமிக்குத் தூண்கள் உண்டா?ஆம் எனில், பூமி அந்தரத்தில் இல்லை என்றாகிவிடுமே?

பூமியின் தூண்களைப் பற்றி சொன்ன அதே யோபு, பூமி அந்தரத்தில் தொங்குவதைப் பற்றியும் பின்வரும் வசனத்தில் கூறுகிறார்.

யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.

எனவே யோபு சொல்கிற தூண்கள் என்பது மரம், இரும்பு போன்ற திண்ணமான பொருட்களாலான தூண்கள் அல்ல.

திண்ணமில்லாத தூண்களைப் பற்றி வேதாகமத்தின் வேறொரு இடத்தில் கூறப்பட்டுள்ளது.

யாத்திராகமம் 13:21,22 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும் (மேகத் தூண்), இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் (அக்கினித் தூண்அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் நம் கண்களால் காணக்கூடிய ஸ்தம்பங்களேயாயினும், அவற்றின்மேல் கனமாக பொருட்களை வைக்கமுடியாது என்பதை நாம் அறிவோம். அவ்வாறே காற்றினாலான ஸ்தம்பத்திலும் கனமான பொருட்களை வைக்கமுடியாது.

நம் கண்களுக்குத் தெரியாத காற்றினாலான தூணைப் போன்றதொரு தூணையே யோபு 9:6-ல் யோபு கூறுகிறார். அத்தூண் என்னவாக இருக்கமுடியும்?

பூமி மற்றும் அதைச் சுற்றியுள்ள கோள்களில் உள்ள ஈர்ப்புவிசையின் காரணமாகத்தான் அவை யாவும் ஒரு குறிப்பிட்ட பாதையில் அந்தரத்தில் சுற்றி வருகின்றன என்பதை நாம் அறிவோம். அவ்வாறெனில் நம்மைப்பொறுத்தவரை பூமி அசையாமல் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதற்குக் காரணமென்ன? அதைச் சுற்றிலுமுள்ள பிறகோள்களின் ஈர்ப்புவிசை, மற்றும் பூமியின் சுய ஈர்ப்புவிசை ஆகியவையே.

எனவே ஈர்ப்புவிசை எனும் விசையினாலான தூண்களில்தான் பூமி நிலையாக நிற்கிறது. ஈர்ப்புவிசையினாலான இத்தூண்களைக் குறித்துதான் யோபு கூறுகிறார். இத்தூண்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை (காற்றுத்தூணைப் போல). ஆயினும் காற்றுத்தூண் எப்படி நம் அறிவுக்கு எட்டுகிறதோ அதேவிதமாக ஈர்ப்புவிசையினாலான தூண் யோபுவின் அறிவுக்கு எட்டியிருக்க வேண்டும். எனவேதான் அத்தூண்களை பூமியின் தூண்கள் என அவர் கூறுகிறார்.

மற்றபடி, நாம் நினைப்பதுபோல் சாதாரண இரும்பு அல்லது மரத்தூணைப் பற்றிதான் யோபு கூறினாரெனில், யோபு 26:7-ல்தேவன் பூமியை அந்தரத்தில் தொங்க வைக்கிறார்எனும் உண்மையை அவரால் எப்படிக் கூறஇயலும்?

எனவே யோபு கூறுகிறபூமியின் தூண்கள்”: திண்ணமானதும் கண்களுக்குத் தெரிகிறதுமான தூண்கள் அல்ல, நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறஈர்ப்பு விசைஎனும் தூணே என்பதை அறிவோமாக
நன்றி: HI CHRISTIANS