
.
அவள் இருதயத்தில்
தகப்பனுக்கு கீழ்ப்படியவில்லை என்ற துக்கம், தலையின்
வேதனை வேறு, வேகமாக தன் அறைக்குள் சென்று படுக்கையில்
படுத்து, விசும்ப ஆரம்பித்தாள். அப்போது அந்த வீட்டிற்கு
வேலைக்கு வரும் பெண், 'நீ போய் உன் அப்பாவை பார், நடந்ததை
சொல்' என்று கூறினாள். ஆனால் அந்த பிள்ளையோ, ஷநான் எப்படி
என தகப்பனின் முகத்தில் விழிப்பேன், நான் அவர் சொல்லை
கேட்கவில்லையே' என்று அழ ஆரம்பித்தாள். அதற்கு அந்த
பணிப்பெண், 'உன் தகப்பனின் அன்பு நீ செய்கிற காரியத்தை
பொறுத்தா இருக்கிறது? நீ அவருடைய மகள் அல்லவா?' என்று
கூறினாள். அதனால் தைரியமுற்று, அந்த பிள்ளை தன்
தகப்பனிடம் சென்று, 'அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்'
என்று அவருடைய கரத்தை பற்றி கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அப்போது அவளுடைய தந்தை, 'மகளே, நீ என் சொல்லை கேளாமல்,
விளையாட போனதும் தெரியும், விளையாடிவிட்டு, வரும்
வழியில் மாட்டப்பட்டிருந்த படத்தில் மோதி, தலைக்கு
அடிபட்டதும் தெரியும், நீ வருவாய் என காத்திருந்தேன்,
அந்த வலிக்கு தடவி கொடுக்கலாம் என்று, ஆனால் நீ என்னிடம்
வரவேயில்லை' என்று கூறினார். 'அது எப்படி உங்களுக்கு
தெரியும், நீங்கள் வேலைக்கு போகவில்லையா?' என்று அந்த
பிள்ளை கேட்டாள். அதற்கு தந்தை 'இன்று நான் உன்னுடன்
நேரத்தை செலவழிப்பதற்காக விடுமுறை போட்டேன், ஆனால், நீ
விளையாட போய் விட்டாயே' என்று கூறி, 'மகளே, நீ என்னுடைய
மகள், ஆகையால் நீ தவறு செய்தாலும் நீ என்னிடம் வரும்போது,
நான் உன்னை மன்னித்து, உன்னை ஏற்று கொள்வேன். ஆனால் நீ
தான் நான் ஏற்று கொள்வேனோ மாட்டேனோ என்று தயங்கி
என்னிடம் வராமல் போனாய்' என கூறினார். அப்போது மகள்,
அவருடைய கழுத்தை கட்டிக்கொண்டு, ஷநன்றி அப்பா' என கூறி
முத்தமிட்டாள்.
.
நம்முடைய தேவனும்
அப்படித்தான், அவர் நம்மேல் அன்புகூருவது நாம் செய்கிற
நல்ல காரியங்களுக்காகவோ, அவருக்காக நாம் படுகிற
பாடுகளுக்காகவோ அல்ல, நாம் அவருடைய பிள்ளைகளாய்
இருப்பதினால் மாத்திரமே அவர் நம்மேல் அன்பு கூறுகிறார்.
'கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய்
அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ,
அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,
அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்' - (யோவான்
1:12) என்று வேதம் நமக்கு கூறுகிறது.
No comments:
Post a Comment