Wednesday, January 15, 2014

குழந்தைகளுக்கான ஜெபம்

நானும் கர்த்தர் எனக்கு கொடுத்த பிள்ளைகளும் சியோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்கலாகவும் இருக்கிறோம். (ஏசாயா 8:18)
என் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். என் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாய் இருக்கும் (ஏசாயா 54:13)\
இதி என் பிள்ளைகள் கர்த்தரால் வந்த சுதந்திரம்; என் கர்ப்பத்தின் கனி அவரால் எனக்கு கிடைத்த பலன் (சங்கீதம் 127:4)
என் பிள்ளைகள் என் பந்தியை சுற்றிலும் ஒலிவமர கன்றுகளைப் போல் இருப்பார்கள் (சங்கீதம் 128:3)
என் சந்ததியுன் மேல் கர்த்தருடைய ஆவியையும், என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதங்களும் ஊற்றப்படும். அதனால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்கள் ஓரத்தில் உள்ள அலரிச் செடியை போல் வளருவார்கள். (ஏசாயா 44:3,4)
என் மேல் இருக்கும் தேவ ஆவியும், என் வாயில் அவர் வைத்துள்ள அவர் வார்த்தைகளும் என் வாயினின்றும் என் சந்ததியுன் வாயினின்றும் நீங்குவதில்லை (ஏசாயா 59:21)
என் பிள்ளைகள் பாதிகாப்புடன் வாழ்வார்கள். அவர்கள் சந்ததி கர்த்தருக்கு முன்பாக நிலைத்திருக்கும் (சங்கீதம் 102:8)
கர்த்தருடைய கிருபையோ அவருக்கு பயந்த என் மேலும், அவருடைய நீதி என் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் என்றென்றும் இருக்கும். (சங்கீதம் 103:17)
கர்த்தர் என் வாசல்களின் தாள்ப்பாகளைப் பெலப்படுத்தி என்னிடத்திலுள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார் (சங்கீதம் 147:13)
கர்த்தருக்கு பயப்படுகிற எனக்கு எனக்கு திடநம்பிக்கை உண்டு, என் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும் (நீதிமொழிகள் 14:26)
என் பிள்ளைகளின் பிள்ளைகள் எனக்கு கிரீடமாய் விளங்குவார்கள் (நீதிமொழிகள் 17:6)
நான் என் உத்தமத்திலே நடக்கிறேன். எனக்கு பிறகு என் பிள்ளைகளும் பாக்கியவான்களாய் இருப்பார்கள். (நீதிமொழிகள் 20:7)
இயேசுவை போல் என் பிழைகள் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும், அதிகதிகமாய்  விருத்தியடைவார்கள் (லூக்கா 2:52)
சாமுவேலை போல் என் பிள்ளை வளர்ந்து கர்த்தருக்கும் மனிதருக்கும் பிரியமாக நடந்து கொள்ளுவான் (1 சாமுவேல் 2:26)
யோவான் ஸ்நானகனை போல என் பிள்ளை ஆவியில் பெலன்கொண்டு வளருவான். பாவ மன்னிப்பாகிய ரட்சிப்பை தெரியப்படுத்துவான் (லூக்கா 1:80)
என் பிள்ளைகள் தானியேலை போல உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். இடைவிடாமல் தேவனை ஆராதிப்பார்கள். தேவன் பேரில் விசுவாசம் வைப்பார்கள். அவர்கள் கையில் எடுத்தது ஜெயமாயிருக்கும் (தானியேல் 6:4, 16,23,28)
என் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனங்கள் சொல்லுவார்கள். தரிசனங்களை காண்பார்கள்

No comments:

Post a Comment