Friday, March 21, 2014

கறைபடியாத கையையுடைய கர்த்தரின் ஊழியர்

கர்த்தரிடத்தில் உண்மையும் உத்தமுமான ஒரு ஊழியர் இருந்தார். 'கறைபடியாத கையையுடைய கர்த்தரின் ஊழியர்' என்று அவரைப் பாராட்டுவார்கள். பெரும் பணப்புக்கமுள்ள அவரது நிர்வாகத்தில் பத்துப்பைசாவுக்குக் கூட அவர் ஆசைப்பட்டது கிடையாது. அதற்கு காரணம் என்ன என்று அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
.
'என் சிறுவயதில் என் தாய்க்கு சமையல் வேலைகளில் அதிக உதவியாக இருக்க ஆசைப்படுவேன். குறிப்பாக இரவில் சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்து வெள்ளைத்துணி விரித்து, அழகாக வைப்பதில் எனக்கு அதிக மகிழ்ச்சி. 'அம்மா சாப்பாட்டு மேஜையை ஒழுங்கு செய்யட்டுமா?' என்று உற்சாகமாக கேட்பேன். அப்பொழுதெல்லாம் என் தாயார் சமையலறையிலிருந்து சொல்லும் மறுமொழி என்ன தெரியுமா? 'உன் கை சுத்தமாக இருக்கிறதா?' என்பார்கள். இந்த குரல் என் வாழ்நாள் முழுவதும் என் உள்ளத்திலே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என் உத்தியோக வாழ்விலும், ஊழிய காலங்களிலும், உன் கை சுத்தமாக இருக்கிறதா என்ற என் அம்மாவின் கேள்வி எச்சரிப்பின் தொனியாக எனக்குள் தொனித்துக் கொண்டே இருக்கிறது. பரிசுத்தமான தேவனுக்கு நாம் ஊழியம் செய்யம் போது நம் உள்ளம் மாத்திரமல்ல, நம் கைகளும் சுத்தமாயிருக்க வேண்டாமா?' என்றார்.

No comments:

Post a Comment