.
பலவித
காரணங்களால், விநோத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில்
மூன்று நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று. நான்காம் நாள்
வேகமாக தன் சொந்த ஊருக்குச் சென்று தன் குடும்பத்தாரை
சந்தித்து விட்டு, பிரபுவின் வீட்டிற்கு சென்று,
பொருட்களையும், பேரீச்சம் பழப்பெட்டியையும் கொடுத்தான்.
தன் மகன் அன்போடு, ஆவலோடு கொடுத்தனுப்பிய பெட்டியை
உடைத்து ஆசையோடு பேரீச்சம் பழங்களை ருசித்தாள் தாயார்.
பழம் 'வெகு ஜோர்' என்று சொல்லி தன் கணவருக்கும், தன்
மகளுக்கும் கொடுத்தார். இருவரும் பழத்தை
சாப்பிட்டுவிட்டு முகத்தை சுழித்தனர். காரணம்,
பேரீச்சம் பழங்கள், பழசாகி விட்டன. கெட்டுப் போகிற வாசனை
பெட்டியிலிருந்து வந்தது. ருசியும் குறைந்து விட்டது.
பிரபுவின் அப்பாவும், தங்கையும் அவன் அம்மாவை
சாடினார்கள். கெட்டுப் போன பழத்தை சாப்பிட்டுவிட்டு,
நன்றாக, ருசியாக இருக்கிறது என்று ஏன் பொய் சொல்ல
வேண்டும் என்று கேட்டனர். அதற்கு பிரபுவின் அம்மா 'நான்
ருசித்தது என் அன்பு மகன் பிரபுவின் அன்பையே தவிர,
பேரீச்சம் பழத்தையல்ல' என்றாராம். பிரபுவின் அம்மாவின்
பதில் இருவரையும் சிந்திக்க வைத்தது.
.
அன்பானவர்களே!
மேற்கண்ட சம்பவத்தில் பிரபுவின் அம்மா கெட்டுப்போன
பழத்தின் ருசியை அறியாமல் போனதற்கு காரணம், தன் மகன் தன்
மேல் வைத்திருந்த அளவற்ற அன்பாகும். நாம் ஒருவரை ஒருவர்
உயிருக்கு உயிராக நேசிக்கும் போது தான், மேலான தன்மைகள்
நம்மில் வெளிப்படும்.