Tuesday, July 15, 2014

பரிசுத்தத்தை காத்துக் கொள்வோம்

ஒரு பெரிய உணவகத்தில் ஒரு இளம் ஜோடி வந்து உணவை ஆர்டர் செய்தார்கள். அதோடு கூட கையில் எடுத்துச் செல்லும்படியாக ஒரு பார்சலையும் கேட்டார்கள். பார்சல் வந்ததும், பணத்தை செலுத்திவிட்டு, தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினர். சிறிது நேரத்திற்குப்பின் திறந்தால் அதில் உணவு இல்லை. கட்டுகட்டாக பணநோட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
.
அதைக் கண்ட அதிர்ச்சியுற்று, அதை அப்படியே எடுத்துக் கொண்டு கடை முதலாளியிடம் கொடுத்தனர். அவரும் அதிச்சியுற்றார். பின் அவர்களுக்கு நன்றி செலுத்தினார். அவர்களைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் பெருமையாக சொன்னார்.
.
அங்கே தற்செயலாக வந்திருந்த பத்திரிக்கை நிருபர் ஒருவர் இருவரையும் பேட்டிகண்டு, புகைப்படம் எடுப்பதற்காக சேர்ந்து நிற்க சொன்னார். ஆனால் அவர்கள் இருவரும் ஒரேயடியாக மறுத்தனர். கடை முதலாளி 'இப்படிப்பட்ட நற்குணம் எல்லாருக்கும் தெரிய வேண்டும். ஆகவே கண்டிப்பாக போட்டோ எடுத்து பத்திரிக்கையில் போட வேண்டும்' என்று வற்புறுத்தினார். ஆனால் அவர்களோ பிடிவாதமாய் மறுத்து விட்டனர். ஏன் என்று முதலாளி கேட்கவே, அவர்கள் இருவரும் 'நாங்கள் கணவன் மனைவி அல்ல' என்று சொல்லி தலைகுனிந்து நின்றனர்.
.
நற்பண்பும் நல்ல நடத்தையும் இணைபிரியா இரண்டு தண்டவாளங்கள் போன்றவை. மேலேயுள்ள சம்பவத்தில் நற்பண்பு சிறந்து விளங்கினாலும், நடத்தை மோசமாயிருந்தது.

No comments:

Post a Comment