Friday, November 23, 2012

ஆத்துமாவின் மேல் அக்கறை

இந்திராபுரியை ஒரு சிற்றரசன் பல காலமாக ஆண்டு வந்தான். அவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். தனது நான்காவது மனைவியை மற்ற மூவரைக் காட்டிலும் அதிகமாக நேசித்ததால் அவளை பொன் ஆபரணங்களால் அழகுபடுத்தி சிறந்த உணவு வகைகளை அவளுக்கு விருந்தாக்கி மகிழ்ந்தான். எல்லாவற்றிலும் சிறந்ததை மட்டுமே அவளுக்கு கொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியையும் நேசித்தான். ஆனாலும் அவள் மற்ற நாட்டு அரசர்களை கவரும
் வண்ணம் நடந்து கொள்வதால் தன்னை விட்டு என்றாவது ஒருநாள் போய்விடுவாள் என்ற அச்சம் கலந்த நேசம் வைத்திருந்தான்.

அரசனின் இரண்டாவது மனைவி மிகுந்த பொறுமையும், இரக்கமும் கொண்டவள். அரசனின் கடின பாதைகளில் அவனுக்கு ஆறுதலும் ஊக்கமும் சொல்லி ஊன்று கோலாய் திகழ்ந்தாள். ஆகவே அவளையும் அவன் நேசிக்க தவறவில்லை.

அரசனின் முதல் மனைவி அவனது நம்பிக்கைக்குரியவள். அவனது ஆஸ்திகளையும், செல்வத்தையும் உத்தமமாக நிர்வகித்து வந்தாள். அவளை அவன் நேசித்தாலும், அவளோடு அவன் அதிக நேரம் செலவழிக்க விரும்பமாட்டான். அவளுக்கென்று எதுவுமே அவன் தனது வாழ்நாளில் செய்ததே கிடையாது.

திடீரென்று ஒரு நாள், அரசன் கொடிய வியாதியில் சிக்கிக் கொண்டான். தனது மரண படுக்கையில் இருந்து, தனது ஆஸ்தி, பெருமை, புகழ் எல்லாவற்றையும் எண்ணி பார்த்து "எனக்கு இப்போது நான்கு மனைவிகள் உண்டு, ஆனாலும் நான் இறந்த பின் என்னோடு யார் வருவார் நான் தனியாக தானே செல்வேன். ?" என்று புலம்பி வருந்த ஆரம்பித்தான்.

அவன் தனது அருகில் இருந்த நான்காவது மனைவியிடம் "என் வாழ்நாள் முழுவதும் உன்னை அதிகமாக நேசித்திருக்கிறேன், ஆனால் இப்போது தனியாக மரிக்க போகிறேன். என்னோடு நீயும் வருவாயா?" என்றான். "வாய்ப்பே இல்லை" என்று வெடுக்கென சொல்லி அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினாள். அந்த வார்த்தை அவன் இருதயத்தை கத்தியினால் குத்தியது போல ஊடுறுவியது.

இந்த வருத்தத்தோடு மூன்றாவது மனைவியிடம் "என் வாழ்நாள் முழுவதும் உன்னை அதிகமாக நேசித்திருக்கிறேன், ஆனால் இப்போது தனியாக மரிக்க போகிறேன். என்னோடு நீயும் வருவாயா?" என்றான். "இல்லை, வாழ்க்கை அற்புதமானது. நீங்கள் இறந்த பின் நான் வேறொருவரை மறுமணம் புரிந்து சந்தோஷமாக வாழ்வை தொடர்வேன்" என்று சொல்லி திரும்பி பார்க்காமல் வெளியேறினாள்.

இன்னொரு புறம் இருந்த மூன்றாம் மனைவியை நோக்கி, "என் வாழ்நாள் முழுவதும் உன்னை அதிகமாக நேசித்திருக்கிறேன், ஆனால் இப்போது தனியாக மரிக்க போகிறேன். என்னோடு நீயும் வருவாயா?" என்றான். "அன்பரே என்னை மன்னிக்க வேண்டும். நானும் உங்களை நேசிக்கிறேன் ஆனால் உங்கள் கல்லறை வரை மட்டுமே என்னால் வர முடியும்" என்று சொல்லி விலகி நின்றாள். இந்த பதில் அரசனுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. அவன் வேதனையில் தலையணை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

அப்போது அங்கொரு குரல், "நான் உங்கோடு வருவேன். எந்த சூழலிலும் நீங்கள் எங்கு சென்றாலும் நான் உங்களோடு வருவேன்" என்ற கேட்டது. சட்டென நிமிர்ந்து பார்தான். அங்கு அவனது முதல் மனைவி மெலிந்து, பொலிவிழந்து, அழகிழந்து நின்று கொண்டிருந்தாள்.

அரசன் அவளது தோற்றத்தை கண்டு மிக வேதனையோடு " எனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் உன்னை நான் நன்கு கவனிக்கவில்லை. ஆனால் என்னை விட்டு விலகிய இந்த மூன்று மனைவிகளையும் அதிகம் கவனித்துவிட்டேனே.இப்போது வருந்தியும் ஒரு பிரயோஜனமும் இல்லையே!" என்று அவளை கட்டி அணைத்து அழுதான்.

நண்பர்களே! ஒரு மனிதனின் சரீரமே! முதல் மனைவி. ஆடம்பர உடைகளால் , பொன் ஆபரணகளால் அலங்கரித்தாலும் அது நமது மரணத்தின் போது நம்மை விட்டு போய்விடும்.

ஒரு மனிதனின் ஆஸ்தி, செல்வம் எனபதே இரண்டாம் மனைவி. ஒருவன் மரித்த பின் அது வேறொரு மனிதனிடம் சென்றுவிடுகிறது.

ஒரு மனிதனின் உறவினர்களும், நண்பர்களும் அவனது மூன்றாம் மனைவி. அவன் மரிக்கும் போது இவர்கள் கல்லறை வரை மட்டுமே அவனோடு வர இயலும்.

ஆத்துமாவே! முதல் மனைவி. பணத்தாலும், புகழாலும், இன்பத்தாலும் வாழ்நாள் முழுவதும் புறக்கணிக்கப்படும் அத்துமாவே ஒரு மனிதனின் மரணத்திற்கு பின்பும் அவனோடு கூட பயணிக்கக் கூடியது. ஆகவே நமது ஆத்துமாவை தேவ வார்த்தையாலும், பிரசனத்தாலும் இப்போதே பெலப்படுதுவோம். ஆத்துமா ஒன்று தான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க கூடியதும் , நித்திய காலம் வாழக் கூடியதுமாகும்.

உங்கள் ஆத்துமாவின் மேல் அதிக அக்கறை கொண்டு தன்னையே தத்தம் செய்த ஆத்தும நேசராம் இயேசு கிறிஸ்துவை அதிகமாய் நேசியுங்கள்.

[மத்தேயு 16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?]

No comments:

Post a Comment