Sunday, November 11, 2012

சிட்சையின் பலன்

ஒரு பிடிவாதமான முரட்டு குணமுள்ள சிறுபிள்ளையிருந்தாள். சிறுவயதிலே தான் நினைத்த வழியில் சென்றாள். ஓரு நாள் ஒரு பெரிய விபத்தில் அகப்பட்டு ஆயுள் முழுவதும் நொண்டியாய் இருக்க வேண்டிய நிலை உருவானது. அது இன்னும் அவளை முரட்டு குணமுள்ளவளாக்கியது. 


ஓரு நாள் அவளை சந்திக்க ஒரு ஊழியர் வந்தார். அவள் புரிந்து கொள்ளும் வண்ணமாக ஒரு கதையை சொன்னார். "ஆதியில் பூமி சமமான புல்வெளியாக
இருந்தது. அதில் நடந்த எஜமான், புல்வெளியிடம் 'உன்னில் ஏன் பூக்களில்லை' என வினவினார். புல்வெளி பதிலாக, 'என்னிடம் விதைகளில்லை' என்றது. பின்பு அவர் பறவைகளிடம் பேசினார். அவைகள் சகலவித பூவிதைகளையும் தூவியது. விரைவில் கல்வாழை, காட்டு செவ்வந்தி போன்ற ஒரு சில மலர்கள் பூத்தன. எஜமான் புல் வெளியிடம் 'அதிக மணம் தரும் செடிகள் எங்கே?' என்றார். புல்வெளி துயரக்குரலில் 'எஜமான், என்னால் அப்பூச்செடிகளை காப்பற்ற முடியவில்லை.
அவைகள் மேலோட்டமாக முளைப்பதினால் கடுங்காற்று வீசன உடனே அவைகள் பறந்து போகின்றன' என்றது.

எஜமான் பூமிக்கு கட்டளையிட்டார். பூமி அதிர்ந்தது. புல்வெளியின் இதயத்தை பிளந்தது. புல்வெளி வேதனையால் முனகியது. காயத்தால் வருந்தியது. பின்
அந்த பிளவினூடே நதி பாய்ந்தது. பறவைகள் மீண்டும் விதைகளை தூவின. மீண்டும் பூச்செடிகள் முளைத்தன. அப்போது கடும் காற்றடித்தாலும் அசைக்க முடியாத அளவிற்கு அவற்றின் வேர்களை ஆழமாய் விட முடிந்தது. சில நாட்களில் ஆயிரக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கின. எஜமான் இன்புற்று அங்கு இளைப்பாறினார்" என்று கதையை கூறி பின் அவ்ஊழியர் ஒரு வசனத்தை வாசித்தார். 'ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை' - (கலாத்தியர் 5:22-23) அதில் ஆவியின் கனி என வரும் இடத்தில் பூ என வாசித்து, பின்பு சாந்தம், நீடிய பொறுமை போன்ற பூக்கள்
பிளவில்தான் செழித்து வளர முடியும்" என்றார். அச்சிறுமியும், தன்னுடைய துன்பத்திலும் அப்படிப்பட்ட பூக்கள் பூக்க தேவனிடம் தன்னை அர்ப்பணித்தாள்.

No comments:

Post a Comment