Friday, May 23, 2014

பெற்றோரை வெறுக்காதே

ஒரு வயதான மனிதர் தன் மகன், மருமகள் மற்றும் நான்கு வயது பேரனோடு தன் மனைவி மரித்துப்பின் வாழ்வதற்கு போனார். அவர் தள்ளாத வயதின் காரணமாக கண்கள் மங்கியதாகவும், நடை தள்ளாடுவதாகவும், கரங்கள் நடுங்கியபடியும் இருந்தது.
.
அந்தக் குடும்பம், தினமும் ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். இந்த வயதானவர், கண்கள் மங்கியதாகவும், கைகள் நடுங்கியபடியும் இருந்ததால், கையிலிருந்த உணவு கீழே விழுவதும், டம்ளரில் இருந்த பால் மேஜை விரிப்பின் மேல் விழுவதாகவும் இருந்தது. அது மகனுக்கும் மருமகளுக்கும் தொந்தரவாக இருந்தது. மகன் ஒரு நாள் சொன்னான், ''இந்த வயதானவர் பண்ணுகிற காரியஙகள், என்னை பாதிக்கிறது. அவர் உண்ணும்போது வரும் சத்தமும், கீழே போடும் உணவுகளும் இந்த இடத்தை அழுக்குப்படுத்தி விடுகின்றன. இதற்கு ஏதாவது ஒரு காரியம் செய்தே ஆக வேண்டும்'' என்று தன் மனைவியிடம் கூறினான்.
.
அதன்படி, அவர்கள் அந்த அறையில் ஒரு மூலையில் அவருக்கென்று ஒரு மேஜையைப் போட்டு, அதில் அவரை அமர்த்தி சாப்பிடவும், மற்றவர்கள் ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிடவும் செய்தார்கள். அவர் பீங்கான் தட்டுகளை உடைத்ததால், அவருக்கு மரத்திலான தட்டு ஒன்றும் சாப்பிட சொடுத்திருந்தார்கள். அவர் அங்கு தனியே சாப்பிடும்போது அவர் கண்களில் கண்ணீர் வருவதைக் குடும்பத்தினர் கண்டனர்.
.
இதையெல்லாம் நான்கு வயது பேரன் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு சாப்பிடுவதற்கு முன் அவன் அங்கிருந்த மரக்கட்டையை வைத்து ஏதோ பண்ணிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அவன் தந்தை 'மகனே நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் என்றுக் அன்பொழுகக் கேட்டார். அதற்கு அந்த நான்கு வயதுச் சிறுவன், 'அப்பா நீங்களும் அம்மாவும் வயதாகும்போது சாப்பிடுவதற்கு இந்த கட்டையிலிருந்து தட்டுகளை செய்துக் கொண்டிருக்கிறேன்' என்றான். அதைக் கேட்ட அத்தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த இரவிலிருந்து வயதான தகப்பன் திரும்ப எல்லாரும் சாப்பிடும் மேஜைக்கு அழைத்துவரப்பட்டு அவர் முடிவுகாலம் வரை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார். இப்போது அவர் சாப்பிடும் சத்தமோ, மேஜையின் மேல் விழும் பாலோ எதுவுமே அவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

No comments:

Post a Comment