Saturday, August 2, 2014

உணர்வில்லாத இருதயம்

ஒரு சர்க்கஸ் நடைபெற்று கொண்டு இருந்த இடத்தில் கோமாளிகள் நின்று எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தனர். ஜனங்கள் தங்களையே மறந்து அந்த கோமாளிகள் செய்யும் கோமாளிதனத்தை இரசித்து பார்த்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த சர்க்கஸ் உரிமையாளர் முன்னே வந்து, அந்த சர்க்கஸ் கூடாரம் தீப்பிடித்து இருப்பதாகவும், உடனே எல்லாரையும் வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஜனங்களோ, இதுவும் ஒரு சிரிப்புக்காக சொல்லப்படும் காரியம் என்று நினைத்து இன்னும் சிரிக்க ஆரம்பித்தனர். அந்த முதலாளியோ எல்லாரையும் வெளியேறும்படி கெஞ்ச ஆரம்பித்தார். பின்னர்தான் மக்களுக்கு புரிய வந்தது, அது சிரிப்புக்காக அல்ல, நிஜம்தான் என்று. ஆனால் ஏற்கனவே கொட்டகை முழுவதும் தீப்பிடித்து விட்டபடியால், உயிர் பிழைத்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.
.
அதைப்போலவே ஒரு ஐசுவரியவான் தான் நரகத்தின் அக்கினியில் எரியும்போது, லாசருவை தன் சகோதரரிடத்தில் அனுப்பும்படிக்கும், அவர்கள் அந்த நரக அக்கினியில் சிக்கி கொள்ளாதபடி லாசரு சென்று எச்சரிக்கும்படியாகவும் அவனை அவனுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி ஆபிரகாமிடம் கெஞ்சுகிறான் (லூக்கா 16:27-28). 'ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்' (லூக்கா 16:29-31). எத்தனை சோகமான காட்சி! அத்தனை நாட்கள் பூமியிலிருந்த நாட்களில் தன்னுடைய சகோதரர்கள் மேல் இல்லாத கரிசனை நரகத்தில் எரியும்போது அந்த ஐசுவரியவானுக்கு வருகிறது, ஆனால் ஏற்கனவே காலம் கடந்து விட்டபடியால், ஒன்றுமே செய்யமுடியாத நிலைமை!

அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். - (லூக்கா 16:27-28).

No comments:

Post a Comment