Thursday, May 2, 2013

டேவிட் பிரனாய்ட் (1718 -1747)

ஒருதங்கள் கிராமத்தின் மத்தியில் ஒரு வெள்ளை மனிதர் வந்து தங்கி, கூடாரம் போட்டிருக்கிறார் என்று அந்த கிராமத்தில் வாழும் செவ்விந்தியர்களுக்கு தெரிய வந்தது. அவரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஒரு கூட்ட மக்கள் அவர் இருந்த கூடாரத்திற்கு வந்தார்கள். அந்த மனிதர் ஒருவேளை துப்பாக்கியோ மற்ற ஆயுதங்களோ வைத்திருக்கலாம் என்று எண்ணி, சத்தமில்லாமல் மெதுவாக அவர் இருந்த கூடாரத்தை சுற்றி வளைத்தார்கள்.
அவர்கள் எட்டிப்பார்த்தபோது, அந்த வெள்ளை மனிதர் முழங்கால் படியிட்டு,
கண்கள் மூடியிருப்பதையும், தலை உயர்த்தப்பட்டு, ஏதோ முணுமுணுத்துக்
கொண்டிருப்பதையும் கண்டார்கள். என்ன செய்கிறார் என்று நினைத்துக்
கொண்டிருந்தபோதே, அவருக்கு முன்னால், ஒரு நல்ல பாம்பு படமெடுத்து
ஆடிக்கொண்டிருப்பதை கண்டார்கள். அந்த பாம்பு அவரை கொத்தி,
இப்பொழுது அவர் மரித்து விழுவார் என்று அவர்கள் பார்த்துக்
கொண்டிருந்தபோதே, அந்த பாம்பு கொஞ்ச நோரம் அப்படியே
இருந்துவிட்டு, பின் தான் வந்தவழியே போய் விட்டது. நடந்த ஒன்றும் அந்த
மனிதருக்கு தெரியாது. ஆனால் அதை கவனித்து கொண்டிருந்த
செவ்விந்தியர்கள் ஒன்றும் பேசாமல் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி போய்
விட்டார்கள்.
அடுத்த நாள் வெள்ளை மனிதராகிய டேவிட் பிரனாய்ட் செவ்விந்தியர்களை

பேசும்படி அணுகியபோது, அவர் மேல் அவர்களுக்கு இருந்த கோபம்
தணிந்திருந்தது. முற்றும், பாம்பு சம்பவத்தை அவர்கள் தங்கள் கிராமத்தில்
அனைவருக்கும் அதற்குள் தெரிவித்திருந்தனர். அவர்கள் இந்த வெள்ளை
மனிதனுக்குள் இருக்கும் ஆவி மிகவும் வல்லமையுள்ளது என்றும் பேசிக்
கொண்டார்கள்.
.

.
1743 ஆம் ஆண்டு, டேவிட் பிரெனாய்ட் அவர்கள் தனது 25ஆவது வயதில்

ஸ்காட்லாந்து மிஷனெரி சங்கத்தால் அமெரிக்காவிற்கு மிஷனெரியாக
அனுப்பப்பட்டார். அவர் டிபி வியாதியால் தாக்கப்பட்டிருந்ததால், அடிக்கடி
இரத்த வாந்தி எடுத்து, மிகவும் பெலவீனமாயிருந்த போதிலும், அவர்
தனக்குள்ளிருந்த வல்லமையான பரிசுத்த ஆவியானவரால், அநேக
செவ்விந்தியர்களை கர்த்தருடைய அன்பிற்குள் கொண்டு வந்த பாத்திரமாக
செயல்பட்டார்./
அவருடைய ஊழியம் நான்கு வருடங்களே ஆனபோதிலும், அவருடைய
ஜெப வாழ்க்கையினாலும், தன்னுடைய தியாகமான வாழ்வினாலும்,
கர்த்தருடைய ஆவியானவர் அவருக்குள் இருந்து செயல்பட்டதினாலும்,
அநேகரை கர்த்தருடைய இரட்சிப்புக்குள் வழிநடத்த முடிந்தது. அவர் தனது
29ஆவது வயதில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாலும், அவருடைய
ஊழியத்தைக் குறித்து இன்றும் அநேகர் சொல்லும்படியாக அவருடைய
வாழ்க்கை அமைந்திருந்தது.

No comments:

Post a Comment