Thursday, June 6, 2013

பொறுமையாய் இரு

ஒரு பெரிய சுய சேவை பொருள் அங்காடி ஒனிறில் ஒரு பெண் தன்னுடைய மூன்று வயது சிறுமியுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வந்திருந்தாள். அங்குள்ள ஒவ்வொரு அலமாரியாக பார்த்து தனக்கு தேவையானவைகளை எடுத்து கையில் வைத்திருந்த கூடையில் சேகரித்துக் கொண்டே வந்தாள். அந்த சிறு குழந்தை கண்ணில் காணும் ஒவ்வொன்றையும் கேட்டு அழுதுகொண்டே வந்தது. இவற்றையெல்லாம் அங்கு பணிபுரியும் ஒரு நபர் பார்த்துக் கொண்டே இருந்தார்.
.
அவர்கள் பிஸ்கட்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதிக்கு சென்றவுடன் அந்த குழந்தை பிஸ்கட் வேண்டுமென்று அடம்பிடித்தது. உடனடியாக அந்த பெண், அனித்தா அமைதியாக இரு. 10 நிமிடம் தான் பொறுத்துக் கொள் என்றாள். பின்பு சிறிது நேரம் கழித்து பொம்மைகளைக் கண்டவுடன் குழந்தை பொம்மை வேண்டுமென்று அழ ஆரம்பித்தது. உடனே, அனித்தா இன்னும் 5 நிமிடத்தில் நாம் வீட்டிற்கு கிளம்பி விடலாம், பொறுமையாக இரு என்றாள். கடைசியாக வாங்கிய பொருட்களுக்கு பில் போடும் இடத்திற்கு வந்தார்கள். அங்கு சாக்லேட் இருப்பதை அச்சிறுமி கண்டவுடன் சாக்லேட் வேண்டுமென்று ஓவென்று அழ ஆரம்பித்தாள். உடனே தாயார் 'அனித்தா இதோ சாமான்களெல்லாம் வாங்கியாச்சி உடனே நாம் வீட்டிற்கு கிளம்பி விடலாம் வீட்டிற்கு போய் ஒரு சுகமான குட்டி தூக்கம் போடலாம், பொறுமையாய் இரு,' என்றாள். இதைக் கவனித்துக் கொண்டே இருந்த அந்த நபர் அத்தாயாரை பார்த்து உங்கள் குழந்தை அனித்தா எவ்வளவு தொந்தரவு செய்தும் கோபப்படாமல், பொறுமையாகவும் கனிவாகவும் பேசி சமானித்து விட்டீர்களே என்று பாராட்டினார். அப் பெண் சிரித்துக் கொண்டே என் குழந்தையின் பெயர் மீனா என் பெயர் தான் அனித்தா, பொறுமையை இழந்துவிடாமலிருக்க நான் என்னிடம்தான் பேசிக் கொண்டேன் என்றார்.

No comments:

Post a Comment