Saturday, October 4, 2014

இந்தியாவின் முதல் ஆலயம்

முதல் ஆலயம் தோன்றிய வருடம் 52ம் வருடம்.
இடம்.... பழையூர், கேரளா. திருச்சூர் பகுதியில் உள்ளது

இயேசு கிறிஸ்துவோடு இருந்த சீஷர் பரிசுத்த தோமா அவர்கள் இந்தியாவிற்கு வந்தார். கேர்ளா பகுதிக்கு வந்த இவர் அங்குள்ளவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றி உரைத்து பின் சபையை நிறுவினார். இது 52ம் வருடம் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.

இது இன்று வரை கத்தோலிக்க தேவாலையமாக இருந்தாலும் இயேசு கிறிஸ்துவை சுமந்து வந்த முதல் ஆலயம். கால் மிதிக்கும் தேசம் எல்லாம் நமக்கு சொந்தமாகும். நிச்சயம் இந்தியா இயேசு அண்டை வந்தே தீரும்.

உங்கள் ஆலயங்களை நினைத்து கொள்ளுங்கள். இன்று ஒரு ஆலயமாக நிறுக்கும் உங்கள் ஆலயம் நிச்சயம் பல ஆயிரமாக பெருகும் நாள் வரும். அப்போது தேவனின் மகிமையை மீண்டும் உணர்வீர்கள்.

பரிசுத்த தோமாவால் கட்டப்பட்ட முதல் இந்திய ஆலயத்திற்கு நன்றி செலுத்துவோம். அன்று தோமா போன்ற பாரம் மிகுந்த ஊழியர்கள் வராமல் இருந்திருந்தால் இன்று நாம் வேதாகமத்தை ஏந்தியிருக்க முடியாது. இன்று நீங்கள் தேவனுக்காக எழாவிட்டால் உங்கள் சந்ததி அழிவதை தடுக்கமுடியாது.

தேவனுக்காக வைராக்கியமாய் எழுந்து நிற்போம்.

தேவன் உங்கள் மூலமாக செயல்படுவாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

No comments:

Post a Comment