Sunday, October 5, 2014

ஓர் வீரனின் சாட்சி - உலக கோப்பை இறுதி போட்டி

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அற்புத நாதா உம கரத்தில்

தேவனே, இப்போது உம்மிடம் எதையும் கேட்டவில்லை ஆனால் கொடுத்திருக்கிற எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி சொல்கிறேன்.

இது ஓர் வீரனின் சாட்சியுள்ள பதிவு. ஜெர்மனி உலக கோப்பை இறுதி போட்டியில் அர்ஜென்டீனாவை வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. இரண்டு அணி வீரர்களும் திறமையாக விளையாடினர். ஆனால் கூடுதல் நேர விளையாட்டில் ஜெர்மனி வீரர் மரியோ அவர்கள் கோல் அடித்து வெற்றியை தன் நாட்டு வசமாக்கினார்.

இவர் தன்னுடைய முகபுத்தக பகுதியில் தேவனுக்கு நன்றி செலுத்தி பதிவிட்டு இருக்கிறார். இது ஓர் பெரிய சாட்சி ஆகும். அனைத்தையும் தேவனுடைய பாதத்தில் தாழ்மையாக அர்ப்பணித்து அமைதியாக காட்சி தரும் இவர் ஓர் தீவிர விசுவாசியாவார். அதிகமாக கடவுளை நேசிக்கும் இவர் தான் உலக வலாற்றில் இடம் பிடித்த போதும் "தேவனே உம்மிடம் நாம் எதையும் கேட்கவில்லை, ஆனால் நீர் கொடுத்திருக்கிற அனைத்திற்காகவும் நன்றி சொல்கிறேன்" என்று தாழ்மையாக கூறியிருப்பது ஆச்சரியமே..

நாமும் தாழ்மையாக வெற்றிகளை குவித்து தேவனின் பாதத்தில் அர்ப்பணித்து சாட்சியாய் வாழ்வோம்.தேவன் உங்களை பெலப்படுத்துவாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

https://www.facebook.com/photo.php?fbid=481524808617714&set=a.422864394483756.1073741827.422861481150714&type=1&theater

No comments:

Post a Comment