
.
அதை கண்ட சில குடும்ப நண்பர்கள், அவனுடைய தாயிடம் வந்து, இந்த மாதிரி 'உங்கள் மகன் பாவ காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்' என்று கூறினார்கள். அதற்கு அந்த தாய், 'நான் அவனிடம் தன் வழியை விட்டு நல் வழிக்கு வா என்று சொன்னாலும், அவன் வருவானா என்பது சந்தேகம். ஆனால் என் பிள்ளைகளை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்
கொடுத்திருக்கிறபடியால் தேவன் அவர்களை காத்துக் கொள்வார் என்கிற
நம்பிக்கை எனக்கு உண்டு' என்று கூறி, அதற்காக முறுமுறுக்காமல், கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து. ஜெபத்தோடு காத்திருந்தார்கள். அவர்கள் அப்படி முறுமுறுப்பில்லாமல், நம்பிக்கையோடும், கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியோடும் இருப்பதைக் கண்டு அநேகருக்கு ஆச்சரியமாக இருந்தது.
.
.ஒரு நாள் வந்தது, அந்த மகன் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு, அது அவனுடைய தவறு இல்லை என்றாலும், போலீஸிடம் மாட்டிக் கொண்டான். அவனது நண்பர்கள் அவனை விட்டு ஓடிப் போனார்கள். அப்போதுதான் அவனுக்கு தன் நண்பர்களின் குணநலன்கள் தெரிய ஆரம்பித்தது. தன் தாய் தனக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிப்பதை உணர ஆரம்பித்தான். அவனது வாழ்க்கை மாற ஆரம்பித்தது. அவன் மேல் தவறு இல்லை என்று நிரூபிக்கப்பட்டு, அவன் சிறையிலிருந்து வெளியே வந்தான்.
.
.அவனது தாயார் கர்த்தருக்கு நன்றி சொன்னார்கள். 'எனக்கு தெரியும், கர்த்தரிடம் நான் ஒப்புக்கொடுத்ததை அவர் கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார் என்று. ஆகவே உன்னிடம் நான் நம்பிக்கை இழக்கவில்லை, விசுவாசத்தோடு கர்த்தர் உன்னை தொடுவார் என்று காத்திருந்தேன், கர்த்தர் என்னை வெட்கப்படவிடவில்லை' என்று கூறினார்கள்.
No comments:
Post a Comment