Friday, October 4, 2013

பாவத்திற்கு விலகியோடுங்கள்

ஒரு வேதியியல் வகுப்பில் பிராக்டிகல் பீரியடில் ஒரு மாணவி ஒரு வாளி நிறைய தண்ணீரில் ஒரு பெரிய அளவு பொட்டாசியத்தை போடுவதற்கு தயாராக இருந்தாள். அதை கண்ட ஆசிரியர் 'நீ என்ன செய்ய போகிறாய்' என்று கேட்டார். 'நான் இந்த பொட்டாசியத்தை இதில் போட போகிறேன்' என்று அந்த மாணவி கூறினாள். அப்போது அந்த ஆசிரியர், 'நீ அதை போடுமுன் அந்த தண்ணீரை ஒரு ஐந்து நிமிடம் கலக்கி கொண்டிரு' என்று கூறினார், அந்த மாணவி புரியாமல், 'எதற்கு ஐயா' என்று கேட்ட போது, அவர் சொன்னார், 'அதற்குள் நான் இங்கிருந்து ஓடி விடுவேன்' என்று. ஏனென்றால் அவருக்கு தெரியும், அவள் அதை போட்டால், அந்த இடம் முழுவதும் அது கறை படுத்தி விடும் என்று.
.
வேதத்தில் வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். (1 கொரிந்தியர் 6:18) விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள் (1 கொரிந்தியர் 10:14) என்று நம்மை எச்சரிக்கிறது. நாம் சோதனைக்குள்ளாக வரும்போது அந்த இடத்தை விட்டு ஓடி விடுவதுதான் சிறந்ததாகும். சில வேளைகளில் அந்த மாதிரி பாவம் செய்ய நேரிடும் சமயங்களில் நாம் நினைக்கிறோம், நான் இதை பார்த்து கொள்வேன், இதை சமாளிக்க என்னால் முடியும் என்று தப்பு கணக்கு போட்டு விடுகிறோம். ஒருவேளை சில வேளைகளில் நாம் எதிர் கொண்டு வெற்றி எடுக்க முடியும், அநேக வேளைகளில் விழுந்து போய் விடுவோம்.

No comments:

Post a Comment