Monday, October 14, 2013

இன்னும் இடம் இருக்கிறது

ஒரு மனிதர் பெரிய விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி அநேகரை அழைக்கிறார். விருந்து வேளை வந்தபோது, விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் சாக்கு போக்குசொல்ல தொடங்குகிறார்கள் ஒருவன் வயலுக்கு போக வேண்டுமென்று சொல்கிறான். மற்றொருவன் மாட்டை சேரிக்க வேண்டுமென்று மறுக்கிறான். இன்னொருவன் இப்போதுதான் திருமணம் செய்திருக்கிறேன், நான் வரவில்லை என்கிறான். ஆனால் அந்த எஜமானின் விருப்பம் எப்படியாவது என் வீடு ஜனத்தினால நிறைய வேண்டும் என்பதுதான். ஆகவே சினங்கொண்டு, 'தெருக்கள், வீதிகளில் போய் ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடர்களையும் கொண்டு என் வீட்டை நிரப்பு' என்று ஊழியக்காரனுக்கு கட்டளையிடுகிறார்.
.
இன்றைக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மனநிலையும் இப்படித்தான் இருக்கிறது. பரலோகத்தை தம்முடைய ஜனங்களால் நிரப்ப வேண்டுமென்று. ஆனால் 2000 வருடத்திற்கு மேலாகியும் இன்னும் இடம் காலியாகவே உள்ளது. ஆவரிடத்தில் வருவதற்கும், விருந்தில் பங்கேற்பதற்கும், இன்னும் பலர் விநோதமான சாக்குபோக்குகளையே சொல்லி கொண்டு, கர்த்தரிடம் வருவதற்கு நிராகரித்து கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் கிறிஸ்துவை ஏற்று கொண்ட நம் ஒவ்வொருவரிடத்திலும் தயவு செய்து காலியிடத்தை நிரப்புங்கள் என்று வருந்தி கேட்கிறார். நூறில் ஒரு ஆடு காணாமற் போனால் கூட அவரால் திருப்தியாக இருக்க முடியாது. அந்த ஒரு ஆட்டை கண்டுபிடிக்கும் வரை பரிதபித்து கொண்டே இருப்பார்.

No comments:

Post a Comment