.
இந்த என் நண்பன்,
நடக்க முடியாத என்னை தன் தோளில் சுமந்து கொண்டு, மூன்றறை
நாட்கள் நடந்து ஒரு பெரிய காட்டை கடந்தோம். வழியில்
வியட்நாம் போர் வீரர்கள் எங்களை குறி வைத்து, குண்டுகளை
வீசி கொண்டே இருந்தார்கள். நான் இவனிடம், 'என்னை கீழே
போட்டு விட்டு நீ தப்பித்து கொள்' என்று எத்தனையோ முறை
சொன்னேன். ஆனால் இவனோ என்னை கீழே விடவே யில்லை. அந்த
பயங்கர காட்டிலிருந்து தப்பி எப்படியோ வெளியே வந்தோம்.
என் உயிரை இவன் காப்பாற்றினான். எதற்கு காப்பாற்றினான்,
எப்படி காப்பாற்றினான் என்பதை நான் அறியேன். நான்கு
வருடங்களுக்கு முன்பு இவனுக்கு இந்த வியாதி இருப்பதை
கண்டேன். நான் நியூயார்க் நகரத்தில் இருந்த வீட்டை
விற்று விட்டு, இவனை கவனித்து கொள்ள இவனோடு கூட நான்
இருக்கிறேன். இவன் எனக்கு செய்தததற்காக நான் என்ன
வேண்டுமானாலும் இவனுக்காக செய்ய தயார்!' என கண்களில் நீர்
மல்க கூறினான்.
அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு,
திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு
ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.
அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா,
மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு,
இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே
என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம்
உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17:15-19).
No comments:
Post a Comment