Saturday, September 27, 2014

கர்ப்பத்தில் வளரும் குழந்தையும் கர்த்தரின் 7 பண்டிகைகளும். ( வேதாகம அறிவியல் - 03 )



நன்றி: HI CHRISTIANS
 

கர்ப்பத்தில் கருவைச் சுமந்து பெற்றெடுத்த ஒவ்வொரு பெண்ணும், வேத வார்த்தையில் குறிப்பிடப்பட்ட அவ்வந்த நாட்களிலே, கர்த்தரின் 7 பண்டிகைகளையும் தன் கர்ப்பத்தில் அனுபவித்திருக்கிறார். இப் பண்டிகைகள் யூத பண்டிகைகள் அல்ல கர்த்தரின் பண்டிகைகளாயிருக்கின்றன. இவை வருடந்தோறும் சந்ததி சந்ததியாக சபை கூடி அவ்வந்த பரிசுத்த நாட்களில் அனுசரிக்கப்பட வேண்டிய பண்டிகைகளாயிருக்கின்றன. (
லேவி 23.21) 3500 வருடங்களுக்கு முட்பட்ட காலத்தில் கர்ப்பத்தில் வளரும் கருவுக்கும், கர்த்தரின் பண்டிகைகளுக்குமிடையிலான இத் தொடர்பை எவரும் அறிந்திருக்கவில்லை. இன்று கூட கிறிஸ்தவ வைத்தியர், தாய்மார் அறியாத ஒரு மறைபொருளாய் இவ் அபூர்வமான உண்மை காணப்படுகின்றது.
கர்த்தர் தாமே இப்பண்டிகைகளை அனுசரிக்கும் படி மேசேயிடம் கட்டளை யிட்டார். இதிலிருந்து ஒரு சிருஷ்டிகர். இருக்கிறாரென்றும், அவா் கருவிலிருந்து கல்லறை மாத்திரமாக ஆண் பெண் இரு பாலாருடைய வாழ்க்கைச் சக்கரத்தை பரிபலிக்கிறாரென்றும் அறிந்து அவதானத்தை தம் யூத வேர்களண்டை தேவன் திரும்ப முனைகிறார்.
சோலா லெவிட் எனப்பட்ட உரு யூதன் புதிய பெற்றோருக்கு ஆலேசனை வழங்கும் முகமாக எழுத முனைந்த ஒரு நாவலுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பொழுதே இவ்வுண்மை வெளிப்பட்டது. சோலா லெவிட் ஒரு வைத்தியரை நாடிச் சென்று கருத்தரிப்பு முதல் பிள்ளை பிறக்கும் வரைக்கும் கருவிலே உருவாகும் மாற்றங்களைக் குறித்து வினாவினார். அவ் வைத்தியரும் விளக்கம் கொடுக்க முன் வந்தார்.
சில படங்களைக் காட்டியவாறே “முதலாவது மாதத்தின் 14ம் நாள் முட்டை உருவாகிறது” என்றார் உடனே சோலா லெவிட் யூதனாய் இருந்ததால், சரியாக இத்திகதியிலேயே பாஸ்கா பண்டிகை தன் வீட்டில் அனுசரிக்கப்படுவது இவருக்கு ஞபகம் வந்தது.(லேவி-23:5) தன் வீட்டு மேசையிலே பண்டிகை நாளன்று வைக்கப்படும் சுடப்பட்ட முட்டையும் ஞபகத்திற்கு வந்தது.
வைத்தியர் தொடர்ந்து இம்முட்டை உருவான 24 மணிநேரத்திற்குள் விந்தை சேர்ந்து கருத்தரிக்க வேண்டும். அல்லாவிட்டால் வெளியேறிவிடும் என்று கூறினார். உடனே சோலாவுக்கு புளிப்பில் அப்பப்பண்டிகையும், கோதுமை மணியானது நிலத்திலே விழுந்து சாக வேண்டும் என்ற வசனமும் ஞபகத்திற்கு எட்டியது. அது செத்தால் மாத்திரமே பயிர் வளர்ந்து அது அறுவடை செய்யப்பட்டு கர்த்தருக்கு முதற்பலனாக செலுத்த முடியும். (லேவி. 23.6)
மேலும் அவ் வைத்தியர் “கருக்கட்டிய முடடையானது 2-6 நாட்களுக்கிடையில் கருப்பையின் சுவரிலே ஒட்டி வளரதத்தொடங்கும்” என்று விளக்கினார். முதற்பலன் பண்டிகையும், பாஸ்கா பண்டிகை கெண்டாடப்பட்டு 2-6 நாட்களுக்கு அனுசரிக்கப்டுகிறது.
அடுத்ததாக அவ் வைத்தியர் வளர்ந்த ஒரு கருவின் படத்தைக் காட்டினார். சிசுவின் தலை, கை, கால், விரல்கள் அனைத்தும் அதிலே தென்பட்டது. “வளாத்தியின் 50ம் நாளிலே இவ்வாறான உருவத்தை சிசு பெற்று மனுசஷாயலாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறது.” இம்மாத்திரமாய் கருவில் வளர்வது வாற்பேயா, வாத்தா என்று செல்லிட முடியாதென்றும் வைத்தியர் கேலியாச் சொன்னார். உடனே சோலாவுக்கு பாஸ்காவின் 50ம் நாளிலே கொண்டாடப்படும் பெந்தக்கொஸ்து பண்டிகை ஞபகம் வந்தது. (லேவி.23.16)
7ம் மாத கருவின் படத்தை அடுத்ததாய்க் காண்பித்து “7ம் மாதத்தின் 1ம் நாளிலே குழந்தையின் செவிப்புலன் பூரணப்படுகிறது, ஓசைகளை சிசு உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறது. என்றார். வைத்தியா் அதே தினமே எக்காளப்பண்டிகை கொண்டாடப்படுவதை சோலா உணர்ந்து கொண்டார். (லேவி.23.27)
தொடர்ந்து வைத்தியர் “7ம் மாதத்தின் 10ம் நாள், குழந்தை தன்னைத் தானே போஷிக்கும் வண்ணமாக, தாயின் ஈமோகுளோபின் சிசுவுடையதாக மாற்றப்படுகின்றது.” என்றார். இது பாவ நிவர்த்திப் பண்டிகை. அதி பாரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே இரத்தம் கொண்டு செல்லப்படும் தினம் என்று சோலா அறிந்து கொண்டார். (லேவி. 23.27)
7ம் மாதம் 15ம் நாளிலே குழந்தையின் சுவாசப்பை பரிபூரணப்பட்டு தன்னியக்கம் பெறுகிறது. இதற்கு முன் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தை சுவாசிக்க சிரமப்படும் என்றார். வைத்தியர். இதுவே கூடாரப் பண்டிகை தேவாலயத்தில் தேவ மகிமை தங்கும் நாள் தேவாவியானவரின் மகிமை நிரம்பும் நாளாகவும் அனுசரிக்கப்படும் பண்டிகை (லேவி-23:24) புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க பாஷையிலே சுவாசமும் பரிசுத்தாவியும் ஒரே சொல்லினால் அழைக்கப்படுகின்றது.
குழந்தை 9ம் மாதத்தின் 10 நாள் பிறக்கின்றது. பிறந்து 8ம் நாளில் யூத குழந்தைகள் விருத்தசேதனம் பண்ணப்படுகின்றன. சரியாக “ஹனூக்கா” பண்டிகை கொண்டாடப்படும் நாள் இது. பஸ்காவின் பின் 9ம் மாதத்தின் 10ம் நாள். (சங்கீதம். 139. 14)  

No comments:

Post a Comment