Saturday, December 20, 2014

உயிருள்ள ஜீவ வேதாகம வசனங்கள்



பரிசுத்த வேதாகமம் முற்றிலும் உண்மை என்பதை நிருபிக்கும் பதிவு

பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவம். பல ஆயிர வருடங்களாக மாறாமல் இருக்கும் பரிசுத்த வேதாகம வசனங்கள். உயிருள்ள ஜீவ வேதாகம வசனங்கள்.

எபிரேய மொழியில் உள்ள தேவ வசனம்
כד יְבָרֶכְךָ יְהוָה וְיִשְׁמְרֶךָ׃
כה יָאֵר יְהוָה פָּנָיו אֵלֶיךָ וִיחֻנֶּךָּ׃
כו יִשָּׂא יְהוָה פָּנָיו אֵלֶיךָ וְיָשֵׂם לְךָ שָׁלוֹם׃

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போது

(6:24) May YHVH bless you and protect you!
(6:25) May YHVH shine his face upon you and be gracious towards you!
(6:26) May YHVH lift his face up to you, and give you peace!

இப்பொழுது நமது கைகளில் உள்ள வேதாகம வசனங்கள் - சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள கூடிய வகையில் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள் ஆங்கிலத்திலும் - தமிழிலும்
எண்ணாகமம் 6:24-26
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
The LORD bless thee, and keep thee:
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
The LORD make his face shine upon thee, and be gracious unto thee:
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
The LORD lift up his countenance upon thee, and give thee peace.

இந்த படத்தில் உள்ள வேதாகம வசனங்களின் நேரடி மொழிபெயர்ப்பு.

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
கர்த்தர் (யாவெஹ்) நிமித்தமாக
காப்பவர்/உதவி செய்பவர் மற்றும்
உடைப்பவர்/கண்டிப்பவர்
தீயதை; கர்த்தர் (யாவெஹ்) ஆசீர்வதிப்பார்
உன் மேல்
பிரகாசிப்பிக்கக்கடவர்; யாவெஹ்
முகத்தை உன் மீது
கட்டளையிடகடவர்
சாமாதானம்
பின் வரும் பகுதிகள் தெளிவாய் இல்லை
இந்த வார்த்தைகளை எண்ணாகமம் 6:24-26 வரை காணலாம்

இந்த வசனங்கள் 1979 ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் உள்ள St. Andrew’s Church, பகுதியில் இருக்கும் Menachem Begin Heritage Center நிலத்தில் இரண்டு துண்டுகளாக எடுக்கப்பட்டது. இது இயேசு கிறிஸ்து இந்த பூமியில் அவதரிக்கும் முன் சுமார் 600 நூற்றாண்டுகள் பழமையானது ஆகும்.

இந்த silver scrolls ஏந்தியுள்ள வசனங்கள் இன்றைக்கும் பாரம்பரியம் மிக்க ஆங்கிலிக்கன் திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, ஒர்தொடக்ஸ் திருச்சபைகளில் ஆசீர்வாதமாக கூறுவார். இது இன்று நேற்று அல்லது இயேசு பிறந்தபின் தோன்றியது அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரத்திபடி 3000 ஆண்டுகளுக்கு முன் பழக்கத்தில் இருந்துள்ளது.

சிலர் வேதாகமத்தை இயேசு பிறந்ததற்கு பின் மாற்றி தவறாக எழுதிவிட்டதாக எழுதுவதை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இப்படிப்பட்ட ஆதாரங்கள் பதிலாக இருக்கும் என நம்புகிறேன்.

மிக முக்கியமாக நம் தேவனின் நாமத்தை இந்த படிவமும் ஏந்தியுள்ளதை காணலாம். "யாவெஹ்" "YHWH" என்பது நம் தேவனின் நாமம் ஆகும். புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவாக நாம் காண்கிறோம்.

ஏசாயா 42:8 நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

இந்த வசனத்தில் வரும் கர்த்தர் என்பது எபிரேய வார்த்தையில் யாவெஹ் என்று வரும். இதை குறித்து நான் ஏற்க்கனவே ஓர் பதிவை கொடுத்திருக்கிறேன். https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836254./470342299737126/?type=3&theater

நாம் பல நாமங்களில் இயேசுவை அழைக்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டின் காலத்தில் தன்னை மனிதனுக்கு அறிமுகப்படுத்தினது "யாவெஹ்" என்ற நாமத்தில் தான். நீங்கள் தயவு செய்து இந்த வார்த்தையை விளையாட்டாய் பரிகாச சிந்தனையோடு பயன்படுத்தி விடாதீர்கள். உங்கள் பாவம் சாபமாய் மாறும்.

இந்த சுருள்கள் அக்கால கட்டத்தில் யாரோ ஒருவர் கழுத்தில் அணிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில்வர் சுருள்களாக உள்ளதால் பொருளாதார பலம் படைத்த பணக்கார குடும்பத்தில் யாராவது ஒருவர் பயன்படுத்தினதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. The word yhwh (the name of the Lord in Hebrew) appears in writing for the first time ever. The benediction quoted from the Book of Numbers was recited by the Temple priests when blessing the congregation; here it is found in writing and for individual use. The tiny silver scrolls were probably worn as amulets around the neck.

இன்றைக்கும் நமது ஆலய பாதிரியார்கள் கழுத்தில் சிலுவை அணிவதை பார்த்திருப்பீர்கள். கத்தோலிக்க போப் ஆண்டவர் முதற்கொண்டு எல்லா கிறிஸ்தவ போதகர்கள், ஆயர்கள் கழுத்தில் சிலுவை, ஆடையில் சிலுவை அணிவதை பார்த்திருப்பீர்கள். இது இன்று நேற்று உள்ள பழக்கம் அல்ல. இது பல ஆயிர வருகங்கலாக தொடரும் பழக்கம். ஆனால் அக்காலத்தில் சிலுவைக்கு பதிலாக வேத வசனங்களை கழுத்தில் அணிந்து கொள்வர். இதை அவர்களே எழுதியும் அணியலாம். இது பல ஆயிர வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதை பற்றியும் நான் ஓர் பதிவை கொடுத்திருக்கிறேன். (https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836208./574057619365593/?type=3&theater)

கிறிஸ்து நமக்காக சிலுவை அடையாளத்தை தந்த பிறகு வசனங்களுக்கு பதிலாக சிலுவையை அணிந்துகொண்டிருக்கிறோம். ஆனால் காலபோக்கில் கழுத்தில் சிலுவை அணிய வெட்கப்பட்டு இன்று கத்தியையும், நடிகர்களின் படங்களையும், ஆசைப்படும் பெண்கள், ஆண்கள் படங்களையும், சிலர் செல்போன்களையும், அணிந்துள்ளனர். பாரம்பரியம் மறக்கடிக்கப்பட்டு மரணபடுக்கைக்கு சென்று விட்டதோ?

எது எப்படியோ, இப்படிப்பட்ட வேத வசனங்கள் நமக்கு தேவன் பாதுகாத்து கொடுத்திருக்கிறார். இந்த வசனங்கள் கிறிஸ்து பிறந்ததற்கு பின்போ, ப்ரொடெஸ்டண்ட் திருச்சபை உருவான பின்னரோ, கத்தோலிக்க சபையோ எழுதவில்லை. இது மனிதனால் மாற்றப்படவும் இல்லை. நம் கைகளில் இருக்கும் வேதாகம வசனங்கள் உண்மையானது. இதை போன்று பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது. முன் நான் பதிந்த சில பதிவுகளை இங்கே தருகிறேன்.. இன்னமும் பல நூற்றுக்கணக்கான பதிவுகள் தேவ நாம மகிமைக்காக வரும்.

1) இயேசு பிறந்து, மரித்து பின் உயிர்த்தெழுந்தாரா? (மூல ஆதாரம்: BBC செய்தி நிறுவனம்)
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836225./499598573478165/?type=3&theater
2) வேதாகமத்தில் குறிபிடப்பட்டுள்ள 50 பெயர்களின் உண்மை சரித்திரத்தை பற்றியது
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836225./531306100307412/?type=3&theater
3) 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எல்பா சாம்ராஜ்யத்தின் சரித்திர பதிவுகள்.
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836208./550419178396104/?type=3&theater
4) சமீபத்தில் எகிப்த்தில் கண்டெடுக்கப்பட்ட (கிறிஸ்துவுக்கு முன் 574 மற்றும் 660 ஆண்டு) முக்கியமான பண்டைய கால ஆதாரம் ஒன்று இன்று உலகையே கலக்கி வருகிறது.
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836208./574057619365593/?type=3&theater
இன்னமும் நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளது. வரும் காலங்களில் உங்களுக்கு தருகிறேன். இந்த ஊழியத்தில் தேவனின் நாமம் மட்டும் மகிமைப்பட ஜெபியுங்கள்.

நான் ஆதாரத்தை வைத்து கொண்டு இயேசுவை தெய்வமாக ஏற்று கொண்டவன் அல்ல. இயேசு எனக்குள் இருக்கிறார் என்பதை தெள்ள தெளிவாக உணர்ந்து உண்மையான தெய்வத்தை அணிந்திருக்கிறோம் என்ற விசுவாசத்தில் பிள்ளையாக வாழ பேராசைப்படுகிறேன்.

இப்படிப்பட்ட ஆதாரங்கள் வேதாகம வசனங்களை நம்ப மறுக்கும் நண்பர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகிறேன். தேவன் உண்மையுள்ளவர். அவரை நம்பும் ஜனங்கள் பாக்கியம் பெற்றது.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

வலைத்தள ஆதாரங்கள்
http://www.ancient-hebrew.org/6_40.html
http://en.wikipedia.org/wiki/Ketef_Hinnom
http://historicconnections.webs.com/archaeologythebible.htm
http://www.tamil-bible.com/
http://shoebat.com/2014/09/05/new-archaeological-discovery-proves-catholic-church/
http://opensiddur.org/tefillot/blessings-tefillot/adventures-in-ancient-jewish-liturgy-the-birkhat-kohanim/
http://www.arcvertuel.org/?q=node%2F386
http://crossconnection.hopetv.org/the-most-ancient-fragment-of-the-biblical-text
http://www.youtube.com/watch?v=XTqMpgz9D4I
http://www.fowlerbiblecollection.com/ketef-hinnom-silver-scrolls.html

No comments:

Post a Comment