Friday, December 26, 2014

மலையாள நகைச்சுவை நடிகர் பிரேம்குமார்

மலையாள நகைச்சுவை நடிகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்ட பாதையின் சுவடுகள்.

பிரேம்குமார் அவர்கள் 1990 களில் இருந்து மலையாள பட நகைச்சுவை உலகில் கோடி கட்டி பறந்தவர். பிரபல திரைப்பட நடிகர்கள் திரையில் இவர் இல்லாமல் இருந்தது இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்தவர். சுமார் 100 படங்களுக்கு மேலாக நடித்துள்ள இவர் 16 படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவரின் மனைவி பெயர் ஜிஷா. இவர்களுக்கு ஜெமீமா என்ற ஓர் பெண் குழந்தை உண்டு. சினிமா படவுலகில் கொடிகட்டி பரந்த இவர் தற்பொழுது இயேசு கிறிஸ்துவை முழு மனதோடு ஏற்று கொண்டு குடும்பத்தோடு தேவனுக்கு ஊழியம் செய்து வருகிறார்.

ஓர் சொப்பனத்தின் மூலமாக நான் இயேசு கிறிஸ்துவை தெரிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்றும் கிடையாது. சிறு வயதில் இருந்தே எனக்கு எந்த ஓர் காரியத்தையும் தெளிவாக செய்ய தெரியாது. பள்ளி பருவத்திலேயும், கல்லூரி வாழ்க்கை காலத்திலேயும் கடைசியில் தான் இருப்பேன். ஆனால் தேவன் என்னை ஓர் நாள் அழைத்தார். கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் தேவன் என்னை பெயர் சொல்லி அழைத்தார். நான் தேவனை தேடி போகவில்லை. ஆனால் தேவன் என்னில் வைத்த அன்பு காரணமாக என்னை அழைத்தார். வேத வசனத்தில் கூறி உள்ளது போல "தாய் உன்னை மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை" அதை நான் இன்னமும் அனுபவித்துகொண்டிருகிறேன். எனக்கு பிடித்த வேதாகம கதாப்பாத்திரம் பவுல் அடிகளார். பவுல் சொன்னது போல "நல்ல போராட்டத்தை போராடினேன்" என்று கடைசி மூச்சு வரை கர்த்தருக்காக எதாவது செய்தது போல நானும் கர்த்தருக்காக எதாவது கடைசி மூச்சி உள்ளவரை செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது. என்னையும் தேவன் பயன்படுத்துவார் என்ற விசுவாசம் இருக்கிறது.

தேவன் என்னை அவருக்காக பயன்படும் பாத்திரமாக வனைந்து கொண்டிருக்கிறார்.

ஆமென்.. கர்த்தருக்கிரே மகிமை உண்டாவதாக.. ஆமென்.

தேவனுக்கென்று குடும்பமாய் வைராக்கியமாய் வாழும் இவர்களை வெள்ளித்திரை என்னும் பாம்பு மீண்டும் மயக்கி விடாதபடி திறப்பின் வாயில் நின்று ஜெபிப்போம்.
 

Visit: www.facebook.com/TamilNaduChristianMinistries

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்


http://malankaranazrani.com/?p=6651
http://www.youtube.com/watch?v=JL8qDbFRHuo

No comments:

Post a Comment