Thursday, May 31, 2012

இரக்கம் பாராட்டுதல்

ஒருவேதாகம மாநாட்டில் செய்தி கொடுக்க வந்த ஜேக் வைர்ட்ஜன்என்பவர் மிகவும் வித்தியாசமான சரீர பாதிப்புடையஒருவருடன் உணவருந்த சென்றார். அந்நபர் வாயில் வைக்கும்உணவை மெல்ல முடியாமல் கொஞ்ச கொஞ்சமாக கீழே விழுந்துகொண்டே இருக்கும். ஆகவே தன் கழுத்தில் செய்தி தாளை கட்டிவைத்து கொண்டு சாப்பிடுவார். ஆகவே யாரும் அவர் அருகில்அமர்ந்து சாப்பிட விரும்ப மாட்டார்கள். இவ்வாறு தனித்துவிடப்பட்ட அவருடன் ஜேக் உணவருந்தி ஆறுதல் அளித்தார். இதுஒரு தனி நபர் மீது இரக்கம் காட்டும் ஒரு செயலாகும்.

எலியட் என்பவர் காலைதோறும் வேதத்தை தியானிக்கும்பழக்கமுடையவர். அந்நேரத்தில் குப்பையை அகற்றும் நபரைபார்க்க நேரிட்டால், தனது தியானத்தை நிறுத்தி விட்டு,வெளியே சென்று, இன்முகத்தோடு அவரை விசாரித்து,உற்சாகப்படுத்துவார். அந்த குப்பை அகற்றும்தொழிலாளிக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. இதுவும்இரக்கத்தின் விளைவுதானே! பால் என்பவர் ஹோட்டல் ஒனறிற்குசென்றிருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த ஃபிரட்டிஎன்பவருக்கு நற்செய்தியை அறிவித்தார். அவர் விரைவிலேயேகிறிஸ்துவை ஏற்றுகொண்டார். சில காலம் கழித்து, ஃபிரட்டிபுற்று நோயால் பாதிக்கப்பட்டவராக ஒரு சிறுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பால் அவரைநாள்தோறும் சென்று சந்திப்பார். அவரது தேவைகள்அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் மரணமடையப்போகும்இரவில் அவரருகே வேத வசனங்களை கூறிக்கொண்டே இருந்தார்.இதுவல்லவா இரக்கம் பாராட்டுதல்!

No comments:

Post a Comment