திருமறைத் தமிழாக்கம்:
திருமறைத்
தமிழாக்கம் சீகன்பால்க் தமிழ் திருச்சபைக்கு ஆற்றிய முக்கிய தொண்டாக
கருதப்படுகின்றது. மிகக்குறுகிய காலத்தில் கற்பதற்கு கடினமான தமிழ் மொழியை
பிழையறக் கற்று பண்டிதரானார். விரைவில் திருமறையைக் தமிழில் மொழியாக்கம்
பணியைத் துவங்கினார். ரோமன் கத்தோலிக்கர்களால் உருவாக்கிய தமிழ் பதங்களைக்
கொண்ட அகராதியை அவர் பயன்படுத்தினார். புதிய ஏற்பாட்டு தமிழாக்கம்
நிறைவுப்பெற்று 1713 ல் அச்சடிக்கப்பட்டது. பழைய ஏற்பாடும் ரூத் புத்தகம்
வரை அவர் மொழிப் பெயர்த்திருந்தார். பின்னர் வந்த மிஷனரிகள் மீதமுள்ள
நூற்களை முடித்து முழு திருமறையையும் தமிழில் தந்தனர். இந்த மொழியாக்கம்
பெப்பிரிஸியஸ் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவ்விதமாக இந்திய
மொழிகளில் தமிழ்மொழி தான் முதன் முறையில் திருமறையை பெறும் வாய்ப்பை
பெற்றது.
தமிழ் இலக்கண நூல் பதிக்கப்பட்டது:
சீகன்பால்க்
மொழியாற்றல் பெற்றவராயிருந்தார். அவர் இந்தியா வந்த ஒரு
வருடத்திலேயே தளர்படமாய் தமிழைப் பேசியதைக் கண்ட தமிழர்
மெய்சிலிர்த்தனர். நல்ல தமிழ் ஆசிரியர்களின் நூற்களை அனுதினமும்
படித்தார். நல்ல ஆழ்ந்த வாக்கிய அமைப்புகளை மறுபடியும் படித்து
மனதில் பதித்துக்கொண்டார். ஒரே வார்த்தையையோ ஒரே உச்சரிப்பையோ
பலமுறைச் சொல்ல அவர் அலுத்ததே இல்லை. இந்த அயராது உழைப்பின்
உயர்வாக தமிழில் இலக்கண நூலை அவர் தயாரிக்க முடிந்தது. அவர்
ஹாலே பட்டணத்தில் 1715 ல் ஆண்டு இந்த இலக்கண நூல் அச்சகப் பணியை
நேரடியாக கண்காணித்தார். இப்படி தமிழ் மொழிக்கு பெருந்தொண்டாற்றி
வருங்கால மிஷனரிகள் தமிழ் மொழியை எளிதில் கற்க பெரிதும் உதவி
புரிந்தார்.
திருமறைக் கல்லூரி நிறுவப்பட்டது:
சீகன்பால்க்
தொலைத் தூரப் பார்வையுடன் எதிர்காலத்தை நினைவிற் கொண்டு வருங்கால
திருச்சபைத் தலைமைத் துவத்திற்காக இந்திய கிறிஸ்தவர்கள்
பயிற்றுவிக்கப்பட்ட வேண்டுமென உணர்ந்தார். இந்த தரிசனத்துடன்
எட்டுப்பேரைக் கொண்டு 1716 ல் தரங்கம்பாடியில் தான் முதன் முதலில்
இந்தியாவில் சீர்திருத்த திருச்சபை இறையியலை இந்தியாவில் புகட்டியது.
அநேகர் கிராம நற்செய்தி மற்றும் போதக அருட்பணிக்காக இங்கு
பயிற்றுவிக்கப்பட்டனர். இப்பயிற்சிக்காக தமிழ் திருச்சபையை
சேர்ந்த மக்களை மிகக் கவனத்துடனும் பொறுப்புடனும்
தெரிந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னர்
வந்த மிஷனரிகளும் சீகன்பால்க்கினால் ஏற்படுத்தப்பட்ட பயிற்சி
முறைகளைக் கையாண்டனர். இதன் விளைவாக 1733 ம் ஆண்டிலேயே இந்து
மதத்திலிருந்து கிறிஸ்தவரான ஆரோன் என்பவர் தமிழ் லுத்தரன்
திருச்சபையின் முதல் போதகராய் போதகாபிஷேகம் செய்யப்பட்டார்.
இந்திய கிறிஸ்தவர்களை அருட்பணிக்காக பயிற்றுவிக்க ஒரு
மிஷனரிக்கு தனிப் பொறுப்பு கொடுக்கப்பட்டு ஒதுக்கப்பட
வேண்டுமென்று சீகன்பால்க் மிஷன் தலைமைக்கு பரிந்துரையும் செய்தார்.
இளைஞர்களுக்கு பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டது:
தொலதூர
நோக்கோடு வாலிபர்களை ஆசிரியப் பணிக்கும் போதகப் பணிக்கும்
சீகன்பால்க் பயிற்றுவித்தார். இந்த நோக்கத்திற்காக கிறிஸ்தவ
வாலிபர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு
காப்பகங்களில் தங்க வைத்து கல்வியும் பயிற்சியும்
அளிக்கப்பட்டனர். இந்த வாலிபர்களுக்கு உணவு, உறைவிடம், உடுக்க
துணிகள் கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சபைகளிலும் பாடக
சாலைகளிலும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டது. ஏனையோருக்கு
குடியமைப்பு நிர்வாகத்தில் உயர்பதவி தரப்பட்டு பொருளாதார தாழ்வு
நிலையிலிருந்த கிறிஸ்தவ குடும்பங்கள் பராமரிக்கப்பட்டன.
இலக்கியப் பணி வளர்ச்சி அடைதல்:
1713
ம் ஆண்டு ஹாலே பல்கலைக்கழகத்திலிருந்து மூன்று எழுத்து
வடிவமைப்பும் அச்சு இயந்திரமும்மிஷனரிப்பணிக்கென தமிழகத்திற்கு
அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ் எழுத்துக்களைக் கொண்ட ஒரு
அச்சகததைபிராங்கே உருவாக்கியிருந்தார். இறுதியில் ஆங்கில
எழுத்துக்களைக் கொண்ட அச்சகமும் அச்சுத்தாளுடன் வந்துசேர்ந்தது.
இந்த வசதிகளைக் கொண்டு தமிழ் இலக்கியப் பணி வெகுவாய்
விரிவுப்படுத்தப்பட்டது. பாமாலை நூல்,பாடல் நூல் தமிழாக்கம் செய்து
அச்சிடப்பட்டது. ஜெபப்புத்தகமும், தியானப்புத்தகங்களும் பின்னை
மொழியாக்கம்பெற்று அச்சிடப்பட்டு, இவ்விலக்கியங்கள் தமிழ் பேசும் மக்கள்
வாழும் பகுதியில் விரிவான முறையில்விநியோகிக்கப்பட்டது.
கடலூர், சென்னை மற்றும் இலங்கைக்கு அருட்பணி விரிவு செய்தல்:
சீகன்பால்க்
டென்மார்க் குடியமைப்போடு தன் அருட்பணியை முடித்துவிடாது தன் பரந்த
நோக்கோடும் ஆழ்ந்தபாரத்தோடும் நற்செய்தி இதுவரை எட்டாத மற்ற இடங்களுக்கும்
தனது பணியை விரிவு செய்து கொண்டார்.சென்னை மாநகருக்கும் அண்டை நகரமாகிய
கடலூருக்கும் அடிக்கடி பயணம் மேற்கொண்டுகிறிஸ்தவல்லாதவருக்கு நற்செய்தியை
பிரசங்கித்தும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தேவையானஆன்மீக போதனைகள்
தந்தும் வந்தார். இலங்கையில் அருட்பணிக்கான வாய்ப்புகளை கண்டறியுமாறு
அங்கும்அவர் விஜயம் செய்தார். அங்கு வாழ்ந்த ஜெர்மானியர்களுக்கு போதக
விசாரணைத் தர திட்டம் வகுத்தார். ஆனால்இந்த திட்டங்கள் பின் வந்த
மிஷனரிகளால் தான் நிறைவேற்ற முடிந்தது. இவ்விதமாக தமிழகத்தின்
பலபகுதிகளிலும் இலங்கையிலும் ஆரம்பித்து வைத்த அருட்பணி பின்னர் ஏனைய
மிஷனரிகளால் விரிவானமுறையில் செயல்படுத்தபட அனுகூலமாயிருந்தது.
சீகன்பால்க் சிறையிலிடப்படுதல்:
டென்மார்க்
குடியமைப்பின் ஆளுநராகிய ஹாஸியஸ் மிஷனரிகளை ஒடுக்கும் எண்ணத்துடன்
கோட்டையில்தன்னை வந்து சந்திக்குமாறு 1701 ம் ஆண்டு நவம்பர் மாதம்
சீகன்பால்க்கை அழைத்தார். அவரை அழைத்து வரஇராணுவம் மிஷனரி இல்லத்தை நோக்கி
விரைந்தது. முழங்காலினின்று சீகன்பால்க் ஜெபித்துக் கொண்டிருந்தபடியால்
பல மணி நேரம் இராணுவத்தினர் காத்திருக்க வேண்டியதாயிற்று. பொறுமையிழந்த
இராணுவ தளபதிஅவரை சபித்து ஜெபத்தை நிறுத்த வைத்து தன்னோடு அழைத்துச்
சென்றான்.
ஆளுநர்
ஹாஸியிஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்பவராகவும் நீதிபதியாகவும்
செயல்பட்டார். சீகன்பால்க்கிற்குவிரோதமாக எந்த சாட்சியும் நிறுத்தப்படவோ
விசாரிக்கப்படவோ இல்லை. அவரை கேட்டபோது இயேசுகிறிஸ்துவைப் போன்று
அமைதியாய் இருந்தார். இறுதியாக அவரைக் கைது செய்து சிறையிலடைக்க
ஹாஸியஸ்உத்தரவிட்டார்.
மிகவும்
கொடூரமாக வெப்பமிகுந்த அறையில் சீகன்பால்க் சிறைவைக்கப்பட்டார்.
அவரது சிறைக் கோட்டைசமையலறைக்கு அடுத்து அமைக்கப்பட்டு சமையலறை
வெப்பமும் சூரிய வெப்பமும் அவரை வெகுவாய்வாட்டியது. அவரது சக
மிஷனரியாகிய புளூட்சோ அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. எழுத
பேனாவும்காகிதமும் கூட அவருக்கு மறுக்கப்பட்டதால் அவர் தனது
திருமறை தமிழாக்கத்தை தொடரமுடியாமற் போயிற்று.
அமைதியினால்
அவரது மிஷனரிப் பணி பாரமும் வாஞ்சையும் அவிக்கப்படவும்,
தனிமையின் கொடுமையும்கொடும் வெப்பமும் அவர் உடலிலிருந்த நோய்
எதிர்ப்பு தன்மையையும் பெலனையும் முற்றிலும் அழித்துபோடவும் எதிரிகள்
சதி செய்தனர். இருப்பினும் புளுட்சோவைப் போல் சீகன்பால்க்கும்
துவண்டு போகாதுமனதைரியத்துடன் பாடலாலும் ஜெபத்தாலும் சிறையைத்
தூய்மைப்படுத்தினார்.
இதன் காரணமாக
மக்கள் திரள் ஹாஸியஸ்ஸிற்கு எதிராக எழும்பியதால் சிறைதண்டனையை
நீண்டநாள் அவர்நீடிக்க முடியவில்லை. சீகன்பால்க்கின் மேல்
பொதுமக்கள் வைத்திருந்த பாசம், மதிப்பு, மரியாதைக்குஅளவில்லை. 1709
ம் ஆண்டு மார்ச் 26 ம் நாள் நான்கு மாத சிறைவாசத்தின் பிறகு
சீகன்பால்க் விடுதலைச்செய்யப்பட்டார். சிறையிலிருந்து
வெளிவந்தவுடன் பல மாறுதல்கள் ஏற்பட்டன. சிறையில் அவர்
அனுபவித்தபாடுகள் தேவன் அவருக்கு நன்மை பயக்கும்படி செய்தார்.
அவர் பொதுமக்களின் மிகுந்தமரியாதைக்குரியவரானார்.
No comments:
Post a Comment