தயவுசெய்து,
அந்தப் பாடலை எனக்காக பாடுங்கள், என் தாயார் என் சிறுவயதில்
பாடுவார்கள்’ என்று கேட்டு கொண்டான். அதன்படி அந்த நர்ஸ் பாட
ஆரம்பித்த போது, அந்த வரிகள் அந்த வாலிபனின் இருதயத்தில் கிரியை செய்ய
ஆரம்பித்தது. அவனுடைய கல்லான இருதயம் உடைய ஆரம்பித்தது.
அடுத்த நாள் அவனை பார்க்க வந்த போதகரிடம் தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவன் இயேசுவை
ஏற்றுக் கொண்டவனாக
அந்நாளில்தானே மரித்துப் போனான். நாம் சும்மா இருக்கும் நேரங்களில்
பாடல்களை முணுமுணுக்கும்போது அவை ஒருவேளை மற்றவர்களை
தொடலாம்!
.
இசை என்பது,
மனிதனின் இருதயத்தை தொடக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் மைக்கேல்
ஜாக்சன் மரித்த போது, அந்த கலைஞனுடைய இசையில் எத்தனை பேர்
அடிமையாய் இருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம்.
.
வசனம்
சொல்கிறது, ‘துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து;
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும்
ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில்
கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணுங்கள்’ என்று. நம் இருதயத்தில்
எப்போதும் கர்த்தரை துதிக்கிற
கீதம் தொனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீதிமான்களின் கூடாரங்களில்
இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு என்று சங்கீதம் 118:15
No comments:
Post a Comment