இரண்டு
தோட்டத்திலும் காய் காய்த்து குலுங்கியது. தினமும் மாலை இருவரும்
தோட்டத்தை பார்வையிடும்போது இரண்டாம் விவசாயி 'நான் வேலி
அடைக்கவில்லை, களை பிடுங்கவில்லை, ஆனாலும் என்னுடைய தோட்டமும்
நன்றாக காய்த்திருக்கிறதுதானே, நீ வேலி அடைத்து உன் பணத்தையும்,
களை பிடுங்கி உன் நேரத்தையும் வீணாக்கி விட்டாய். நீ வெட்டி வேலை
செய்திருக்கிறாய்' என்று ஏளனம் செய்தான். ' தக்காளிகளெல்லாம் நன்றாக முற்றி விட்டது. நாளை
பறித்தால் சரியாக இருக்கும்.
ஆகவே நாளை காலையிலேயே இவற்றை பறித்து சந்தையில் போய்
போடுவோம்' என்று பேசி கொண்டார்கள்.
.
சாக்குகளோடு
மறுநாள் அதிகாலமே தோட்டத்திற்கு வந்தனர். வேலியடைக்காத
தோட்டத்திலுள்ள காய்கள் எல்லாம் பறிக்கப்பட்டு தோட்டமே
அலங்கோலமாக கிடந்தது. காரணம் யாரோ நெடுநாளாய் இந்த தோட்டததை
கவனித்து வந்துள்ளனர். பறிக்க சரியான நோம் பார்த்திருந்தனர். வேலியும் இல்லாததால் எந்த
சிரமுமின்று பறித்து சென்று விட்டனர். இதை
கண்டவுடன் இரண்டாவது விவசாயிக்கு துக்கம் தொண்டையை
அடைத்தது. துக்கத்தோடு திரும்பி சென்றான்.
No comments:
Post a Comment