ஒரு மனிதர் ஒரு கிராமப்புறமாக நடந்து சென்று
கொண்டிருந்தார். வழியில் அவர் செல்லும் வழி தவறி விட்டது.
யாரிடமாவது வழி கேட்கலாம் என்று நினைத்தவராக ஒரு
வீட்டின் கதவை தட்டினார். அங்கு இருந்த ஒரு மூதாட்டி கதவை
திறந்தார்கள். என்ன என்று கேட்டபோது, வழி
தவறிவிட்டதாகவும், வழி கேட்க வேண்டி கதவை தட்டியதாகவும்
அந்த மனிதர் கூறினார்.
.
அப்போது அந்த வயதான அம்மா அவரை வீட்டிற்குள் அழைத்து
சாப்பிட்டு செல்லுமாறு கூறினார். உள்ளே வந்த மனிதருக்கு
ஆச்சரியம், அந்த வீட்டில் ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள்,
ஒரு பழைய கட்டில் வீட்டின் ஒரு மூலையில்
வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட அவர், அந்த தாயாரிடம்,
'என்னம்மா வீட்டில் ஒன்றுமே இல்லை?' என்றுக் கேட்டார்.
.
அதற்கு அந்த தாயார், 'உன்னுடைய பொருட்கள் எல்லாம்
எங்கே' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், 'நான்
எப்படி என் பொருட்களை நான் போகும் இடங்களுக்கு கொண்டு
செல்ல முடியும்? நான் வழிபோக்கனாயிற்றே?' என்று கூறினார்.
அப்போது அந்த தாயார், 'நானும் அப்படித்தான்' என்றுக்
கூறினார்கள்.
.
பிரியமானவர்களே, நமக்கு இந்த பூமி சொந்தமல்ல, நாம்
வழிப்போக்கர்களைப் போலதான் இங்கு வாழ வேண்டும், ஜீவிக்க
வேண்டும். ஏனெனில் நம்முடைய குடியிருப்பு இந்த உலகத்தில்
அல்ல, பரலோகத்தில் இருக்கிறது.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment