Monday, November 4, 2013

வியப்பூட்டும் வேதாகமம்

ஆசிய கண்டத்திலேயே முதன் முறையாக அச்சிடப்பட்ட புத்தகம் 'பைபிள்' எனப்படும் பரிசுத்த வேதாகமமாகும்.

அதிலும் சிறப்பு என்னவென்றால், முதல் வேதாகமம் தமிழில் அச்சடிக்கப்பட்டதால் ஆசிய கண்டத்திலேயே முதலில் அச்சில் ஏறிய மொழி 'தமிழ்' ஆகும்.

ஜெர்மனி நாட்டிலிருந்து தமிழகம் வந்த சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார்.

பரிசுத்த வேதாகமத்தை ஜுவாலித்து பிரகாசிக்கிற விலையேறப்பெற்ற பளிங்கு கற்களினால் மகா ஞானம்பெற்ற சிற்பாசாரியால் அதிக அழகாகவும் விசேஷித்த கைவேலைப்பாடுகளுடனும் செய்யப்பட்டதும், சிறிதும் பெரிதுமான அறுபத்தாறு அறைகளுள்ளதும் இராஜாதிராஜா உலாவிக்கொண்டிருக்கிறதுமான மகா பெரிய இராஜ அரண்மனைக்கு ஒப்பிடலாம்.

No comments:

Post a Comment