Sunday, April 21, 2013

வெட்கப்பட வேண்டாம்

மேரி அன்னா மார்ட்டின் என்னும் சிறுமி, தன் பெற்றோருக்கு ஒரே மகளாக வளர்ந்தவள். அவள் வாழ்ந்த நாட்களில் ஐரோப்பிய நாடுகளில் மாபெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. அவளுடைய தகப்பன் சொந்தமாக ஒரு பேக்கரி கடை வைத்திருந்தார். அவர் எப்போதும் சந்தோஷமாக காணப்பட்டார். அவருடைய மனைவியும் எப்போதும் பாடி கொண்டு அவர்கள் ஒரு சந்தோஷமான குடும்பமாக வாழ்ந்தனர். பஞ்சத்தின் காரணமாக அவர் தன் பேக்கரி கடையை இழக்க வேண்டியிருந்தது.
.
அதனால் அவர் வேறு எந்த வேலையும் செய்ய ஆயத்தமாயிருந்தார். எப்படியாவது தன் குடும்பத்திற்கு உணவை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் வேலையை தேடி கொண்டிருந்தார். அவருக்கு பெரிய பெரிய வீடுகளை சுத்தம் செய்து காவல் காக்கும் வேலை கிடைத்தது. ஆனால் அதினால் அவர் மனம் சோர்ந்து போகாமல், பாட்டு பாடியபடியே தன் வேலைளை ஒழுங்காக செய்து வந்தார். மேரி அன்னா மார்ட்டினுக்கு அவர் எங்கு வேலை செய்கிறார் என்று தெரியாமல் இருந்தது. அவள் தனது 13 ஆவது வயதில் உயர்நிலை பள்ளியில் சேர்ந்தாள். அவளுக்கென்று ஒரு நண்பர் கூட்டம் இருந்தது. ஒரு நாள் ஒரு பள்ளி மாணவி தன் உணவை தரையில் கொட்டி விட்டாள். அதினால் அவளுடைய ஆசிரியர் அவளுடைய தகப்பனின் பெயரை உரக்க சொல்லி கூப்பிட்டார். அப்போது தான் அவளுக்கு தெரிந்தது, தன் தகப்பன் அந்த பள்ளியில் சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்கிறார் என்று. அப்போது அவளுடைய தந்தை சுத்திகரிக்கும் பொருட்களை எடுத்து கொண்டு வந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.
.
அவளுடைய தோழி ஒருத்தி அவளிடம், 'அவருடைய பெயரும், உன்னுடைய பெயரும் ஒன்றாக இருக்கிறதே, அவரை உனக்கு தெரியுமா' என்று கேட்டாள். அப்போது அவள் தன் தலையை உயர்த்தி, சுத்தம் செய்யும் தன் தகப்பனை பார்த்து விட்டு, 'இவரை நான் முன்பின் பார்த்ததே இல்லை' என்று கூறினாள். அவளுடைய தகப்பானாருக்கு அவள் சொன்னது கேட்கவில்லை. அதை சொல்லிவிட்டப்பின், அவளுக்கு தன் மேலேயே ஒரு வெறுப்பு ஏற்பட்டது. சே, என்ன சொல்லி விட்டோம் என்று. பின், தன் தகப்பனின் தலையை தடவி, அவரோடு மிகவும் அன்பு கூர்ந்தவள் போல நடந்து கொண்டாலும், தன் தோழியிடம் அவள் கூறிய காரியத்தை அவளால் மறக்க முடியவில்லை. என்ன செய்தாலும், அவளுக்கு தன் தகப்பனை மறுதலித்த காரியமே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.
.
வருடங்கள் கழிந்தது. அவளுடைய தகப்பனார் மிகவும் உடல்நிலை குறைவால் படுக்கையில் இருந்தார். அவரருகே அமர்ந்திருந்த அவள், தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அதை கவனித்த அவளுடைய தாயார், ஏன் என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவள் நடந்த காரியத்தை கூறிவிட்டு, 'கடந்த 15 வருடங்களாக என் மனதை இந்த காரியம் அலைகழித்து கொண்டிருக்கிறது, நான் கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டாலும், என் மனம் என்னை குற்றவாளியாக வாதித்து கொண்டே இருக்கிறது' என்று கதறினாள்.
.
அவளுடைய தாயார், அவளை கட்டியணைத்து கொண்டு, ' உன் தகப்பனாருக்கு தெரியும், நீ அவரை நேசிக்கிறாய் என்று. நீ அவரை தெரியாது என்று சொன்னதை அவர் அன்று கேட்டிருந்தாலும், அவர் உன்னை நிச்சயமாய் நேசித்திருப்பார். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறைய கொண்டு செல்லும்போது, சீமோன் பேதுரு அவரை தெரியவே தெரியாது என்று சாதித்ததை அறிந்த போதும், அவர் அவனை நேசித்தாரே' என்று ஆறுதல்படுத்தினார்கள். அதை கேட்ட அன்னாவின் இருதயம் அமைதியானது.

No comments:

Post a Comment