
.
ஆம், பிரியமானவர்களே, நாம் வாழும் இவ்வுலகம் தேவனால் சபிக்கபட்ட பூமிதான். எங்கும் துஷ்டத்தனமும், பொல்லாங்கும் நிரம்பி காணப்படுவதை காண்கிறோம். பெண்களுக்கெதிரான வன் கொடுமைகளும், தீவிரவாதமும், கொள்ளை நோய்களும், விபத்துகளும், விபரீதங்களும் நடப்பதை காணும்போது மனுபுத்திரரின் இருதயம் நடுங்குகிறது. எப்போது என்ன நேரிடுமோ? என எண்ணி கலங்க வேண்டியதாயுள்ளது.
.
இப்படிப்பட்ட உலக சூழ்நிலையில் தேவன், தம்முடைய பிள்ளைகளுக்காக செய்வதென்ன தெரியுமா? அந்த காட்டிலே தனது பிள்ளையை எந்த பொல்லாங்கும் தொட முடியாதபடி அதன் தகப்பனார் எப்படி பாதுகாத்தோரோ, அப்படியே நம்மை இப்பொல்லாத உலகத்தினின்று பாதுகாப்பதற்கும், நமக்கொரு பரம தகப்பன் உண்டு. அந்த உன்னதமான தேவனின் மறைவில் நாம் இருப்போமென்றால், அவர் நம்மை பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார். வேடனுடைய கண்ணிக்கும் நாம் தப்பித்துக் கொள்வோம். பொல்லாப்பு நமக்கு நேரிடாது, எந்த வாதையும் நம் வீட்டை தொடாது.
.
இளம் பிள்ளைகளை தனியாக வேலைக்கு அனுப்புவதற்கும், கல்லூரிகளுக்கும் அனுப்புவதற்கு நாம் பயப்பட தேவையில்லை. ஏனெனில் நாம் செல்லும் வழிகளில் நம்மையும் நம் பிள்ளைகளையும் காக்கும்படி தூதர்களை அவர் அனுப்புவார். சிங்கம் போன்ற பயங்கர பிரச்சனைகளையும் வலுசர்ப்பமான பிசாசின் தந்திரங்களையும் நாம் மிதித்துப்போட முடியும். ஆபத்தில் அவரே நம்மோடிருந்து நம்மை தப்புவிப்பார் அல்லேலூயா!
No comments:
Post a Comment