
.
யாரை நான் அனுப்புவேன், யார் என் காரியமாய் போவான் என்ற கேள்வியை தேவன் தன்னிடம் கேட்பதாக உணரும் யாராலும் அமைதியாய் இருக்க முடியாது. ஆகவே தான் பவுலின் வாழ்விலே காவல்களும், அடியும், உதையும், கல்லெறிதலும், சேதமும், மோசங்களும், சொந்த ஜனங்களால் வந்த உபத்திரவங்களும் பசியும், தாகமும் வந்த போதிலும் அவைகள் ஒன்றுமே அவரை ஊழியம் செய்வதிலிருந்து சோர்ந்த போக செய்யவே இல்லை. 'நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன்' என்று சவாலிட்டார். விரல் போனால் என்ன? என்று மீண்டும் அம்மக்களை தேடிச் சென்ற மர்பி போதகரைப் போல, அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலைப் போல கிறிஸ்துவுக்காக ஆவியில் வைராக்கியம் கொண்டு ஊழியம் செய்யும் ஊழியர்கள் இந்நாட்களில் தேவனுக்கு தேவை.
.
ஊழியம் செய்ததனிமித்தம், வந்த நிந்தனையால், உபத்திரவத்தினால், சொந்த ஜனத்தாரின் அவமானப் பேச்சினால் சோர்ந்து போயுள்ள அருமை சகோதரனே, சகோதரியே, நான் சவுக்கடி பட்டால் என்ன, என் விரல் போனால் என்ன? என்று கேட்ட பக்தர்களின் வைராக்கியம் உங்களையும் பற்றி பிடிக்கட்டும். 'அவர்கள் என்னை அவமானப்படுத்தினால் என்ன? என்னை நிந்தித்தால் என்ன? நான் மீண்டும் கிறிஸ்துவின் பணியை உற்சாகமாய் செய்வேன். நான் மீண்டும் அங்கு செல்வேன். என் இலக்கு பூமிக்குரியதல்ல, அதைவிட மேலான ஜீவ கிரீடமே! அதை யாரோ ஒருவரது வார்த்தைக்காக ஒருபோதும் இழக்க மாட்டேன்' என வைராக்கியமாய் இன்றே புறப்படுவோமா? கர்த்தர் நம்மோடிருக்கிறார்! ஆமென் அல்லேலூயா!
No comments:
Post a Comment