Saturday, July 20, 2013

சிறு காரியங்களிலும் உண்மை - சீனா கிறிஸ்தவர்

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக மிக கொடூரமாக ஆட்சி நடத்திய காலத்தில் கிறிஸ்தவர்கள் தேச துரோகிகளாக கருதப்பட்டனர். எப்படியும் சிறிய குற்றத்தையாவது அவர்களிடமிருந்து கண்டு பிடித்து அதை மிகைப்படுத்தி சிறையில் அடைத்தனர். கிறிஸ்தவர்கள் என சந்தேகப்படுகிறவர்களையும் இரகசிய இராணுவ பிரிவு விழிப்போடு கண்காணித்தது.
.
இப்படிப்பட்ட சூழலில் கிராமத்திலுள்ள ஒரு கிறிஸ்தவரது வீட்டிலிருந்து பெட்டை கோழி ஒன்று வெளியே வந்தது. அதன் காலில் ஒரு தாள் சுற்றி கட்டப்பட்டிருந்தது. இதை கண்ட கண்காணிப்பாளர்கள், 'இவன் நம்முடைய கழுகு கண்களையும் தாண்டி யாருக்கோ இரகசிய செய்திகளை அனுப்புகிறான்' என்ற ஆர்வத்தில் கோழியை விரட்டி பிடித்து அதன் காலிலுள்ள தாளை பிரித்து படித்தனர். அதில், 'இந்த கோழி யாருடையது என்று தெரியவில்லை. இன்று அது என் வீட்டிற்குள் வந்து முட்டையிட்டு விட்டது. இதன் உரிமையாளர் வந்து முட்டையை பெற்று சொள்ளுங்கள்' என்று எழுதி அவரது பெயரையும் வீட்டு எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். குற்றத்திற்கு ஆதாரம் தேட சென்ற அவர்கள் அவரது உண்மைக்கு ஆதாரம் கண்டு வியந்தனர் ஒரு முட்டையை கூட தனக்கென்று எடுத்து கொள்ளாமல் அதை உரிமையாளரிடம் சேர்க்க முயற்சி எடுக்கிறானே என ஆச்சரியப்பட்டனர். அவர் மீதான கண்காணிப்பை விட்டு விட்டனர்.

No comments:

Post a Comment