Tuesday, July 9, 2013

சோம்பேறி கழுதை

ஒரு ஊரில் ஒரு உப்பு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தன் கிராமத்தில் உள்ள ஆற்றை கடந்து சந்தைக்கு சென்று உப்பு விட்டரு வியாபாரம் செய்வார். தன்னுடைய வியாபாரத்திற்காக தன்னுடைய செல்லமான கழுதையை பொதி சுமக்கும்படி பழகுவிதிருந்தார்.
அப்படியாக ஒரு நாள் சந்தைக்கு ஆற்றை கடந்து செல்லும் போது கால் இடறி கழுதை ஆற்றில் விழுந்து மூட்டையில் இருந்த உப்பு எல்லாம் கரைந்து விட்டது. அது வியாபாரிக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அனால் கழுதை எல்ல பாரமும் குறைந்தது என்று எண்ணி சந்தோசப்பட்டது.
மறுநாள் வியாபாரி சந்தைக்கு செல்லும் போது கழுதை தவறி விழுவது போல் நடித்து மீண்டும் உப்பை கரைத்து விட்டது. கழுதைக்கு மட்டற்ற மகிழ்ச்சி வியாபாரிக்கு மிகுந்த வருத்தம்.

மீண்டும் இந்த வழக்கத்தை கழுதை கடைபிடிக்க, வியாபாரி கழுதைக்கு படம் கற்பிக்க நினைத்து, உப்புக்கு பதிலாக பஞ்சை மூடியில் வைத்தார். கழுதை அதை அறியாமல் ஆற்றில் வழக்கம் போல் விழ, மீண்டும் இராமான பஞ்சு மூட்டையை தூக்க முடியாமல் திணறியது. அப்பொழுது தான், தன் தவறை உணர்ந்து தன் கடமைகளை கவனமாய் செய்ய ஆரம்பித்தது.

No comments:

Post a Comment