
அந்நாட்களில் என் தாயார் செய்து தரும் பலகாரம் மட்டுமே எங்கள் உணவாக இருக்கும். மதிய உணவு முடிந்தபின் மீதமாக வரும் சிறு அளவு சாதத்தில் மோர் கலக்கிக் கொடுப்பார் என் தாயார், பல நாட்கள் அதுவே என் இரவு உணவாக இருந்தது. முதலாவது என் சகோதரி ஏசுவை ஏற்றுக் கொண்டார். அதன்பின், என் தாயாரும் ஏசுவை ஏற்றுக் கொண்டார். அப்பொழுதெல்லாம் என் தாயாரின் வற்புறுத்தலுக்காக மட்டுமே நான் ஆலயம் செல்வேன். அதன்பின், எனக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை கிடைத்தது. இப்பொழுது ஆலயத்தைக் காட்டிலும் வேலை எனக்கு முக்கியமாக தெரிந்தது. நண்பர்களோடு ஊர் சுற்றுவது, சினிமா என்று ஜாலியாக நாட்களை கழித்தேன்.
என் தாயார் ஆலயத்துக்கு அழைக்கும்போது எல்லாம் எனக்கு வேலை இருக்கிறதென்று சென்று விடுவேன். என் தாயார் எனக்காக அதிகமாக ஜெபிப்பார்கள். பின்னாட்களில் நானும் என் தாயரோடு ஆலயத்திற்கு செல்லத் தொடங்கினேன். என்னுடைய வழிகள் தவறானவை என்பதை உணர ஆரம்பித்தேன். எனக்குள்ளே பல மாற்றங்கள், வாரம் தவறாமல் சபைக்கு செல்ல தொடங்கினேன், என் தாயாரை விட அதிகமாக ஜெபிக்க ஆரம்பித்தேன். ஆண்டவரை அறிந்த நாள் முதல் என் வாழ்வில் பெருத்த மகிழ்ச்சி, பூரண நிம்மதியுடன் வாழ்கிறேன், எங்கள் வீட்டில் ஒருநாளும் உணவில்லாமல் இருந்ததில்லை. என் குடும்பத்தில் திருமணமாகி பத்து வருடங்கள் கழித்தே என் மூத்த சகோதரிக்கு குழந்தை பிறந்தது, என் இளைய சகோதரிக்கு எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலை, என் தாயாருக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் கழித்தே குழந்தை பிறந்துள்ளது. என் வாழ்வில் இப்படிப்பட்ட சாபங்கள் இருக்க கூடாது என்பதில் மிக உறுதியாக ஜெபித்து வந்தேன். எனக்கு திருமணமான முதல் ஆண்டிலேயே முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியத்தை தேவன் தந்தார்.
எனக்கு அருமையான மனைவியை தேவன் கொடுத்துள்ளார். இப்பொழுதும் எனக்கு இரண்டு குழந்தைகள். நான் எக்க்ஸ்போர்டிலேயே தொடர்ந்து வேலை செய்து வந்தாலும், ஒரு குறைவும் இல்லாமல் என் தேவன் என்னை வழி நடத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் கண்ணின் மணியைப் போல பாதுகாத்து நடத்தி வரும் தேவனுக்கு ஸ்தோத்திரம்.
No comments:
Post a Comment