Tuesday, July 9, 2013

உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்

பலர் பரிசுத்த வேதாகமத்தை படிப்பதில்லை மாறாக
கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்

மத்தேயு 10: 28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

முதல் கிறிஸ்தவர் கொல்லப்பட்ட, ஒரிசா கந்ரஹம் பகுதியில் கிறிஸ்தவர்கள் தங்கள் இடிந்து போன வீடுகள் முன்பாக இயேசு கிறிஸ்துவை ஆடி பாடி கொண்டாடுகின்றனர். இப்பகுதி கலவரத்தில், கொல்லப்பட்டார்.

இக்கலவரத்தில் முதன் முதலாக எரிக்கப்பட்டவர் சகோதரர் ரசனந்த் பிரதான். இவருடைய சகோதரர் இரபின்றா பிரதான் - ஐ வீட்டோடு வைத்து எரித்து விட்டார்கள். தேவனின் அநாதி தீர்மானத்தினால் உயிர் பிழைத்த இவர் கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தை அறிக்கையிட தன் கிராமத்து மக்களோடு தயாராகி வருகிறார்கள்.

"என் சகோதிரர் தன் உயிரை இழந்தது வீணாய் போய்விடவில்லை. புதிதாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எங்கள் சபை ஆராதனையில் கலந்து கொண்டுள்ளனர்" என்று கூறுகிறார்.

இந்த பகுதியில் பல கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் தீக்கிரையக்கபட்டன.. ஆனாலும் உயிர் பிழைத்த கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சொந்த குடும்பத்தில் பலரை இழந்தாலும் கிறிஸ்துவை இழந்து விடவில்லை. மறுதலிக்கவும் இல்லை. தொடர்ந்து தேவனை ஆராதித்து வருகின்றனர்.

இவர்களின் விசுவாசத்தை, தைரியத்தை, கொன்றவர்களை மன்னிக்கும் தேவ அன்பை கண்ட பல இந்து குடும்பங்கள் இன்று இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டுள்ளனர். சிலுவையின் அன்பு இன்றும் பல கலவரக்காரர்களை மாற்றி வருகிறது.

தேவனுக்கே நன்றி. அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. கிறிஸ்துவுக்கு பின் இதுவரை பல கோடிகணக்கான பேர் கொல்லப்பட்டும் கிறிஸ்தவம் இன்றும் மேலோங்கி நிற்ப்பதற்கு காரணம் சிலுவையின் அன்பை ஒவ்வொரு கிறிஸ்தவனும் உலகுக்கு வெளிபடுத்தி கொண்டிருக்கிறான். இந்த தேவ அன்பு தான் இன்று பல புறமதத்தை சேர்ந்தவர்களை கிறிஸ்துவின் மந்தையில் இணைத்து வருகிறது.

இந்த அன்பிற்கு நீங்களே சாட்சி. இந்த தெய்வத்திற்கு நம் வாழ்க்கை சாட்சி. பலர் பரிசுத்த வேதாகமத்தை படிப்பதில்லை. ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்களை, அவர்களின் வாழ்க்கையை படித்து வருகின்றனர். சாட்சியாக வாழ்வோம். தேவனின் நாமத்தை உயர்த்துவோம். ஆமென்.

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

No comments:

Post a Comment