Tuesday, July 9, 2013

இரத்த சாட்சி - சவுதி அரேபியாவில் விழுந்த கோதுமை மணி



சவுதி அரேபியாவில் விழுந்த கோதுமை மணி
“Oh history record and witnesses witness (that) we are Christians walking on the path of the Messiah.” - Fatima Al-Mutairi

"வரலாறுகளும், சாட்சிகளும் நாங்கள் கிறிஸ்தவர்கள் (இயேசு கிறிஸ்து) மேசியாவின் வழியில் நடப்பவர்கள் என்று சாட்சி கூறும்" இது பாத்திமா அல் முதைரி எழுதின ஓர் கவிதையில் இருந்து எடுக்கப்பட்டது.

சவுதி அரேபியா கிழக்கு பிரதேசம், புரய்தஹ்வை சேர்ந்த முகமதியர் ஒருவர், தன் சொந்த தங்கை பாத்திமா அல் முதைரி யை சில நாட்களாகவே சந்தேகப்பட்டு வந்தார். பாத்திமா அல் முதைரி அவர்கள் அடிக்கடி கடவுளை பற்றி தன் குடும்பத்தாருடன் கருத்தை பகிர்ந்துள்ளார். இதனால் பாத்திமா அல் முதைரி வின் சகோதிரர் இவருடைய கணினி (கம்ப்யூட்டர்), புத்தகங்களை தோண்ட ஆரம்பித்தார். அப்போது அவருக்கு சில பரிசுத்த வேதாகமத்தின் வசனங்கள், இயேசு கிறிஸ்துவை பற்றின காரியங்கள் மற்றும் பாத்திமா அல் முதைரி வின் கணினியில் ஓர் சிலுவையும் இருந்துள்ளது. இதை பற்றி பாத்திமாவிடம் விசாரித்தார். கடும் கோபம் வந்தது. பாத்திமாவை ஓர் அறையில் அடைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.

தனக்கு ஏதோ நிகழபோகிறது என்று புரிந்துகொண்ட பாத்திமா அல் முதைரி தன் கணினியை எடுத்து தன் கடைசி கடிதத்தையும் கவிதையையும் தேவனுகேன்று எழுத ஆரம்பித்தார்.
அக்கடிதத்தில் தனக்கும் குடும்பத்தாருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. "நான் மிகுந்த நெருக்கத்தில் இருக்கிறேன்."மாறிவிடு, இல்லையென்றால் குற்றவாளியாவாய்" என்று சகோதிரர் மிரட்டினார். "என் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படுவிட்டன" என்று நான் கூறினேன். பிறகு எனக்கு தெரியாமல் என் சகோதிரர் கணினியை பார்த்து நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினதை கண்டுபிடித்து விட்டார். நான்கு மணிநேரம் இந்த அறையில் அடைபட்டு கிடப்பது எனக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் "கர்த்தர் என்னோடு இருக்கிறார். அவர் என் வெளிச்சமும், ரட்சிப்புமானவர். யாருக்கு அஞ்சுவேன்?"

இது கடைசியாக பாத்திமா எழுதின கடிதம்.
இவர் எழுதின கவிதையிலிருந்து (http://gch1.org/ar)ஒரு சில வரிகள்
"ஒ முகமதியர்களே, தேவன் உங்களை வழிநடத்தட்டும்
மற்றவர்களை நேசிக்க உங்கள் இருதயத்தில் போதிப்பாராக
நாங்கள் சிலுவையை வணங்கவில்லை, இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கிறோம்.
முகமதுவின் வழியில் நாங்கள் இல்லை, உண்மையான மேசியாஹ் இயேசு கிறிஸ்துவை வணங்குகிறோம்.
எங்களை வாழ விடுங்கள்
என் கண்ணீர் என் தாடையை தடவி பார்கிறது
இதயம் சோகத்தில் உள்ளது
கிறிஸ்தவர்கள் மேல் இவ்வளவு மூர்க்கம் கொள்கிறீர்களே?
மேசியாவின் வார்த்தை "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்"
எங்களோடு மறித்து கல்லறையில் நீங்கள் அடக்கம் பண்ண படபோவதில்லை
உங்கள் பட்டயத்தை பற்றி கவலையில்லை, நான் பயப்படவில்லை
தேவனால் மரணத்திற்கு ஒப்புகொடுக்கிறேன், ஒ கிறிஸ்தவர்களே, இந்த சோகமான வாழ்க்கைக்காக என் கண்களில் கண்ணீர் வருகிறது.
வரலாறுகளும், சாட்சிகளும் நாங்கள் கிறிஸ்தவர்கள் (இயேசு கிறிஸ்து) மேசியாவின் வழியில் நடப்பவர்கள் என்று சாட்சி கூறும்
என்னுடைய கடைசி வார்த்தை "இந்த உலகத்தில் உள்ள மேசியாவான இயேசுவிடம் ஜெபிக்கிறேன், வெளிச்சத்தின் பாதையில் நடத்துபவர், எங்கள் எண்ணங்களை மாற்றியவர், சரியாக நீதி நிலைநிருத்துபவர், முகமதியர்கள் மத்தியில் அன்பை பகிர்ந்து கொள்ளுவார்"

இது தான் இவர் எழுதின கடைசி கவிதை. நான்கு மணிநேரம் கழித்து வந்த இவர் சகோதிரர் உயிரோடு பாத்திமாவை எரித்தார். பிறகு அவர் நாக்கை வெட்டினார். கொலை செய்தார்.

அன்பு நண்பர்களே. இது ஒரு பகுதியில் நடந்த கதைதான். தன்னுடைய வாழ்க்கை முடிவது தெரிந்தாலும் தைரியமாக ஓர் அரேபிய இணைத்தளம் மூலம் இயேசுவை உலகதிருக்கு அறிவித்துவிட்டு மறித்து போனார். இவர் சார்ந்துள்ள "அல் முதைரி" இனத்திற்காக ஜெபிப்போமா? இவரை போல் பல ரகசிய கிறிஸ்தவர்கள், ஊழியர்கள், போதகர்கள் உள்ளனர். இவர்களை நீங்கள் நேரில் சந்திக்க முடியாது. ஆனால் ஜெபிக்க முடியும்.

பாத்திமா அல் முதைரி -- உம்மை பரலோகத்தில் நிச்சயம் சந்திப்பேன். ஆமென்

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

http://ministry-of-grace.org/?p=264
http://www.youtube.com/watch?v=oA-bBI5W9qY
http://www.stfrancismagazine.info/ja/Fatima%20of%20Saudi%20Arabia.pdf

No comments:

Post a Comment