Tuesday, July 9, 2013

இயேசு கிறிஸ்து - ஓர் அதிசயத்தின் அதிசயம்

இயேசு கிறிஸ்து
இவருக்கு........
அடிமைகள் யாரும் கிடையாது - நமக்கு இவர் எஜமான்
ஆசிரியராக பணியாற்றவில்லை - "போதகரே" என்றார்கள்
 

பட்ட படிப்பு படிக்கவில்லை - உபதேசத்தை கேட்டார்கள்
வேதியல் படிக்கவில்லை - தண்ணீரை திராட்ச ரசமாகினார்
உயிரியல் எழுதவில்லை - தான் பிறந்ததையே அதிசயமாக்கினார்
இயற்பியல் படிக்கவில்லை - மேலே எடுத்துகொள்ளபட்டார்
பொருளாதாரம் நடத்தவில்லை - 5000 பேரை போசித்தார்
வரலாற்றை இவர் உடைக்கவில்லை - வரலாறு இவருக்காக உடைந்தது கி.பி - கி.மு
மருத்துவம் பயிலவில்லை - நம்பினோரை சுகமாக்கினார்
மந்திரவாதி அல்ல - கடல் மீது நடந்தார்
பாவத்தை வெறுத்தவர் - பாவிகளை நேசிக்கிறார்
ராணுவம் இல்லை - ராஜாக்கள் இவருக்கு பயந்தார்கள்
எந்த நாடு மீதும் படைஎடுக்கவில்லை - பல நாடுகளை தனதாக்கினார்
உயிர்பிக்க வந்தவர் - நமக்காக மரித்தார்
குற்றம் ஏதும் செய்யவில்லை - சிலுவையில் அறைந்து கொன்றார்கள்
கல்லறையில் அடைத்தார்கள் - இன்றும் உயிருடன் இருக்கிறார்


இவ்வுலகில் அதிகமாக கொல்லபடுவதும் கிறிஸ்தவம் தான்
பல பெயர்களில் உடைந்ததும் கிறிஸ்தவம் தான்
அதிகமாக துன்பபடுத்தபட்டு கொல்லப்பட்டதும் கிறிஸ்தவர்கள் தான்
அதிக எண்ணிக்கையில் உலகில் வளம் வருவதும் கிறிஸ்தவம் தான்
அதிகமாக வளர்வதும் கிறிஸ்தவம் தான்
இந்த கிறிஸ்தவம் யாரையும் கொல்லவில்லை
பழிசுமத்தவில்லை
வற்புறுத்தவில்லை
ஆயுதம் ஏந்தவில்லை
மாறாக
அன்பு ஒன்றை கொண்டே உலகத்தை தனதாக்கி கொண்டது

இயேசு கிறிஸ்து
இவர் நேரடியாக வேதாகமம் எழுதவில்லை
இவரில்லாமல் வேதாகமம் இல்லை
வேதம் இவரால் அருளப்பட்டது

அதிசங்களின் அதிசயம்
நம் இயேசு கிறிஸ்து

thanks - தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்



இவ்வாறிருந்தும் அவற்றில் ஒன்றுக்கொன்று கருத்து வேற்றுமை கிடையாது. அச்சு இயந்திரம் மூலம் அச்சடிக்கப்பட்டு உலகின் முதன் முதலில் புத்தகமாக வெளிவந்தது பரிசுத்த வேதாகமமே!உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் பரிசுத்த வேதாகமமே!சுமார் 1700(இந்த கணக்கு 10 வருடங்களுக்கு முந்தையது) மொழிகளுக்கு மேல் இது மொழிபெயர்கப்பட்டுள்ளது!,13 நாட்களுக்கு ஒரு முறை பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பகுதி ஒரு புதிய மொழியில் வெளிவருவதாக கணக்கிட்டிருக்கிறார்கள்.உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகம் இதுதான்.


ஒரு புத்தகங்களின் கையெழத்துப் பிரதிகள் எத்தனை உள்ளதோ அதன் எண்ணிக்கையைக் கொண்டுதான் அந்தப் புத்தகத்தின் தரம் கணக்கிடப்படும்.இன்று உலகிலேயே அதிகமான கையெழுத்துப் பிரதிகளை கொண்டது திருமறையின் புதிய ஏற்பாடாகும்.அதற்கு 24,000 கையெழுத்துப் பிரதிகள் கிடைத்துள்ளன. உலகின் புத்தகங்கள் அனைத்தும் நடந்தவற்றையும்,நடக்கின்றவற்றையும் சொல்லலாம்.ஆனால் வேதாகமம் மாத்திரமே,நடந்தவவைகளையும்,நடக்கின்றவகளையும் மட்டுமல்லாமல் நடக்கப்போகின்றவைகளையு கூறக்கூடிய தீர்க்கதரிசனங்களை உள்ளடக்கியது!.


நெல்சன் குக் என்ற புதைபொருள் ஆராய்சியாளர்,"இதுவரை 25,000-க்கும் அதிகமான இடங்களில் செய்யப்பட்ட புதைபொருள் கண்டுபிடிப்புகளில் வேத வசனத்திற்கு மாறுபட்டதாக ஒன்று கூட இருந்ததில்லை.அனைத்து கண்டுபிடிப்புகளும் வேதவசனத்தை நிருபிப்பதாகவே உள்ளது"என்று தெரிவித்து உள்ளார்.


முதன் முதலில் வானவெளிக்கலத்தில் எடுத்து செல்லப்பட்ட புத்தகமும் பரிசுத்த வேதாகமமே! வேதாகமத்தின் முதல் வசனத்தை,போர்மன் என்ற வானவெளிவீரர் 1968-ஆம் ஆண்டு வானவெளியில் கலத்தில் இருந்து வாசித்தார். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்தவிதமான கண்டுபிடிப்பும் வேதாகமத்திற்கு எதிராக எதையும் சாதித்துவிடவில்லை.அமேரிக்காவில் 600 விஞ்ஞானிகளும்,ஆஸ்திரேலியாவிலிருந்து புதை பொருள் ஆராய்ச்சியாளர்களும் வேதாகமத்தின் ஒவ்வொரு பகுதியையும் விஞ்ஞான ஆதாரபூர்வமாக நிருபித்து இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். "உம்முடைய வேதமே சத்தியம்" (சங்.119:142)

நன்றி;நல்ல நண்பன்
 


No comments:

Post a Comment