Sunday, November 30, 2014

வேதாகமமும் அறிவியலும் பதிவு 4


வேதாகமமும் அறிவியலும் பதிவு 4

எனக்கன்பான தேவ ஜனமே, இந்த பதிவில் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். பரிசுத்தர் இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

1. பல நட்சத்திரங்கள் உருவாகும்
வேதாக வசன ஆதாரம் : ஆதியாகமம் 22:17 - உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்.
நாசா விண்வெளி ஆராய்ச்சி முடிவு - 1-5-2006 அன்று வெளியிடப்பட்டது http://www.nasa.gov/centers/goddard/news/topstory/2006/milkyway_seven.html

இதற்கு ஆதாரமாக பல விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் கொடுத்துள்ள பதிவுகள் http://www.space.com/1917-dozen-stars-born-milky-year.html

இந்த பதிவுகளில் கூறியுள்ள படி பால்வெளி மண்டலத்தில் வருடந்தோறும் பல நட்சத்திரங்கள் உருவாகுமாம். நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 6 அல்லது 7 புதிய நட்சத்திரங்கள் உருவாகும் என கணக்கிட்டு உள்ளனர். இதனை மற்ற நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஓர் பால்வெளி மண்டலத்தில் 7 உருவாகும் என்றால் இந்த பிரபஞ்சத்தில் பல பால்வெளி மண்டலங்கள் உள்ளது. இவ்வாறு இருக்கும் பொது ஓர் வருடத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உருவாகும்? உங்களால் கணக்கிட முடியுமா? முடியாது. அதனை போலத்தான் நம் தேவனின் ஆசீர்வாதத்தையும் உங்களால் எண்ணி பார்க்க முடியாது.

நமது வேதாகமத்தில் இந்த நட்சத்திர பெருக்கத்தை குறித்து ஆதியாகமத்தில் எழுதப்பட்டுவிட்டது. இதனை எழுதியவர் மோசே. எழுதப்பட்ட வருடம் கி.மூ 4000 வருடங்களுக்கு முன். மோசே விண்வெளி ஆராய்ச்சியாளரா? இல்லை நண்பரே. ஆனால் அவர் வின்னுலகை படைத்த இயேசு கிறிஸ்துவின் விசுவாசி. இவர் எழுதியது இன்று தான் உண்மை என்று பலருக்கும் தெரிகிறது. நட்சத்திரங்கள் உருவாகுமா? தேவன் ஆசீர்வதிக்கும் போது நான் உன்னை நட்சத்திரங்களை போல பெருக பண்ணுவேன் என்றார். நாம் பெருகுகின்றோம், நட்சத்திரம் பெருகுகிறதா? ஆம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

2. கடற்கரை மணல் உருவாகி பெருகும்
வேதாகம வசன ஆதாரம் - ஆதியாகமம் 22:17 கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்.
ஆராய்ச்சி முடிவு - கடற்க்கரை மணல் உருவாகும்.
http://geology.com/stories/13/sand/

இப்படிப்பட்ட மணல் கடற்க்கரை காற்றில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் கடல் அரிப்புகள், போன்றவைகளால் உருவாகும் என நிருபிக்கப்பட்டுள்ளது. http://global.britannica.com/EBchecked/topic/521932/sand-dune/49752/Formation-and-growth-of-dunes
"The wind adjusts its velocity gradient on reaching the sand patch; winds above a certain speed decrease their near-surface velocity and deposit sand on the patch. This adjustment takes place over several metres, the sand being deposited over this distance, and a dune is built up. " இதில் dune என்ற வார்த்தையின் அர்த்தம் a mound or ridge of sand or other loose sediment formed by the wind, especially on the sea coast or in a desert.

ஒருவேளை வேதாகமத்தில் கடற்க்கரை மணல் அல்லாமல் வேறு நிலப்பகுதி மணலை பற்றி கூறி இருந்தால் கருத்து மாறுபாடாக இருந்திருக்கும். ஆனால் வேதாகமத்தில் மோசே தேவ ஞானத்தால் எழுதியது ஆச்சரியமாகுமா? இன்றைய விஞ்ஞான துறைக்கு ஆச்சரியமே. தேவ பயத்தோடு நாம் எழுதும் ஒவ்வொரு காரியமும் விஞ்ஞானத்தை மிஞ்சும் என்பதற்கு இதனை விட என்ன ஆதாரம் வேண்டும்?

3. பூமி வெட்டவெளியில் தொங்குகிறது.
வேதாகம வசன ஆதாரம் - யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
அறிவியல் கண்டுபிடிப்பு - நாசா விண்வெளி ஆராய்ச்சி முடிவுகள், இந்தியாவின் ஆராய்ச்சி முடிவுகள் ஒத்துக்கொண்டுள்ளன. http://spaceplace.nasa.gov/geo-orbits/en/

ஆதிகால மனிதர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் இந்த உலகம் எதோ ஒன்றில் அமர்ந்திருப்பதாகவும் அல்லது எதோ ஓர் மிருகம் தாங்கி கொண்டிருப்பதாகவும் படம் வரைந்தனர். ஆனால் பரிசுத்த வேதாகமம் தெளிவாக இந்த பூமி அவாந்திர வெளியில் அதாவது வெட்டவெளியில் தொங்குகிறது என்று கூறி இருக்கிறது. யோபுவின் புஸ்தகம் எழுதப்பட்டது 4000 வருடங்களுக்கு முன்னராக இருந்தாலும் அதை கடந்து பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் யோபு. ஆபிரகாமின் காலத்தில் வாழ்ந்தவர் என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன. பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே இந்த காரியம் மனிதனுக்கு தேவனால் வெளிப்படுத்தப்பட்டது.
Many ancient peoples believed that the world was a flat disk supported by a giant or an animal, such as a buffalo or a turtle.
http://www.clarifyingchristianity.com/science.shtml

4. மரபணு வளர்ச்சியின் அவசியம்
வேதாகம வசனம் - ஆதியாகமம் 1:11-12
தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
அறிவியல் ஆராய்ச்சி ஆதாரம் -http://www.ncbi.nlm.nih.gov/pubmed/22382462
http://www.globalsciencebooks.info/JournalsSup/images/SF/GGG_1%281%291-20.pdf

மனிதனில் உள்ள வித்து தான் இன்னொரு மனிதனை உருவாக்க முடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஓர் தெளிவான உண்மை. கணிகளுக்கும், புல் பூண்டுகளுக்கும் இப்படிதான் என்பது ஆராய்ச்சி செய்யாமலே 4000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதா? அதுவும் உலக ஆரம்பத்தில் இருந்தே இந்த உண்மையை தேவன் மனிதனுக்கு புரிய வைத்திருந்தார். இந்த வசனத்தில் "தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள்" என்ற வார்த்தையை கவனிக்கவும். நமக்குள் இருக்கும் வித்து எப்படி இன்னொரு மனிதனை உருவாக்க வல்லதோ அதை போல கனிகளில், செடிகளில் உள்ள வித்துக்கள் அந்தந்த கனிகளை மட்டுமே கொடுக்கும். கணவனும் மனைவியும் இணையும் போது குழந்தை பிறக்கிறது. சிங்கமோ, கரடியோ பிறக்குமா? குருவியோ, மரமோ பிறக்குமா? நிச்சயமாக முடியாது. யார் இந்த அதிசயத்தை செய்திருப்பார். இயற்கையாக நடந்திருக்குமா? நிச்சயம் உருபாக்குபவர் வேண்டும் அல்லவா? அவர் நம் தேவனே.. இந்த உண்மையும் வேதாகமத்தில் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே எழுதப்பட்டு விட்டது. http://animalsmart.org/animal-science/the-fields-of-animal-science/breeding-and-genetics/important-terms-in-breeding-and-genetics

5. இந்த பூமியின் மண்ணிலே உருவாக்கப்பட்டவன் மனிதன்
வசன ஆதாரம் - ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
ஆராய்ச்சி முடிவுகள் - http://www.theregister.co.uk/2013/11/06/science_and_religion_agree_life_and_mankind_are_from_clay/
http://www.foxnews.com/science/2013/11/06/new-study-suggests-man-came-from-clay-as-bible-suggests/

மனிதன் மண்ணிலே படைக்கப்பட்டதை பல ஆராய்ச்சி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. பழங்கால கிரேக்க, சீன, எகிப்து சித்தாந்தங்களும் கிறிஸ்தவர்களின் வேதாகமமும், இஸ்லாமியர்களின் குரானும் மண்ணிலே மனிதன் பிறந்தான் என்று எழுதி வைத்துள்ளது. ஆனால் மற்ற புத்தகங்கள் கூறும் இந்த கருத்தை பரிசுத்த வேதாகமம் 4000 வருடங்களுக்கு முன்னரே எழுதி வைத்திருந்தது. இதை பல ஆதாரங்கள் நிருபித்துள்ளது
http://en.wikipedia.org/wiki/Creation_of_man_from_clay
http://www.foxnews.com/science/2013/11/06/new-study-suggests-man-came-from-clay-as-bible-suggests/
https://esoriano.wordpress.com/2007/05/25/from-dust-to-man-a-scientific-proof/
இன்னமும் பல வலைத்தளங்கள் உள்ளது.

6. மனஉளைச்சல் / அழுத்தம் எலும்பை உருக்கும்
வசன ஆதாரம் - நீதிமொழிகள் 12:4. குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.

மற்றும் நீதிமொழிகள் 14:30 , 15:30 , 16:24 , 17:22
சாலமன் ராஜா கி. மூ 950 வருடங்களுக்கு முன்னமே இந்த எலும்புருக்கி நோயை குறித்து எழுதியுள்ளார். மன அழுத்தமோ ஆவிக்குரிய அழுத்தமோ இருக்குமாயின் அது எலும்பை பாதிக்கும் என்று கூறி இருந்தார். இது உண்மையா? ஆம் என்கிறது மருத்துவ ஆராய்ச்சி குழு. அதாவது தான் நேசித்த ஒருவரின் மூலம் (மனைவி - நீதி 12:4) லட்சை (வெட்கம்) அடைந்தாலோ, பொறாமையின் மூலமாகவோ, மனம் உடைந்த நிலையில் இருக்கும் மனிதனின் எலும்புகள் பாதிக்கப்படும். அதே நேரத்தில் நல்ல செய்தி கேட்பதின் மூலமாகவும், மகிழ்ச்சியான நேரங்களிலும் எலும்புகள் புஷ்டியாக இருக்குமாம். குழந்தை பெரும் ஓர் தாயிடம் எல்லோரும் அன்பாகவே இருப்பார்கள். ஏன் என்றால் அவர்கள் மனம் ஒடிந்தால் அவளின் ஆரோக்கியம் மட்டும் அல்ல அவளின் குழந்தையும் மனதளவிலும், ஆரோக்கியத்திலும் அதிகமாய் பாதிக்கப்படும்.

இதை வைத்து பார்க்கும் போது சாலமன் ராஜா கூறிய மனம் மற்றும் எலும்பு வசனங்கள் எவ்வளவு பெரிய உண்மை...
http://www.apa.org/helpcenter/stress-body.aspx
http://www.webmd.com/balance/stress-management/effects-of-stress-on-your-body

7. குகை மனிதன்
வேதாகம ஆதாரம் - யோபு 30:5,6. அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
அறிவியல் ஆதாரம் - http://www.huffingtonpost.com/2012/06/28/cavemen-bones-dna-humans_n_1636289.html

குகை மனிதன் இருந்ததாக நமக்கு பல கல்வெட்டு ஆதாரங்கள் இருந்தது. ஆனால் அறிவியல் இதை உறுதி செய்யவில்லை. சமீபத்தில் குகை மனிதர்களின் எலும்புகள் கிடைத்துள்ளது. இது சுமார் 7,000 வருடங்களுக்கு முன் உள்ளதை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த குகை மனிதனை பற்றி யோபுவில் பல ஆயிர வருடங்களுக்கு முன்னமே எழுதப்பட்டு விட்டது.
http://www.gotquestions.org/cavemen.html
http://www.matrixbookstore.biz/caveman.htm

8. குழந்தை பிறந்த எட்டாவது நாளில் அதிக ரத்த உறைவு இருக்கும்
வசன ஆதாரம் - லேவியராகமம் 12:3 எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.

அக்கால வழக்கப்படி பிறந்த குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்தது நமக்கு தெரிந்த ஓர் விஷயம். இந்த விருத்தசேதனம் பரிசுத்தமாக்குதலுக்காக கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஓர் குழந்தையின் பாவபிறப்பு முடிவுக்கு வருகிறது. இந்த விருத்தசேதனம் மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பை குறிக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் இதை இன்று செய்வதில்லை. காரணம் பரிசுத்த வேதாகமமே. 1 கொரிந்தியர் 7:19. விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

தொழில் விருத்தசேதனம் பெறுவதை காட்டிலும் உள்ளத்தில் பாவத்தை வெறுத்து விருத்தசேதனம் அடைந்து பரிசுத்தமாய் வாழ தேவன் அழைக்கிறார். ஒருவன் கிரியையினால் இரட்சிக்கப்பட முடியாது என்று வேதாகமம் போதிக்கிறது. சரி... இந்த விருத்தசேதனம் பழக்கத்தில் இருந்த காலத்தில் தேவன் அதை ஏன் 8ம் நாளில் பண்ண சொன்னார்? எந்த மனிதன் இதை குறித்து ஆராய்ந்தான்?

பிறந்த குழந்தையின் ரத்த உறைவு எட்டாம் நாளில் அதிகமாய் இருக்கும். அந்த நாளில் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 9ம் நாளில் இருந்து ரத்தஓட்டம் சிறிது சிறிதாக வேகமெடுக்கும். இது அறிவியல் முடிவு. இதனை அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்தது. இதை தேவன் அக்காலத்தில் தம்முடைய பிள்ளைகளுக்கு நடைமுறைபடுத்தி கொடுத்திருந்தார். இது ஓர் அதிசயமே..

இன்றும் இது அறிவியல் பூர்வமாக நிருபிக்கபட்டிருக்கிறது.
http://www.timothylsmith.com/why-does-the-bible-say-that/
http://aliyosshmuel.com/thinkjewish.asp?AID=197

ரோமர் 11:33 ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

பிரியமானவர்களே... இதுவரை (1,2,3ம் பதிவுகளில்) சுமார் 30க்கும் மேற்ப்பட்ட அறிவியல் அதிசயத்தை நாம் ஆராய்ந்திருக்கிறோம். இன்று நாம் 8 அறிவியல் அதிசயங்களை வேதாகமத்தோடு படித்தோம். இன்னமும் பல ஆயிரங்கள் உண்டு. தேவனின் பலத்தோடு மிகவிரைவில் உங்கள் கண்முன் கொண்டு வருகிறேன். தேவனின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

I கொரிந்தியர் 2:13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்

ஆக்கம், தொகுப்பு, படைப்பு
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
www.facebook.com/TamilNaduChristianMinistries

No comments:

Post a Comment