Tuesday, November 11, 2014

ஏகோவா சாட்சி - எச்சரிக்கை

ஏகோவா சாட்சிகளை
குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்

இவர்கள் ஏகோவா மட்டும் தான் தெய்வம், இயேசு கிறிஸ்து ஓர் மனிதன், பரிசுத்த ஆவியானவரும் தெய்வம் இல்லை என்று கூவிவரும் இவர்கள் குறிபார்ப்பது கிறிஸ்தவர்களை மட்டும் தான். அதுவும் CSI , லுத்தரன், methodist சபைக்கு போகும் கிறிஸ்தவர்களை குறிபார்ப்பது தான் இவர்கள் வேலை. இவர்கள் கிராமபுரங்களில் அதிகமாக பெருகி வருகிறார்கள். குறிப்பாக கோவை மாவட்டம், ஊட்டி, கொடைகானல், மதுரை, சென்னை போன்ற பகுதிகளில் அதிகமாக வளர்ந்துவருகிறார்கள். நான் ஓர் CSI சபையில் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து விட்டு கடைசியாக ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருக்க சொன்னேன். ஆலயம் முடிந்ததும் பலர் என்னிடம் வந்து ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். பிறகு சபை ஆயரோடு அவர்களின் இல்லங்களுக்கு அன்றே சென்று அவர்களுக்கு விளக்கினோம்.

அன்றில் இருந்து இன்று வரை அவர்கள் ஏகோவா சாட்சிகளை வீட்டில் அனுமதிப்பதில்லை. நீங்கள் எப்படி? 1 யோவான் 4:1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

எப்படி சோதித்தறிவது? இங்கே தான் கிறிஸ்தவர்கள் தவறுகிறார்கள். எங்கே? வேதத்தை படிப்பதோடு மட்டுமல்ல... ஒருவர் கடவுளை பற்றி கூறும்போது அதை மனதில் எடுத்துகொள்ளும் முன்பாக வேதத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். சிலர் வேதவசங்களை சொல்லமலேயே செய்தியை முடித்துவிடுகிறார்கள். அல்லது ஆரம்பித்தில் ஒன்றை ஆரம்பித்து முடிவில் ஒன்றை சொல்லுவார்கள். சிலர் நம் உணர்வை தூண்டும் விதமாக மனதை பாதிக்கும் விஷயத்தை சொல்லி கவனத்தை ஈர்க்க பார்பார்கள். சிலர் சம்பந்தமில்லாத வேதவசனத்தை கோர்த்துவிடுவார்கள்.

இவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இவர்கள் யெஹோவா என்கிறார்கள், இஸ்லாமியர்கள் அல்லாஹ் என்கிறார்கள். ஏகோவா சாட்சிகள் இஸ்லாமியர்களின் குரானை நம்ப மறுப்பவர்கள். ஆனால் இவர்கள் புதிய ஏற்பாடு வேதாகமத்தின் பல வசனங்களை மாற்றி அதில் ஏகோவா என்ற பெயரை இணைத்து வேத புரட்டர்களாய் நம்மிடையே வளம் வருகின்றனர்.

நீங்கள் வேதவசனத்தை ஆராய அழைக்கிறேன். அதற்கு உங்கள் சபை போதகரை வேத ஆராய்ச்சி கூடங்களை உங்கள் இல்லத்திலோ, ஆலயத்திலோ நடத்த சொல்லுங்கள். அவரிடம் உங்கள் மனதில் ஏற்படும் சந்தேகங்களை கேளுங்கள். தெளிவடையுங்கள். இல்லையென்றால் இப்படிப்பட்ட கும்பல்களிடம் ஒரு வேலை நீங்கள் தப்பிக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகள் தப்பிபார்களா?

இவர்களின் நம்பிக்கைகளை பற்றி சில வரிகள்
1. திரியேக தேவத்துவத்தை அடியோடு மறுப்பவர்கள்
2. இயேசு கிறிஸ்துவை தெய்வமாக கொண்ட ஆலயங்கள் பிசாசின் ஆலயங்களை பார்ப்பவர்கள்
3. பிதாவினால் முதலாவதாக உண்டாக்கப்பட்டது மிகாவேல் தூதனாவான்.
4. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. மாறாக கூரான ஆயிதத்தால் குத்தி கொலைசெய்யப்பட்டார்.
5. இயேசு கிறிஸ்து மரித்துவிட்டார். அவர் உயிர்த்தெழவில்லை.
6. இவர்கள் சுமார் 144,000 ஏகோவா சாட்சிகள் மட்டுமே பரலோகம் செல்வார்கள் என்று நம்புகிறார்கள்.
7. மனிதன் ரட்சிக்கபடவெண்டிய அவசியம் இல்லை
8. இவர்களின் உபதேசத்தை உறுப்பினர்கள் யாரும் கேள்வி கேட்க முடியாது.
9. உலகத்தின் முடிவு ஐந்து தடவை நடக்கும்
10. மனிதன் ரத்தத்தை மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. சிறு குழந்தைகள் உட்பட. ((Strasbourg, Monday 2 March – Friday 13 March 1998) http://194.250.50.201/eng/E276INFO.148.html under “II.Reports adopted” )
11. ஒவ்வொரு வாராமும் சபை உறுப்பினர்கள் 10 மணி நேரமாவது இவர்களின் "watchtower" பத்திரிக்கையை கொடுக்க வேண்டும். யாரும் இதை மறுத்து பேச கூடாது.
12. யாராவது இவர்களின் நம்பிக்கையை விட்டு வெளியேறி விட்டால் அவர்கள் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.
13. மூன்றாவது முக்கியத்துவம் வாய்ந்த (tertiary) எந்த ஓர் காரியத்தையும் கற்க தடை செய்யப்பட்டுள்ளது.
14. ஏகோவா சாட்சிகள் யாரும் ராணுவத்தில் இருக்க கூடாது.
15. கழுத்தில் சிலுவை அணிய கூடாது
16. தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூற மறுப்பவர்கள்.

இப்படி எல்லா விதங்களிலேயும் கிறிஸ்தவத்தை விட்டு பிரிந்து நிற்கிறது. நமக்கு தெரிந்தபடி கிறிஸ்தவத்திற்கும் மற்ற மதங்களுக்கு உள்ள மிகப்பெரிய இடைவெளி இயேசு கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும்.
1. இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே நித்திய ஜீவன் உண்டு (ரோமர் 6:23தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்)
2. இயேசு கிறிஸ்து இல்லாமல் யாரும் பரலோகம் போக முடியாது. (மாற்கு 15:38)
3. இயேசு சிலுவையில் அறியப்பட்டது உண்மை - எபிரெயர் 10:10. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
4. ரோமர் 5:1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
5. எபேசியர் 2ம் அதிகாரம் ரட்சிப்பின் வழியை தெளிவாக விளக்குகிறது.

ஆனால் இதை மறுக்கும் ஏகோவா சாட்சிகள் ஓர் சாத்தானின் கருவியாகும்.. ரட்சிப்பு இல்லை என்றால் சிலுவை இல்லை, சிலுவை இல்லை என்றால் பரிசுத்த வேதாகமம் இல்லை. பரிசுத்த வேதாகமம் இல்லை என்றால் இயேசு கிறிஸ்து இல்லை. இயேசு கிறிஸ்துவை இல்லை என்றால் கிறிஸ்தவம் இல்லை.

இப்படி கிறிஸ்தவத்தில் ஆணிவேரை அசைத்து பார்க்க சாத்தான் பல மதங்களை உருவாக்கி கிறிஸ்தவர்களை வேட்டையாடி வருகிறான். இந்த மயக்கங்களுக்கு பலியான பல ஆயிரம் உயிர்கள் உண்டு. இவர்கள் பரிசுத்த வேதாகமத்தில் இருந்து கேள்வி எழுப்பி விடையை வேறு ஒரு மத புத்தகத்தோடு ஒப்பிட்டு பேசுவார்கள். இது கணக்கு புத்தகத்தையும், சமூக அறிவியல் புத்தகத்தை ஒப்பிட்டு ஏன் கணக்கு புத்தகத்தில் உள்ளது சமூக அறிவயலில் இல்லை? என்று கேட்க்கும் முட்டாள்களுக்கு ஒப்பாவர். கணக்கு புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு கணக்கு புத்தகத்தில் தான் விடை தேட வேண்டும். அதை போல பரிசுத்த வேதாகமத்தில் இருக்கும் கேள்விகளுக்கு பரிசுத்த வேதாகமத்தில் இருந்து தான் பதில் தேட வேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் உங்களிடம் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள். உங்களை தர்க்கம் பேச வைத்து உங்கள் வேத அறிவை தெரிந்து கொள்வார்கள். பிறகு உங்கள் அறிவிற்கேற்ப குழப்ப பார்பார்கள். வேதத்தை முழுவதும் புரிந்து கொள்ளாதவர்கள் இவர்கள் பேச்சில் மயங்கி விடுவர். 1 திமோத்தேயு 6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.

1 திமோத்தேயு 6:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

என்று வேதம் எச்சரிக்கிறது. ஜாக்கிரதையாய் இருங்கள். உங்கள் ஆலயங்களிலோ, போதனைகளிலோ வேதவசனம் சரியாய் கோர்க்கப்படவில்லை என்றால் அதை விட்டு விலகுங்கள். பரிசுத்த வேதாகமத்தில் சொல்லபட்டிருக்கிற எல்லாவற்றிக்கும் பதில் பரிசுத்த வேதாகமத்தில் உண்டு. உங்கள் சபை ஆயரை, போதகரை அணுகி விடை வேதத்தின் அடிப்படையில் விடை தேடுங்கள். அல்லது மிஷனரி ஸ்தாபனங்கள் மூலமாக நடக்கும் முகாமில் கலந்து கொள்ளுங்கள். (நண்பர் சுவிஷேச ஜெபக்குழு, விஸ்வவாணி, IMS , இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் (UESI TN ), Scripture Union , என்று பல நல்ல ஊழிய ஸ்தாபனங்கள் உண்டு. அணுகவும்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

No comments:

Post a Comment