Monday, November 24, 2014

பரிசுத்த வேதாகமத்தை கற்று தரும் தேவன்

வேதாகம ஆசிரியர் ஒருவர், தன்னுடைய கிழிந்துப்போன வேதாகமத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு, 'ஒவ்வொரு விசுவாசியும் வேதாகமத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு பத்து வருடங்களில் ஒவ்வொரு வேதாகமத்தையும் சேதப்படுத்த வேண்டும்' என்றார். நம்முடைய வேதாகமங்கள் படிப்படியாக தாமாகவே கிழிந்துப் போகும் அளவு நாம் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதே அவருடைய கருத்தாகும்.
.
பாவத்தினால் தன் மனதை சேதப்படுத்தியவன் சேதமடையாத புத்தம் புதிய வேதாகமத்தை வைத்திருப்பான். சேதமடைந்த கிழிந்த வேதாகமத்தை வைத்திருப்பவனது மனதோ, கர்த்தருக்குள் களிகூர்ந்து பாதுகாப்பாய் இருக்கும்.
.
ஆம், நாம் ஆர்வமாய் வேதத்தை வாசிக்கிறவர்களாக இருப்பவர்களானால் நாம் சேதமடைவதற்கு பதிலாக நமது வேதாகமம் சேதமடையும். நமது பாவத்தை உணர்த்தி, மனசாட்சியை கூர்மையாக்கி, நம்மை உணர்வுள்ளவர்களாக மாற்றும் உயிருள்ள வார்த்தைகளடங்கிய புத்தகம் நம் வேதாகமம் மட்டுமே!

No comments:

Post a Comment