Friday, June 15, 2012

சீர்திருத்தும் வேத வசனம்

ஜான் தன்னிடமிருந்த அந்த மெஷினோடு போராடி கொண்டிருந்தான். அவனுக்கு அதை எப்படி வேலை செய்ய வைக்க முடியும் என்று தெரியவில்லை. யாராவது வந்து உதவினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். எப்படித்தான் இதை வேலை செய்ய வைப்பதோ என்று அவன் போராடி கொண்டு இருந்தபோது, அவனது அண்ணன், 'ஏன் இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாய்? நம் அப்பா இந்த மெஷினை உருவாக்கினபோது, இதை எப்படி ஆபரேட் செய்ய வேண்டும் என்று ஒரு புத்தகத்தில் எழுதி இருந்தார் அல்லவா? அதை படித்தாயா?' என்று கேட்டான்.
.
ஜான் அதற்கு ஏன் இவன் இந்த மாதிரியான கஷ்டமான கேள்விகளை கேட்கிறான்? அந்த புத்தகத்தில் என்னுடைய பிரச்சனையை குறித்து எதுவும் எழுதப்படவில்லையே என்று நினைத்தவனாக 'ஏதோ கொஞ்சம் படித்தேன்' என்று கூறினான். அதற்கு அவனுடைய அண்ணன், 'இதை உருவாக்கினவருக்கு எப்படி என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். ஆகவே உட்கார்;நது சரியாக அதைப் படி, அப்போது உனக்கு புரியும்' என்று கூறினான்.

அதன்படி ஜான் அதை உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தபோது, அவனுக்கு த்ன பிரச்சனையின் காரியங்களை குறித்தும், தன் தகப்பன் அதை உருவாக்கினதன் நோக்கமும் புரிய ஆரம்பித்தது. அந்த மெஷினை நல்லபடியாக ஆரம்பித்து வேலை செய்ய வைத்தான்.

பிரியமானவர்களே, தேவனும் நம்மிடம் நம் வாழ்க்கையை சந்தோஷமாய் நடத்துவதற்கான வழிமுறைகளை வேதத்தில் எழுதி வைத்துள்ளார். ஆனால் நாமோ அவற்றை படிக்காமல், எப்படி நாம் நம் வாழ்வை நடத்த வேண்டும் என்பதை அறியாதவர்களாக, நாமே நம் வாழ்வை கையில் எடுத்து கொண்டு, எப்படி நடத்துவது என்று தெரியாமல் புரியாமல் தடுமாறி கொண்டிருக்கிறோம்

No comments:

Post a Comment