'பலவீனனும் தன்னை பலவான் என்று
சொல்வானாக' (யோவேல் 3:10)

அந்த வியாதியானால், பத்து வயதில் விளையாடக்கூடிய எந்த விளையாட்டையும் அவளால் விளையாட முடியாது போனது. பக்கத்து வீட்டு பிள்ளைகள் விளையாடும்போது அவளால் பார்க்கத்தான் முடிந்தது. அவர்களோடு அவளால் விளையாட முடியவில்லை. ஒரு வருடம் வரை அவள் பொறுத்து பார்த்தாள். தன்னையே நொந்து கொண்டு இருந்தாள்.
ஒரு வருடம் கழித்து, அவள் முடிவு செய்தாள். 'இந்த வியாதிகள் என்னை தடுத்து நிறுத்த முடியாது, நான் போய் விளையாடுவேன், நான் மற்றவர்களை போல இருப்பேன்' என்று உறுதி எடுத்து கொண்டு, விளையாட ஆரம்பித்தாள். அவள் இருந்த நாட்டின் மிகச்சிறந்த ஓட்டபந்தய வீராங்கனையாக மாறினாள்.
No comments:
Post a Comment