Tuesday, February 18, 2014

இயேசுவே ஆண்டவர் என்று நிருபித்த கடிதம்

பரவசமூட்டும் நற்செய்தி
இஸ்ரேல நாட்டில் யூதர்கள் அதிகமாக மதிப்பது அவர்களின் ரபியை தான். நமக்கு பிஷப்கள், போதகர்கள் இருப்பதை போல வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ரபியை இன்னமும் யூதர்கள் உயர்வாக வைத்துள்ளனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் காலத்தில் ரபி என்கிற வார்த்தை வழக்கத்தில் இருப்பதை நீங்கள் அறியலாம்.

சமீபத்தில் 108 வயதான தலைமை Rabbi Yitzhak Kaduri என்பவர் மறித்து போனார். ஆனால் இவரை பற்றின உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியது உள்ளது. இவர் பல தீர்க்கதரிசனங்கள் உரைத்து நிறைவேறி இருக்கின்றன. இவர் கடைசியாக மரிப்பதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் அவர்கள் விரைவில் மரிப்பார் என்றும் கூறி இருந்தார். அந்த சமயத்தில் ஏரியல் ஷரோன் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

அதனால் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறாது என்று பலரும் நினைத்தனர். ஆனால் அவ்வருடத்திலேயே ஷரோன் அவர்கள் சுகவீனமடைந்து சுயநினைவை இழந்தார்கள். இதன் பிறகு நபியின் தீர்க்கதரிசனம் உலகெங்கும் பரவியது. பல you tube காணொளிகள் மேடையேறின. ரபி சொன்னபடியே ஷரோன் அவர்கள் மறித்தும் போனார்கள்.

இது உலகையே உலுக்கியது.. சரி... இதற்கும் இயேசுவே ஆண்டவர் என்பதற்கும் என்ன சம்பந்தம்? இதோ தொடர்கிறேன்....

யூதர்கள் இயேசு மேசியா என்றும் மீண்டும் வருவார் என்றும் நம்பாதவர்கள். இயேசு தெய்வம் இல்லை என்பதில் ஆணித்தரமாக இருப்பவர்கள். ஆனால் இந்த ரபி அவர்கள் இறப்பதற்கு முன்னால் ஓர் சிறிய கடிதத்தில் சில வார்த்தைகளை எழுதினார்கள். அதில் தான் மேசியாவை சந்தித்ததாகவும், பேசினதாகவும் இருந்தது.

அந்த கடித்ததில் கூறப்பட்டிருந்த வார்த்தார்கள் இதோ உங்களுக்காக.. He will lift the people and prove that his word and law are valid.
This I have signed in the month of mercy,
Yitzhak Kaduri

The Hebrew sentence (translated above in bold) with the hidden name of the Messiah reads: Yarim Ha’Am Veyokhiakh Shedvaro Vetorato Omdim

இதில் எபிரேய வார்த்தான yesuva என்கிறா வார்த்தை பதிவாகி இருந்தது. மேசியா ஏசுதான் என்று இவர் எழுதி இருந்தது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தி இருந்தது.

மட்டும் அல்ல.. இவர் முக்கியமாக இன்னொன்றையும் கூறி இருக்கிறார். அது.. இயேசு மிக சீக்கிரம் வரப்போகிறார் என்பது தான். ஏரியல் ஷாரோன் மறைவுக்கு பின்னர் மிக விரைவில் இயேசுவின் வருகை இருக்கும் என கூறி இருக்கிறார்.

உலகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் இயேசுவின் வருகையை முன்னறிவிக்கின்றன.. சுவிசேஷம் பரவமுடியாத இடங்களில் தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அரபு தேசங்களில் இயேசுவின் அன்பு ஊற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இயேசுவை தரிசனங்களில் கண்டு கர்த்தரிடத்தில் திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாகி கொண்டுள்ளது. தொடர்ந்து ஜெபிப்போம். கர்த்தருக்காக வைராக்கியத்துடன் காத்திருப்போம்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

http://realityofchrist.me/2014/01/02/shocking-jesus-coming-after-ariel-sharons-death-prophecy-by-rabbi-yitzhak-kaduri/
http://www.youtube.com/watch?v=R3GJ94aGOeY
http://www.youtube.com/watch?v=B3fosCXsLrk

No comments:

Post a Comment