
.
இருப்பினும் தான் அனுப்பப்பட்டதன் நோக்கத்தை கண் முன் நிறுத்தி முன்னேறினார். பின் ஒரு இடத்தில் இறங்கி, படகை கரையில் கட்டிவிட்டு சென்றார். ஊழியம் செய்ய ஆரம்பித்தார். வருடங்கள் உருண்டோடின. ஊழியத்தின் பலனை காண முடியவில்லை. மக்களிடமுள்ள நிர்விசாரமும் மாறவில்லை.
.
ஒரு நாள் மிகவும் சோர்வுற்றவராக, அடர்ந்த காட்டிற்குள் சென்று கதறி அழுதார். 'ஆண்டவரே, நான் தியாகத்தோடுதானே இங்கு வந்தேன். ஜெபத்தில் போராடித்தானே ஆத்துமாக்களை சந்திக்கிறேன். ஏன் கனியை காண முடிவில்லை?' என கதறினார். கதறலுக்கு நடுவே ஒரு மெல்லிய சத்தத்தை உள்ளத்தில் உணர்ந்தார். 'மகனே, நீ தியாகத்தோடும், ஜெபத்தோடும்தான் ஊழியம் செய்கிறாய். ஆனால் உன் நம்பிக்கையை எங்கு வைத்திருக்கிறாய், உயிருக்கு ஆபத்து வந்தால் தப்பித்து விடலாம் என கரையில் கட்டியுள்ள படகின் மீதா, அல்லது என் மீதா?' என ஆண்டவர் கேட்டதை உணர்ந்தார் அந்த ஊழியர்.
.
உடன்தானே உள்ளத்தில் உணர்த்தப்பட்டவராக நேராக சென்று படகு கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்தெடுத்தார். அது தண்ணீரில் மிதந்து எங்கே சென்றது. அன்று முதல் ஆவியில் அனலடைந்தவராய் உற்சாகமாய் மக்களை சந்தித்தார். தேவன் ஆத்துமாக்களை கொள்ளைப் பொருளாய் அவருக்கு கொடுத்தார்.
.
எலியா தீர்க்கதரிசியின் மூலம் ஊழிய அழைப்பை பெற்ற எலிசா அதுவரை தன் வாழ்வின் ஆதாரத்திற்கு நம்பிக்கையாக இருந்த ஏர் மாடுகளை அடித்து, மாடுகளின் மேல் வைக்கப்படும் மரத்தினாலே ஜனஙக்ளுக்கு அதை சமைத்து கொடுத்து விட்டு, எலியாவின் பின் சென்றார். 'என்றோ ஒரு நாள் ஊழியத்தில் சோர்வு ஏற்படுமாயின் திரும்பி வந்து ஏர்மாடுகளை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஒருபோதும் தனக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அப்படி செய்தார்.
No comments:
Post a Comment