Tuesday, February 18, 2014

உபத்திரவத்தின் மூலம் பாடம்

ஒருதேவனோடு நெருங்கி வாழ்நத ஒரு வியாபாரி தன் வியாபாரம் செழித்தவுடன் தேவன் விட்டு விலகி தூரமாய் சென்று விட்டார். சபையிலுள்ள மூத்தவர்கள் அவரை மீண்டும் தேவனண்டை வரும்படி புத்தி சொன்னார்கள். ஆனால் அவரோ தன் வியாபாரத்திலே முனைப்பாக இருந்துவிட்டார்.
.
ஒரு நாள் வியாபாரியின் மூன்று பிள்ளைகளில் மூன்றாவது மகனை ஒரு விஷப்பாம்பு கடித்ததால் அவன் மரணத்தருவாய்க்கு வந்தான். மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்கள். இச்சூழ்நிலையில் இவர் மிகுந்த பாரத்தோடு சபை மூப்பர் ஒருவரை ஜெபிக்கும்படி அழைத்தார்.
.
வந்த மூப்பர் ஞானமுள்ள தேவ மனிதர், அவர் ஜெபிக்க தொடங்கி, 'தேவரீர் நீர் இந்த பிள்ளையை கடிக்கும்படி ஒரு பாம்பை அனுப்பினதற்காக நன்றி செலுத்துகிறேன். நாங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாய் இந்த குடும்பம் உம்மைத் தேடும்படி எடுத்துக் கொண்ட எந்த முயற்சியும் பலனளிகக்வில்லை. ஆனால் எங்களால் முடியாததை இந்த பாம்பு நொடிப்பொழுதில் செய்து முடித்து விட்டதே! இப்போதும் இவர்கள் தங்கள் பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள். இயேசுவின் நாமத்தில் தயவு கூர்ந்து இந்த பிள்ளையை சுகமாக்கும், இனியும் இவர்கள் உம்மை நினைவுகூர்வதற்கு எந்த ஒரு பாம்பும் வரும் நிலை ஏற்படாதிருக்க அருள் செய்யும்' என்று ஜெபித்து முடித்தார். சற்று நேரத்திற்குள் பிள்ளையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, தேவன் அற்புத சுகத்தை கொடுத்தார்

No comments:

Post a Comment