Wednesday, March 20, 2013

உண்மையான ஊழியன்

ரோட்டின் ஓரம் ஒரு குடையின் கீழ் செருபபு தைத்துக் கொண்டு போகிறவர்கள், வருகிறவர்களின் ஷுக்களை பாலிஷ் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தகப்பனது தொழிலை இளமையிலேயே கற்றுக் கொண்டது நல்லதாய் தோன்றியது. அவர் இறந்தபிறகு, அவனது தாயை கவனிக்க அது கைக்கொடுத்தது. அச்சிறுவன் காசுக்காக கடமையே என தன் வேலையை செய்யமாட்டான். யாரோ ஒருவர் பாலிஷ் போட தங்கள் காலணியை அவன் முன் நீட்டியதும் நிமிர்ந்து பார்த்து சிரித்த முகத்துடன், சிறப்பாய் நேர்த்தியாய் அதை செய்து முடிப்பான்.
.
எப்போதும் வழக்கமாய் வரும் ஒருவர் ஒரு நாள் அவனிடம், 'மிகவும் சிரத்தை

எடுத்து, கவனமாய் வேலை செய்கிறாயே, இதே வேலையை செய்யும்
மற்றவர்களிடம இல்லாத ஏதோ ஒன்று உன்னிடம் காணப்படுகிறதே அது
என்ன?' என்று கேட்டார். சிறுவன் மகிழ்ச்சியோடு, 'ஐயா நான் ஒரு
கிறிஸ்தவன். இயேசுகிறிஸ்துவின் குணநலன்களை என் வாழ்விலும்
செயல்படுத்த பிரயாசப்படுபவன், அதோடு ஒவ்வொருவருடைய
காலணிகளை நான் பழுதுபார்க்கும்போதும், இயேசுராஜா என்னிடம் வந்து
என் காலணிகளுக்கு பாலிஷ் போடு, என்று சொன்னால் நான் எப்படி செய்து
கொடுப்பேனோ அப்படித்தான் உங்கள் ஒவ்வொருவருக்கும் செய்கிறேன்'
என்று கூறினான். அந்த நபர் இவனது வார்த்தையின் மூலம் கிறிஸ்துவைக்
குறித்த அறிந்து வேதத்தை வாசித்து, கர்த்தரை தன் சொந்த இரட்சகராக
ஏற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment