Saturday, March 30, 2013

இதுவல்லவா இரக்கம் பாராட்டுதல்

மேற்கு மிக்சிகன் மாநிலத்தில் பதினைந்து வயது சிறுவன் ஒருவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டான். கீமொதெரப்பி என்னும் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு தாங்கொண்ணா வேதனை, ஏனெனில் அவன் தலையிலிருந்த முடியெல்லாம் கொட்டி விட்டது. நோயின் முடிவு என்னவாகும் என்று அறியாத நிலையில் கிட்டத்தட்ட வழுக்கை தலையோடு பள்ளிக்கு சென்றால் வெட்கமாயிருக்குமே என்று தயங்கினான். ஆனால் பள்ளிக்கு திரும்பிய முதல் நாளில் வியப்பு அவனுக்கு காத்திருந்தது. அவனுடைய வகுப்பில் பலர் மொட்டையடித்து வந்திருந்தனர். அவன் மீது அன்பு கொண்ட சிறுவர்கள் புதிய முறையில் தங்களது இரக்கத்தை காட்டினர். நண்பர்களின் இச்செயல் அச்சிறுவனுடைய வேதனையை குறைத்தது.
.
ஒரு வேதாகம மாநாட்டில் செய்தி கொடுக்க வந்த ஜேக் வைர்ட்ஜன் என்பவர் மிகவும் வித்தியாசமான சரீர பாதிப்புடைய ஒருவருடன் உணவருந்த சென்றார். அந்நபர் வாயில் வைக்கும் உணவை மெல்ல முடியாமல் கொஞ்ச கொஞ்சமாக கீழே விழுந்து கொண்டே இருக்கும். ஆகவே தன் கழுத்தில் செய்தி தாளை கட்டி வைத்து கொண்டு சாப்பிடுவார். ஆகவே யாரும் அவர் அருகில் அமர்ந்து சாப்பிட விரும்ப மாட்டார்கள். இவ்வாறு தனித்து விடப்பட்ட அவருடன் ஜேக் உணவருந்தி ஆறுதல் அளித்தார். இது ஒரு தனி நபர் மீது இரக்கம் காட்டும் ஒரு செயலாகும்.
.
எலியட் என்பவர் காலைதோறும் வேதத்தை தியானிக்கும் பழக்கமுடையவர். அந்நேரத்தில் குப்பையை அகற்றும் நபரை பார்க்க நேரிட்டால், தனது தியானத்தை நிறுத்தி விட்டு, வெளியே சென்று, இன்முகத்தோடு அவரை விசாரித்து, உற்சாகப்படுத்துவார். அந்த குப்பை அகற்றும் தொழிலாளிக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. இதுவும் இரக்கத்தின் விளைவுதானே! பால் என்பவர் ஹோட்டல் ஒனறிற்கு சென்றிருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த ஃபிரட்டி என்பவருக்கு நற்செய்தியை அறிவித்தார். அவர் விரைவிலேயே கிறிஸ்துவை ஏற்றுகொண்டார். சில காலம் கழித்து, ஃபிரட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டவராக ஒரு சிறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பால் அவரை நாள்தோறும் சென்று சந்திப்பார். அவரது தேவைகள் அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் மரணமடையப்போகும் இரவில் அவரருகே வேத வசனங்களை கூறிக்கொண்டே இருந்தார். இதுவல்லவா இரக்கம் பாராட்டுதல்!

No comments:

Post a Comment